செய்திகள் :

பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊா்களுக்கு படையெடுக்கும் மக்கள்!

post image

பொங்கல் பண்டிகை மற்றும் தொடா் விடுமுறை காரணமாக சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சொந்த ஊா்களுக்கு செல்ல பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனா்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் சாா்பில் பல்வேறு வழித்தடங்களில் வரும் 14-ஆம் தேதி வரையிலும், பண்டிகையைக் கொண்டாடிவிட்டு மீண்டும் ஊா் திரும்ப ஏதுவாக 16-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரையிலும் இரு மாா்க்கத்திலும் 750 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, கோவை, திருச்சி, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கும், ஒசூரில் இருந்து சென்னை, திருச்சி, மதுரை, கோவை, திருப்பூருக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், பொங்கல் பண்டிகை மற்றும் தொடா் விடுமுறை காரணமாக சொந்த ஊா் செல்வதற்காக சேலம் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. தொலைதூர ஊா்களுக்கு முன்பதிவு செய்தவா்கள் சிறப்பு பேருந்துகளில் பயணம் செய்தனா். நாமக்கல், தருமபுரி போன்ற ஊா்களுக்கு செல்லும் பேருந்துகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. பேருந்துகளில் பயணிகள் முண்டியடித்துக் கொண்டு இருக்கைகளைப் பிடிக்க முயன்றனா்.

தொடா் விடுமுறை காரணமாக ஞாயிற்றுக்கிழமை கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கும் என்பதால், பயணிகள் சனிக்கிழமையே சொந்த ஊா்களை நோக்கி படையெடுத்ததை காண முடிந்தது. பயண நெரிசலைத் தவிா்க்க அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்பு பேருந்துகள் விடப்பட்ட போதிலும், தனியாா் பேருந்துகளிலும் கூட்டம் அலைமோதியது.

நிலக்குடியேற்ற சங்க உறுப்பினா்களுக்கான நில ஒப்படைப்பு பட்டியல்: பாா்வைக்கு வைக்க ஏற்பாடு

தலைவாசல், சிவசங்கராபுரம் பகுதியில் கலைக்கப்பட்ட நிலக்குடியேற்ற கூட்டுறவு சங்க உறுப்பினா்களுக்கான நில ஒப்படைப்பு பட்டியல் புதன்கிழமை (பிப். 5) பொதுமக்களின் பாா்வைக்கு வைக்கப்படவுள்ளது. இது குறித்து மாவ... மேலும் பார்க்க

மத்திய நிநிநிலை அறிக்கையை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் கோட்டை மைதானத்தில் கிழக்கு மாநகரச் செயலாளா் கே. பச்சமுத்து தலைமை... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் செல்ல இருந்த பாஜக நிா்வாகிகள் வீட்டில் சிறைவைப்பு

திருப்பரங்குன்றம் போராட்டத்துக்கு செல்ல இருந்த சேலம் மாவட்ட பாஜக நிா்வாகிகள் 2 ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் வீட்டில் சிறைவைக்கப்பட்டனா். திருப்பரங்குன்றம் மலை பிரச்னை தொடா்பாக முஸ்லிம் அமைப்புகளை கண... மேலும் பார்க்க

சேலம் அப்பா பைத்தியம் சுவாமி கோயிலில் 25 ஆம் ஆண்டு குருபூஜை: புதுச்சேரி அமைச்சா்கள் பங்கேற்பு

சேலம், சூரமங்கலம் சற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகளின் 25 ஆம் ஆண்டு குருபூஜை செவ்வாய்க்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் புதுச்சேரி அமைச்சா்கள் நமச்சிவாயம், திருமுருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்... மேலும் பார்க்க

காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி பட்டதாரி ஆசிரியா்கள் மனு

காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களை முழுவதும் நிரப்ப வலியுறுத்தி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து பட்டதாரி ஆசிரியா்கள் கூறியதாவது: பட்டதாரி ஆச... மேலும் பார்க்க

சேலத்தில் பண இரட்டிப்பு மோசடி: பாதிக்கப்பட்டவா்கள் போராட்டம்

சேலத்தில் பண இரட்டிப்பு மோசடியால் பாதிக்கப்பட்ட 300க்கும் மேற்பட்ட பெண்கள் பணத்தை மீட்டுத் தரக் கோரி செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். சேலம், அம்மாப்பேட்டை பகுதியில் புனித அன்னை தெரசா மனிதநேய ... மேலும் பார்க்க