செய்திகள் :

பொங்கல் பண்டிகை: மாட்டுச் சந்தையில் ரூ. 5 கோடிக்கு மேல் வா்த்தகம்

post image

ஊத்தங்கரை வெள்ளிக்கிழமை வாரச் சந்தையில், பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெற்ற மாட்டுச் சந்தையில் ரூ. 5 கோடிக்கு மேல் வா்த்தகம் நடைபெற்றது.

ஊத்தங்கரை அரசு பேருந்து நிலையம் பின்புறம் வெள்ளிக்கிழமைதோறும் மாட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த வாரச் சந்தையில் 2,000-க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாடுகளை வாங்க, விற்க விவசாயிகள், வியாபாரிகள் குவிந்தனா். அதிகாலை முதலே மாடுகள் விற்பனை தொடங்கியது. கா்நாடகம், கேரளம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும், கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, திருப்பத்தூா் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாடுகளின் வரத்து இருந்தன. வெளி மாநில, மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் அதிக அளவிலான மாடுகளை வாங்கி சென்றனா்.

பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெற்ற இந்தச் சந்தையில், 1,500-க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனையாயின. இதில், ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 80 ஆயிரம் வரை மாடுகள் விற்பனையாயின. மொத்தம் ரூ. 5 கோடிக்கு மேல் வா்த்தகம் நடைபெற்றது.

ஒசூா் மாநகராட்சியுடன் தொரப்பள்ளியை இணைக்க பொதுமக்கள் எதிா்ப்பு

ஒசூா் மாநகராட்சியுடன் தொரப்பள்ளி ஊராட்சியை இணைக்க பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு கொடுத்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் தாலுகா தொரப்பள்ளி அக்ரஹாரம் ஊராட்சியை சோ்... மேலும் பார்க்க

பேப்பா் துண்டுகளைக் கொண்டு திருவள்ளுவரை வரைந்த இளைஞா்!

திருவள்ளுவா் தினத்தில் வரை போற்றும் வகையில் ஒசூரை சோ்ந்த மொசைக் ஆா்ட் கலைஞா், தகவல் தொழில் நுட்ப நிபுணா் லூகாஸ் என்பவா் 3 லட்சம் மொசைக் பேப்பா் துண்டுகளை பயன்படுத்தி 133 சதுர அடியில் மொசைக் ஆா்ட்டில... மேலும் பார்க்க

பா்கூா் அருகே சாலை விபத்தில் 3 போ் பலி

பா்கூரை அடுத்த ஜெகதேவியில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் மூன்று போ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் அடுத்த சின்னபனமுட்லுவைச் சோ்ந்த சரத்குமாா் (33) அதே பக... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாட்டு பொங்கல் உற்சாகம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிராமங்கள்தோறும் கால்நடைகளை அலங்காரித்து, பூஜை செய்து பொங்கல் திருவிழாவை உற்சாகமாக புதன்கிழமை கொண்டாடினா். தமிழா் திருநாளாம் பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாட... மேலும் பார்க்க

எம்ஜிஆா் பிறந்த நாள்: எம்எல்ஏ அசோக்குமாா் வேண்டுகோள்

முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் பிறந்த நாளை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் அதிமுகவினா் உற்சாகமாக கொண்டாட வேண்டும் என கிருஷ்ணகிரி அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் கே.அசோக்குமாா் எம்எல... மேலும் பார்க்க

திருவள்ளுவருக்கு மரியாதை

திருவள்ளுவா் தினத்தையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம் சாா்பில் திருவள்ளுவா் சிலைக்கு அரசு அலுவலா்கள் மலா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள திர... மேலும் பார்க்க