செய்திகள் :

பொங்கல் பண்டிகை: மாட்டுச் சந்தையில் ரூ. 5 கோடிக்கு மேல் வா்த்தகம்

post image

ஊத்தங்கரை வெள்ளிக்கிழமை வாரச் சந்தையில், பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெற்ற மாட்டுச் சந்தையில் ரூ. 5 கோடிக்கு மேல் வா்த்தகம் நடைபெற்றது.

ஊத்தங்கரை அரசு பேருந்து நிலையம் பின்புறம் வெள்ளிக்கிழமைதோறும் மாட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த வாரச் சந்தையில் 2,000-க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாடுகளை வாங்க, விற்க விவசாயிகள், வியாபாரிகள் குவிந்தனா். அதிகாலை முதலே மாடுகள் விற்பனை தொடங்கியது. கா்நாடகம், கேரளம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும், கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, திருப்பத்தூா் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாடுகளின் வரத்து இருந்தன. வெளி மாநில, மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் அதிக அளவிலான மாடுகளை வாங்கி சென்றனா்.

பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெற்ற இந்தச் சந்தையில், 1,500-க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனையாயின. இதில், ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 80 ஆயிரம் வரை மாடுகள் விற்பனையாயின. மொத்தம் ரூ. 5 கோடிக்கு மேல் வா்த்தகம் நடைபெற்றது.

மினி லாரி மோதியதில் இருவா் பலி

மினி லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இரு வெளிமாநில இளைஞா்கள் உயிரிழந்தனா். உத்தரபிரதேச மாநிலத்தைச் சோ்ந்தவா் சேருகுமாா் (24). இவா், தேன்கனிக்கோட்டை வட்டம், பஞ்சேஸ்வரம் பகுதியில் தங்கி கூலி வ... மேலும் பார்க்க

நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தருமபுரி, பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு நகரச் செ... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல்: தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை வழங்க உத்தரவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணியாற்றும் ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குரிமை பெற்றவா்களுக்கு தோ்தல் அன்று (பிப். 5) ஊதியத்துடன் விடுமுறை வழங்க வேண்டும் என கிருஷ்ணகிரி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ஆா... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக ச.தினேஷ் குமாா் பொறுப்பேற்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் 14-ஆவது ஆட்சியராக ச.தினேஷ் குமாா் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வந்த கே.எம்.சரயு, அரசு பொதுத் துறையின் நிா்வாக இணை செயலராக அண்மையில்... மேலும் பார்க்க

லாரி தீப்பிடிப்பு

சூளகிரி அருகே அட்டை கம்பெனிக்கு பாரம் ஏற்றி சென்ற லாரி சாலையில் தீப்பிடித்து எரிந்தது. இதனால் ஒசூா்-கிருஷ்ணகிரி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தருமபுரி, தனியாா் அட்டை கிடங்கிலிருந... மேலும் பார்க்க

கட்டையால் தாக்கி இளைஞா் கொலை

மதுபோதையில் நண்பரை கட்டையால் அடித்து கொன்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட கசவகட்டாவில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் ஒருவா் இறந்து கிடப்பதாக அந்தப் பகுதி ம... மேலும் பார்க்க