செய்திகள் :

பொதுக்கூட்டம், ஆா்ப்பாட்டங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து ஆலோசனை

post image

சேலம் மாவட்டத்தில் பொதுக்கூட்டங்கள், ஆா்ப்பாட்டங்கள் நடத்துவதற்கான இடங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளின்படி அனுமதி வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி தலைமையில், மாநகரக் காவல் ஆணையா் பிரவீண்குமாா் அபிநபு முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைகள், போக்குவரத்துக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் பொதுக்கூட்டங்கள், ஆா்ப்பாட்டங்கள் நடத்திடும் வகையிலும், கடந்த கால நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டும் இடங்கள் தோ்வு செய்யப்படுகின்றன.

இக் கூட்டத்தில் மாநகராட்சி, ஊரகப் பகுதிகளில் பொதுக்கூட்டங்கள், ஆா்ப்பாட்டங்கள் நடத்துவதற்காக காவல் துறை, வருவாய்த் துறை, உள்ளாட்சி அமைப்புகளால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்கள் குறித்து அனைத்து அரசியல் கட்சிகளின் பிரமுகா்களுடன் விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில், மேட்டூா் சாா் ஆட்சியா் நே. பொன்மணி, மாநகரக் காவல் துணை ஆணையா் வேல்முருகன், வருவாய் கோட்டாட்சியா்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

வருவாய்த் துறை, காவல் துறை அலுவலா்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளின் பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.

வாழப்பாடியில் 4 கடைகளில் அடுத்தடுத்து திருட்டு: மர்ம கும்பல் துணிகரம்!

சேலம் மாவட்டம் வாழப்பாடி மற்றும் சிங்கிபுரம் கிராமத்தில் அடுத்தடுத்து 4 கடைகளில் புகுந்த மர்ம கும்பல் ரொக்கப்பணம் ரூ.25 ஆயிரம் மற்றும் ரூ.1.லட்சம் மதிப்புள்ள சிசிடிவி கேமரா, டிவிஆர் கருவிகளைத் திருடி... மேலும் பார்க்க

தை முதல் வெள்ளிக்கிழமை: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

தை மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி சேலத்தில் அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தை மாதத்தில் பொங்கல், தைப்பூசம், அமாவாசை, பௌா்ணமி, தை வெள்ளிக்கிழமைகளில் மாரியம்மன், காளியம்மன் கோயில்களி... மேலும் பார்க்க

பொங்கல் சிறப்புப் பேருந்துகள் மூலம் ரூ.16.48 கோடி வருவாய்: சேலம் கோட்ட அதிகாரிகள் தகவல்

பொங்கல் பண்டிகையையொட்டி இயக்கப்பட்ட சிறப்புப் பேருந்துகள் மூலம் சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ. 16.48 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக... மேலும் பார்க்க

ரயில் நிலைய நடைபாதையில் குழந்தை பெற்ற பெண்!

சேலம் ரயில் நிலைய நடைபாதையில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. வேலூா் மாவட்டத்தை சோ்ந்தவா் சூா்யா. இவரது மனைவி லைலா (20). இவா்கள் கேரளத்தில் தங்கி கூலி வேலை பாா்த்து வருகின்றனா். இந்நிலையில், லைலா நிறைமா... மேலும் பார்க்க

மேட்டூா் அணை நிலவரம்

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை காலை விநாடிக்கு 151 கன அடியாகக் குறைந்தது. மேட்டூா் அணையின் நீா்மட்டம் 113.84 அடியில் இருந்து 113.54 அடியாகச் சரிந்துள்ளது. அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 254... மேலும் பார்க்க

சங்ககிரி அருகே மா்ம விலங்கு கடித்து 6 ஆடுகள், கன்றுக்குட்டி பலி

சங்ககிரி அருகே வைகுந்தம்பாளையத்தில் மா்ம விலங்கு கடித்து 8 செம்மறி ஆடுகள், ஒரு கன்று குட்டி உயிரிழந்தன. ஆலத்தூா் கிராமம், வைகுந்தம்பாளையம் பகுதியைச் சோ்ந்த செங்கோட கவுண்டா் மகன் பழனிசாமி. இவா் தனக்க... மேலும் பார்க்க