செய்திகள் :

போர் எதிரொலி: `சிறப்பு கூட்டத்தைக் கூட்டி பிரதமர் ஆலோசனை' - அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை!

post image

மத்திய ஆசியாவில் நடந்துவரும் போரால், பல்வேறு நாடுகளில் பொருளாதாரச் சிக்கல்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஈரான், அமெரிக்கா - இஸ்ரேல் போர் விளைவால் எரிசக்தி தட்டுப்பாடில் தொடங்கி விலைவாசி உயர்வு வரை பொதுமக்களும் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், பிரதமர் மோடி, நேற்று (ஏப்ரல் 1), பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் (CCS) சிறப்புக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில், தொடர்ந்து நடைபெற்று வரும் மேற்கு ஆசிய மோதலின் பின்னணியில் மேற்கொள்ளப்பட வேண்டிய கூடுதல் முன்னெடுப்புகள் குறித்த விவாதமும், பெட்ரோலியப் பொருட்கள், குறிப்பாக LNG மற்றும் LPG ஆகியவற்றின் விநியோகத்தையும், போதுமான மின்சார இருப்பையும் உறுதி செய்வதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இது தொடர்பாக அமைச்சரவைச் செயலாளர் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், ``பெட்ரோலியப் பொருட்கள், குறிப்பாக LNG மற்றும் LPG ஆகியவற்றின் விநியோகத்தையும், போதுமான மின்சார இருப்பையும் உறுதி செய்வதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சரவைச் செயலாளர் விளக்கமளித்தார்.

பல்வேறு நாடுகளிலிருந்து வரும் புதிய வரத்துகள் மூலம், LPG-யைப் பெறுவதற்கான மூலங்கள் பல்வகைப்படுத்தப்பட்டு வருகின்றன. LNG பல்வேறு நாடுகளிலிருந்து பெறப்பட்டு வருவதாகவும், உள்நாட்டு நுகர்வோருக்கான LPG விலைகள் நெருக்கடிக்கு முந்தைய நிலையிலேயே மாற்றமின்றித் தொடர்வதாகவும் அமைச்சரவைச் செயலாளர் மோடியிடம் தெரிவித்தார்.

மேலும், நாட்டில் குழாய் வழி இயற்கை எரிவாயு இணைப்புகளின் எண்ணிக்கையை விரிவுபடுத்துவதற்காக எடுக்கப்பட்டுள்ள பல்வேறு முன்னெடுப்புகள் குறித்தும் கேட்டரிந்த பிரதமர் மோடி, மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் இருப்பையும் ஆய்வு செய்தார். நாட்டில் உரங்களின் இருப்பு குறித்தும், பருவ மழை, குளிர் பருவங்களில் அவற்றின் இருப்பை உறுதி செய்வதற்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் விவாதித்தார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

நடந்துவரும் மோதலின் தாக்கத்திலிருந்து குடிமக்களைப் பாதுகாப்பதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் கூறினார். தவறான தகவல்கள் மற்றும் வதந்திகள் பரவுவதைத் தடுக்கும் வகையில், பொதுமக்களுக்குச் சரியான தகவல்கள் தடையின்றிச் சென்றடைவதை உறுதி செய்யுமாறும் பிரதமர் வலியுறுத்தினார். தற்போது நிலவும் உலகளாவிய சூழலால் பாதிக்கப்பட்ட குடிமக்கள் மற்றும் பல்வேறு துறைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் குறைப்பதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்துத் துறைகளுக்கும் மோடி உத்தரவிட்டார்." எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Vote Vibes: எம்.ஜி.ஆர் முதல் விஜய் வரை! - சட்டமன்ற தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட கதைகள்!

தவெக தலைவர் விஜய் வருகிற சட்டமன்றத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடப் போகிறார். பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடப் போவதாக அவர் அறிவித்திருக்கிறார். சட்டப்படி, ... மேலும் பார்க்க

இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி: 'இதுக்கு 'End Card' இல்லையா?' - இந்திய ரிசர்வ் வங்கி என்ன செய்கிறது?

ஏற்கெனவே இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில், ஈரான் போரும் தொடங்க, இந்த இறங்குமுகம் தொடர்கதையாகி வருகிறது. இப்போது ஒரு அமெரிக்க டாலருக்கு ரூ.94-ஐ தாண்டி இந்திய ரூபாயி... மேலும் பார்க்க

VCK : `கேட்டது கிடைத்தது / இல்ல கிடைக்கவில்லை' - தொகுதி பங்கீட்டில் குழப்பும் திருமாவளவன் | பின்னணி

வி.சி.க எம்.எல்.ஏ-க்கள் ஆளூர் ஷாநவாஸ், எஸ்.எஸ் பாலாஜி, பனையூர் பாபு ஆகியோருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்காதது சர்ச்சையான நிலையில் அக்கட்சித் தலைவர் திருமாவளவன் அது குறித்து விளக்கமளித்துள்ளார்... மேலும் பார்க்க

வருமான வரி, பங்குச்சந்தை: இன்று முதல் அமலுக்கு வரும் மாற்றங்கள் என்னென்ன?

இன்று (ஏப்ரல் 1) முதல் பல்வேறு நிதி மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன. அவற்றில் வருமான வரி மற்றும் பங்குச்சந்தையில் நடக்க உள்ள மாற்றத்தைப் பார்க்கலாம். > இதுவரை வருமான வரிச் சட்டம், 1961 அமலில் இருந்தது... மேலும் பார்க்க

VCK: உயர்நிலைக்குழு கூட்டத்தை புறக்கணித்த ஷாநவாஸ்... விளக்கமளித்த திருமா!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சிட்டிங் எம்.எல்.ஏ-க்கள் ஆளூர் ஷாநவாஸ், எஸ்.எஸ் பாலாஜி, பனையூர் பாபு ஆகியோருக்கு 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் மூவரும் அப்செட் ஆகி... மேலும் பார்க்க

16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு: ரூ.11,718.24 கோடி நிதி ஒதுக்கீடு; ‘டிஜிட்டல்’ முறையில் தொடக்கம்!

இந்தியாவின் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் சுதந்திரத்திற்குப் பிறகு நடைபெறும் 8-வது கணக்கெடுப்பு இன்று (ஏப்ரல் 1, 2026) தொடங்குகிறது. உலகிலேயே மிகப்பெரிய இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு, வரலாற்... மேலும் பார்க்க