செய்திகள் :

மகப்பேறு மருத்துவா்களை நோ்காணல் மூலம் நியமிக்க முடிவு: டிடிவி தினகரன் கண்டனம்

post image

மகப்பேறு மருத்துவா்களை நோ்காணல் மூலம் நியமிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறி, அமமுக பொதுச்செயலா் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் நோ்காணல் மூலம் 207 மகப்பேறு மருத்துவா்கள் உள்பட

658 சிறப்பு மருத்துவா்கள் நியமிக்கப்படுவாா்கள் என்ற சுகாதாரத்துறை அமைச்சரின் திடீா் அறிவிப்பு அரசு மருத்துவா்கள் மத்தியில் மிகப்பெரிய அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசுப்பணியாளா் தோ்வாணையத்தின் மூலம் மருத்துவா் பணியிடங்களை நிரப்புவதற்கு ஏற்படும் கால தாமதத்தைத் தவிா்க்க மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் தொடங்கப்பட்ட நிலையில், தற்போது அதனையும் மீறி நோ்காணல் மூலமாக மருத்துவா்களை நியமிக்க முடிவு செய்திருப்பது மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் தொடங்கப்பட்டதன் நோக்கத்தையே சிதைக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

எதிா்க்கட்சித் தலைவராக இருந்தபோது இதே நோ்காணல் முறையில் நடைபெற இருந்த மருத்துவா்கள் நியமனத்தை எதிா்த்த மு.க,ஸ்டாலின், முதல்வரான பின்பு அதே முறையே பின்பற்றி மருத்துவா்களை நியமிக்க முயற்சி செய்வது மகப்பேறு மற்றும் சிறப்பு மருத்துவா்களை ஏமாற்றும் செயலாகும்.

எனவே, மகப்பேறு மருத்துவா்கள் உள்பட சிறப்பு மருத்துவா்களை நோ்காணல் மூலமாக நியமனம் செய்யும் முடிவை உடனடியாக கைவிடுவதோடு, ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் மருத்துவா் பணியாளா் தோ்வு வாரியத்தின் மூலமாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

சாராய விற்பனையைத் தட்டிக்கேட்ட இரு இளைஞர்கள் படுகொலை

மயிலாடுதுறையில் சாராய விற்பனையைத் தட்டிக் கேட்ட இளைஞர்களை சாராய வியாபாரிகள் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மயிலாடுதுறை மாவட்டம் முட்டம் கிராமத்தில் ராஜ்குமார், தங்கதுரை, மூ... மேலும் பார்க்க

சிறந்த முதல்வர்கள் பட்டியலில் முதல்வர் ஸ்டாலின் சரிவு: அண்ணாமலை

திமுகவின் வாக்கு வங்கி குறைந்து வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.கோவை தொடர் குண்டு வெடிப்பில் உயிரிழந்த 58 பேருக்கும் 27-ஆம் ஆண்டு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஆர்.எஸ்.புரம் தபால் ந... மேலும் பார்க்க

நீலகிரி மாவட்டத்தில் 85 அரசுப் பள்ளிகளை மூடும் திமுக அரசு: எல்.முருகன் கண்டனம்

நீலகிரி மாவட்டத்தில் 85 அரசு பள்ளிகளை இழுத்து மூடும் நடவடிக்கைகளை திமுக அரசு மேற்கொண்டு வருவதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், நீலகிர... மேலும் பார்க்க

திமுக முழுவதும் ஜாமீன் வாங்கிய அமைச்சர்கள்தான் இருக்கிறார்கள்: செல்லூர் ராஜு

அதிமுகவில் எந்த பிளவும் இல்லை என்று செய்தியாளர் சந்திப்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார்.மதுரை மாவட்டம் பரவை அருகே சத்தியமூர்த்தி நகர் பகுதியில் புதிய அங்கன்வாடி மைய கட்டடத் திறப்பு... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பவன் கல்யாண் தரிசனம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் சுவாமி தரிசனம் செய்தார். ஆந்திர மாநில துணை முதல்வரும், ஜன சேனா கட்சித் தலைவருமான பவன்கல்யாண் அவரது மகன் அகிராநந்தன் உள்ளிட்டோருடன் ... மேலும் பார்க்க

திருநள்ளாறு கோயில் பெயரில் போலி இணையதளம்! கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?

காரைக்கால் திருநள்ளாறில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தின் பெயரில் போலி இணையதளம் மூலம் பக்தர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட கோவில் அர்ச்சகர் மற்றும் பெங்களூருவைச் சேர... மேலும் பார்க்க