செய்திகள் :

மகாராஷ்டிரா: நாட்டிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி; அஜித்பவார் மனைவி தேசிய சாதனை!

post image

கடந்த பிப்ரவரி இறுதியில் மகாராஷ்டிரா மாநிலம் பாராமதியில் நடந்த விமான விபத்தில் துணை முதல்வராக இருந்த அஜித்பவார் அகால மரணம் அடைந்தார்.

அவரது மரணத்தைத் தொடர்ந்து அவரது மனைவி சுனேத்ரா பவார் மகாராஷ்டிரா துணை முதல்வராகப் பதவியேற்று இருக்கிறார். அதோடு அஜித்பவார் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாராமதி சட்டமன்றத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் சுனேத்ரா பவார் போட்டியிட்டார்.

இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டதில் சுனேத்ரா பவார் 1,18.034 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவர் மொத்தம் 1,18,969 வாக்குகள் பெற்று இருந்தார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பாக வேட்பாளரை நிறுத்தவில்லை.

ராஷ்ட்ரீய சமாஜ் கட்சி வேட்பாளர் குடுகடே 935 வாக்குகள் பெற்று இருந்தார். இது தவிர நோட்டாவிற்கு 774 வாக்குகள் கிடைத்தது. இதற்கு முன்பு பாராமதி தொகுதியில் அஜித்பவார் மற்றும் சரத்பவார் போட்டியிட்டு வெற்றி பெற்று இருந்தனர்.

சுனேத்ரா பவார்
சுனேத்ரா பவார்

அவர்கள் வெற்றி பெற்ற வாக்கு எண்ணிக்கை சதவீதத்தை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் சுனேத்ரா பவார் வெற்றி பெற்று இருக்கிறார். 2019ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் அஜித்பவார் 1.65 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் கோபிசந்த் பதல்கரை வீழ்த்தினார்.

அது அப்போது மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பெற்ற அதிகபட்ச வாக்கு வித்தியாச வெற்றியாகக் கருதப்பட்டது. அதே சமயம் 1990ம் ஆண்டு தேர்தலில் பாராமதியில் சரத் பவார் 75% வாக்குகள் பெற்றார். ஆனால் தற்போது சுனேத்ரா பவார் பெற்றுள்ள வெற்றி நாட்டிலேயே அதிகபட்ச வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற பெயரைப் பெற்றுக்கொடுத்துள்ளது.

1962ம் ஆண்டு தவிர, பவார் குடும்பம் பாராமதியில் நடந்த அனைத்து சட்டமன்றத் தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

சரத் ​​பவார் 1967 முதல் 1990 வரை அத்தொகுதியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அதைத் தொடர்ந்து அவரது சகோதரர் மகன் அஜித் பவார் 1995 முதல் அத்தொகுதியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

தொடர்ந்து ஏழு முறை வெற்றி பெற்றாலும், சரத்பவார் பெற்ற 75% வாக்கை அஜித்பவார் ஒரு முறைகூட பெறவில்லை. ஆனால் இந்த இடைத்தேர்தலில் சுனேத்ரா 98% வாக்குகளைப் பெற்று, பவாரின் நீண்ட கால சாதனையை முறியடித்தார்.

தவெக: ஆளுநருக்கு எதிராகவும், பாஜக-வுக்கு எதிராகவும் போராட்டம்! - தமிழ்நாடு காங்கிரஸ் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கத் தேவையான 118 தொகுதிகளில் தவெக வெற்றிபெறவில்லை. அதனால் தவெக தனித்து ஆட்சி அமைக்க முடியவில்லை. இதனால், காங்கிரஸ் தன் முழு ஆதரவையும் தெரிவித்திருக்கிறது. இதற்கிடையில் தவெக தலை... மேலும் பார்க்க

தவெக: `ஆதரவு கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் சிக்கல்தான்' - அதிமுக-வில் என்னதான் நடக்கிறது?

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்றுள்ளது. விஜய் ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியிருக்கிறார். ஆனால் அவர் தனிப்பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் 6 பேர... மேலும் பார்க்க

TVK: "NDA கூட்டணிக் கட்சிகளுக்கு கடிதம் அனுப்பும் எண்ணம் இல்லை" - சி.டி.ஆர். நிர்மல் குமார்

திமுக, அதிமுகவை விட, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும், ஆட்சி அமைக்கப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. நேற்றைய தினம், தவெகவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக காங்கிரஸ் அறிவித... மேலும் பார்க்க

`அஞ்சும் தவெக; அந்தக் கொள்கை உறுதியும் துணிவும் இருக்கிறதா விஜய்யிடம்?' - ஆளூர் ஷாநவாஸ்

108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், ஆட்சி அமைப்பதில் `உதவிக் கரம்' தேவைப்படுகிறது விஜய்-ன் தமிழக வெற்றிக் கழகத்துக்கு. திமுக கூட்டணியில் தொடர்ந்து வந்த காங்கிரஸ், அங்கிருந்து விலக... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி: ஜாம்பவான்களைக் காலி செய்த தவெக 'வழக்கறிஞர்' - நெகிழ்ச்சியில் குடும்பத்தினர்!

முன்னாள் எம்.பி செல்லக்குமார், சிட்டிங் அமைச்சர் அசோக்குமார் என இரண்டு 'வெயிட்டான' புள்ளிகளை எதிர்த்து, முதல் தேர்தலிலேயே கிருஷ்ணகிரி கோட்டையைத் தட்டித் தூக்கியிருக்கிறார் இந்த வழக்கறிஞர்.​யார் இந்த ம... மேலும் பார்க்க

`ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லை' - விஜய் உடனான சந்திப்பு குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம்!

ஆட்சியமைக்க பெரும்பான்மை ஆதரவு தேவை என ஆளுநர் வலியுறுத்தியதாக, தகவல் வெளியாகியிருக்கிறது.தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தன... மேலும் பார்க்க