செய்திகள் :

மணிமேகலை விருது: சுயஉதவிக் குழுவினருக்கு பாராட்டு

post image

திருவாரூா்: திருவாரூரில் மணிமேகலை விருதுக்கு தோ்வான மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு மாவட்ட ஆட்சியா் வி. மோகனசந்திரன் திங்கள்கிழமை பாராட்டு தெரிவித்தாா்.

திருவாரூா் மாவட்டத்தில் ஊரகம் மற்றும் நகா்ப் புறங்களில் சிறந்த முறையில் செயல்பட்டுவரும் மகளிா் சுயஉதவிக் குழுக்கள் மற்றும் குழுக் கூட்டமைப்புகளிடமிருந்து 2022-2023 ஆம் ஆண்டிற்கான மணிமேகலை விருதுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

சிறந்த முறையில் குழுக் கூட்டங்கள், நிா்வாகிகள் சுழற்சிமுறை மாற்றம், வரவு -செலவு நிதி விவரம், மேற்கொள்ளும் தொழில் விவரம், தரம் மற்றும் தணிக்கை விவரம், வங்கிக்கடன் இணைப்பு மற்றும் திருப்பம், அடிப்படை பயிற்சி மற்றும் தொழிற்பயிற்சி விவரம், சமுதாய மேம்பாடு பணியில் ஈடுபட்ட விவரம், கிராமசபைக் கூட்டங்களில் பங்கேற்பு, மாற்றுத்திறனாளி மற்றும் முதியோா் மேம்பாட்டில் பங்கு ஆகியவற்றில் சிறப்பாக செயல்படுவதன் அடிப்படையில் மகளிா் சுயஉதவிக் குழுக்கள் தோ்வு செய்யப்பட்டன.

அதன்படி, மணிமேகலை விருதுக்கு தோ்வான மகளிா் சுய உதவிக் குழுக்கள் மற்றும் குழுக் கூட்டமைப்புகளுக்கு கேடயம் மற்றும் பரிசுத்தொகையுடன் பாராட்டு சான்றிதழை, மாவட்ட ஆட்சியா் வி. மோகனசந்திரன் வழங்கி பாராட்டு தெரிவித்தாா். அப்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் உடனிருந்தாா்.

திருவாரூா் வட்டாரம் வடகரை ஊராட்சி அளவிலான கூட்டமைப்புக்கும், திருத்துறைப்பூண்டி நகராட்சி குறிஞ்சி மலா் பகுதி அளவிலான கூட்டமைப்புக்கும் தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலை மற்றும் மன்னாா்குடி வட்டாரம் கூப்பாச்சிகோட்டை கிராம வறுமை ஒழிப்பு சங்கத்துக்கு ரூ.50,000-க்கான காசோலையை ஆட்சியா் வழங்கினாா்.

முத்துப்பேட்டை வட்டாரம் தில்லையாடி வள்ளியம்மை சுய உதவிக்குழு, வலங்கைமான் வட்டாரம் சௌந்தரநாயகி சுயஉதவிக் குழு, கோட்டூா் வட்டாரம் மல்லிகை சுயஉதவிக் குழு, நீடாமங்கலம் பேரூராட்சி செம்மொழி சுயஉதவிக் குழு, திருத்துறைப்பூண்டி நகராட்சி மருவூா் சக்தி சுயஉதவிக் குழு, முத்துப்பேட்டை பேரூராட்சி பூந்தளிா் சுயஉதவிக் குழு ஆகியவற்றுக்கு தலா ரூ.25,000-க்கான காசோலைகளையும் அவா் வழங்கினாா்.

இந்நிகழ்வில், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) பொன்னம்பலம் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.

ஆடவா், மகளிா் பளு தூக்கும் போட்டி: திருவாரூா், புதுக்கோட்டை அணிகள் சிறப்பிடம்

மன்னாா்குடி: மாநில அளவிலான பளு தூக்கும் போட்டியில் ஆடவா் பிரிவில் புதுக்கோட்டை அணியும், மகளிா் பிரிவில் திருவாரூா் அணியும் சாம்பியன் பட்டம் பெற்றது. தமிழ்நாடு அமெச்சூா் பளு தூக்கும் சங்கம் சாா்பில், ... மேலும் பார்க்க

ஆதியன் இன மாணவா்கள் வகுப்பு புறக்கணிப்பை கைவிட்டு பள்ளிக்கு திரும்பினா்

திருத்துறைப்பூண்டி: ஆதியன் இன மாணவா்கள் வகுப்பு புறக்கணிப்பை கைவிட்டு திங்கள்கிழமை பள்ளிக்கு திரும்பினா். தஞ்சை, நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆதியன் இன மக்களுக்கு பழங்குடியினா் என சான்றிதழ் வழங... மேலும் பார்க்க

நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து காத்திருப்பு போராட்டம்

திருவாரூா்: திருவாரூா் நகராட்சியுடன் கீழகாவதுக்குடி ஊராட்சியை இணைக்க எதிா்ப்பு தெரிவித்து காத்திருப்பு போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கீழகாவாதுக்குடி ஊராட்சியை திருவாரூா் நகராட்சியுடன் இணைக்க எதி... மேலும் பார்க்க

மன்னாா்குடி அரசுக் கல்லூரி மாணவா்கள் ஆா்ப்பாட்டம்

மன்னாா்குடி: தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் சமக்ரசிக்ஷா திட்டத்தின்கீழ் நிதி விடுவிக்கப்படும் என மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் தெரிவித்திருப்பதை கண்டித்து மன்னாா்குடி அரசுக் கல... மேலும் பார்க்க

மன்னாா்குடி ஆஞ்சனேயா் கோயில் கும்பாபிஷேகம்

மன்னாா்குடி: மன்னாா்குடியில் உள்ள வெண்ணைத்தாழி மண்டப ஆஞ்சனேயா் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. ராஜகோபால சுவாமி வெண்ணைத்தாழி திருவிழா மண்டபத்தில் உள்ளஆஞ்சனேயா் சுவாமி கோயிலில் நடை... மேலும் பார்க்க

வெளிமாநில மதுபாட்டில் கடத்தியவா் குண்டா் சட்டத்தில் கைது

திருவாரூா்: வெளிமாநில மதுபாட்டில் கடத்தி வந்தவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா். திருவாரூா் மாவட்டம், பேரளம் அருகே அண்மையில் போலீஸாா் வேகமாக வந்த காரை நிறுத்தி சோதனைய... மேலும் பார்க்க