செய்திகள் :

மதுரை: `தவெக ஆட்சி ஐந்தாண்டுகள் தொடர வேண்டும்; விசிக நிலைப்பாடு இதுதான்!' - திருமாவளவன்

post image

மதுரை சின்ன சொக்கிகுளம் பகுதியில் உள்ள தனியார் தங்கு விடுதியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தவெக ஆட்சி தொடராது என ஸ்டாலின் கூறியது தொடர்பான கேள்விக்கு, ``அவர் எந்தக் கோணத்தில் இந்தப் பிரச்னையைப் பார்க்கிறார் எனத் தெரியவில்லை. எங்களைப் பொறுத்த வரைக்கும் ஆதரவு அளிக்கின்ற அத்தனைக் கட்சிகளும் வாக்கு தவிர வாய்ப்பில்லை. விசிக, இடதுசாரிகள், ஐ.யூ.எம்.எல் ஆகிய கட்சிகள் தவெக-விற்கு அளித்த வாக்குறுதிகளைக் கட்டாயம் காப்பாற்றுவார்கள்.

காங்கிரஸ் எல்லா கட்சிகளுக்கும் முன்னதாகவே தவெக அணிக்கு ஆதரவு மட்டும் அல்லாமல், `கூட்டணியில் இணைகிறோம்... நாடாளுமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என இந்தக் கூட்டணி தொடரும்' என்று அறிவித்துவிட்டு, இந்தக் கூட்டணி உறவை உறுதிப்படுத்தினார்கள்.

விசிக தலைவர் திருமாவளவன்

இடதுசாரிகள் வெளியில் இருந்து ஆதரவு நல்குகிறார்கள்... ஐந்தாண்டுகள் வரை இந்த ஆட்சி தொடர வேண்டும் என்பதே தங்களது விருப்பம் என்பதை இடதுசாரிகள் திரும்பத் திரும்ப உறுதிப்படுத்தி வருகிறார்கள். அதே நிலைப்பாட்டைத்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் முன்னெடுக்கிறது. எனவே இந்த ஆட்சி ஐந்து ஆண்டுகளுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் வெற்றிகரமாக இயங்கும் என்பதை, பெரிதும் நம்புகிறேன்.

புதிய கூட்டணி அறிவிப்பு அங்கு பேசும்போது தான் தெரியும். நான் எப்படிச் சொல்ல முடியும். தேநீர் விருந்து என்ற அடிப்படையில்தான் அழைத்திருக்கிறார்கள். கட்சித் தலைவர்கள் மட்டுமன்றி சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கிறோம்.

ராஜினாமா செய்பவர்கள் அதிமுக-வில் என்ன பிரச்னை... எதனால் பதவி விலகுகிறார்கள் எனக் கேட்க வேண்டும். அதுதான் விவாதிக்கப்பட வேண்டும். அதைத் தாண்டி யூகங்களின் அடிப்படையில் விவாதங்கள் நடக்கின்றன.

அதிமுக எடப்பாடி பழனிசாமி
அதிமுக எடப்பாடி பழனிசாமி

அதிமுக-வுக்கு என்ன பிரச்னை... மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகும் நிலை ஏற்பட்டிருக்கிறது என்றால் அதிமுக-வுக்குள் நிகழும் உட்கட்சி முரண்கள் என்னென்ன என்பதைத்தான் வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டும். அவ்வாறு இல்லாமல் யூகங்களின் அடிப்படையில் விவாதங்களின் திசையை மாற்றுகிற முயற்சிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

6 பேர் இதுவரை அதிமுக-வில் பதவி விலகியிருக்கிறார்கள் என்றால், இது அதிமுக-வில் நிகழ்கிற மிக முக்கியமான பிரச்னை, தீவிரமாக விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று. இந்தக் கேள்விகளை அதிமுக-வினரிடம் வெளிப்படையாக கேட்க வேண்டும். அவர்கள்தான் நாட்டு மக்களுக்கு இதனை தெளிவுபடுத்த வேண்டும். பள்ளிகளில் சாதிய ஊக்குவிப்பு தடுப்பு நடவடிக்கை என்பதை வரவேற்கிறேன்.

செங்கோட்டையன் மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும்போது சாதியையும் ஒரு தரவாக பதிவுசெய்ய வேண்டும் எனக் கருத்து சொன்னபோது, கடுமையான எதிர்ப்பு வந்தது. தற்போது அந்த முயற்சி கைவிடப்பட்டிருக்கிறது

விஜய் - திருமாவளவன்
விஜய் - திருமாவளவன்

முதலமைச்சர் சாதி அடையாளங்களை ஊக்கப்படுத்தக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் என்பதை அவருடைய பேச்சின் மூலம் நம்மால் உணர முடிகிறது. அது தொடர வேண்டும் என்பது நம்முடைய வேண்டுகோள்.

அமைச்சர் சரத் விஷயத்தில் கட்டாயமாக நிரூபிக்கப்பட வேண்டியதுதான். ஆதாரமில்லாமல் ஒரு கருத்தைச் சொல்லி விட முடியாது.  ஆனால் ஒன்று அனைவரும் அறிந்த உண்மை, தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதிலும் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்திருக்கிறது.

கஞ்சா மாநிலங்கள் விட்டு மாநிலங்கள் செல்கிறது, குக்கிராமங்களில் கிடைக்கிறது. எந்தக் கட்சி என்று விவாதிப்பதை விட இந்தியா முழுவதிலும் இது பரவுகிறது. இதற்கு யார் பிண்ணனி என்பதைக் கண்டறிந்து, கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதுதான் முக்கியமான சவாலாக உள்ளது" என்றார்.

தவெக : தமிழகத்தில் ட்ரெண்ட் ஆகும் `ஆயா ராம் காயா ராம்' அரசியல்! - மக்கள் முடிவுக்கு என்ன மரியாதை?

மனம் போன போக்கில் கட்சி மாறும் அரசியல் காட்சிகளை வட இந்தியாவில் 'ஆயா ராம் காயா ராம்' என விமர்சிப்பார்கள். அந்த ஆயா ராம் காயா ராம் அரசியலை முதல்வர் விஜய் தமிழகத்திலும் வேகமெடுக்க வைக்கிறாரோ எனும் கேள்வ... மேலும் பார்க்க

`உங்கள் தயவால்தான் அவர் முதல்வராக இருந்தார்'- எஸ்.பி.வேலுமணி ஆலோசனை கூட்டத்தில் கொதித்த ஆதரவாளர்கள்

அ.தி.மு.க-வில் அதிருப்தியில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவை மாவட்டம், தொண்டாமுத்தூரில், கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இந்தக் கூட்டத்திற்கு ஊடகங்கள்... மேலும் பார்க்க

`தமிழக முதல்வர் விஜய்யைப் போல செய்வாரா முதல்வர் ரங்கசாமி?’ - கேட்கிறார் முன்னாள் முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.அப்போது அவர், ``தமிழகம், கேரளம், அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களிலும் சட்டமன்றத் தேர்தல் முடிந்து... மேலும் பார்க்க

`இரண்டு வருடங்களில் திமுகவும் அதிமுகவும் பாஜகவில் இணைந்துவிடும்; ஏனென்றால்..!' - நிர்மல் குமார்

தவெக அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார், சென்னையில் இன்று (ஜூன்.30) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். அப்போது அவர், "திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும், பாஜக-வின் ஆதரவோடு ஆட்சி அமைக்கச் செயல... மேலும் பார்க்க

’சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேனா?’ - எஸ்.பி.வேலுமணி சொல்வது என்ன?

அ.தி.மு.க-வில் அதிருப்தியில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, த.வெ.க-வில் இணைய உள்ளதாகக் கூறப்படுகிறது.இந்த நிலையில் இன்று கோவையிலிருந்து சென்னை... மேலும் பார்க்க

``எடப்பாடியாரே, நீங்கள் எடுத்த அந்த தன்னிச்சையான முடிவு... விடைபெறுகிறேன்!" - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

அ.தி.மு.க-விலிருந்து 6-வது எம்.எல்.ஏ-வாக கரூர் தொகுதி எம்.எல்.ஏ-வும், அ.தி.மு.க முன்​னாள் அமைச்​சருமான எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கர் நேற்று ராஜினாமா செய்​தார். இதற்​கான கடிதத்தை சென்னை தலை​மைச் செயல​கத்​தி... மேலும் பார்க்க