செய்திகள் :

மத்திய கிழக்கில் மீண்டுமொரு பதற்றம்: சவூதி அரேபியாவை தாக்கும் ஹூதி; 73 பேர் உயிரிழப்பு!

post image

ஏற்கெனவே பிப்ரவரி மாதம் முதல் ஈரான் vs அமெரிக்கா, இஸ்ரேல் போர் நடந்துகொண்டிருக்கிறது. இதற்கான எண்ட் கார்டு இன்னும் தெரியாத நிலையில், மத்திய கிழக்கில் இன்னொரு பிரச்னை தற்போது வெடித்துள்ளது. இது சவூதி அரேபியா vs ஹூதி தாக்குதல் ஆகும்.

இதைப் பழைய ‘புதிய’ பிரச்னை எனக் கூறலாம். குழப்பமாக உள்ளதா... கடந்த 2022-ம் ஆண்டிலிருந்து அவ்வப்போது இரு தரப்பிற்கும் நடந்து வருகிறதுதான். கொஞ்சம் இடைவெளிக்குப் பிறகு, தற்போது இந்தத் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது.

ஏமன் - சவூதி அரேபியா
ஏமன் - சவூதி அரேபியா

ஹூதி, சவூதி...

ஹூதி அமைப்பு ஏமனைச் சேர்ந்த அமைப்பாகும். சவூதி, ஏமன் இரண்டும் பக்கத்து நாடுகள். ஹூதி ஏமனில் பயங்கரவாதக் குழுவாகக் கருதப்படுகிறது. இந்த அமைப்பு ஏமனில் பரந்து விரிந்திருப்பதைச் சவூதி தங்களுக்கான அச்சுறுத்தலாகப் பார்க்கிறது.

ஏமன் அரசை முழுமையாக வசப்படுத்த ஹூதிக்குத் தடையாகச் சவூதி உள்ளது. இதனால், ஹூதிக்குச் சவூதியைப் பிடிக்கவில்லை.

இரு தரப்பிற்கும் 2022-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சமாதான உடன்படிக்கையைச் செய்தது. ஆனால், அது அவ்வளவு வலுவானதாக இல்லை. இதனால், இரு தரப்பிற்கும் மோதல் நடந்துகொண்டே இருக்கிறது.

ஈரான் ஆதரவு

சவூதி அரேபியாவிற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவு இருந்தாலும், ஹூதியை ஈரான் ஆதரிக்கிறது. நிதி முதல் ஆயுதம் வரை ஹூதிக்கு ஈரான் வெகுவாக உதவுகிறது.

இதை அடிப்படையாகக் கொண்டுதான், தற்போது ஹூதி சவூதியைத் தாக்கியுள்ளது.

சவூதி கொடுத்துள்ள தரவுகளின்படி, ஏமனின் (ஹூதி) தாக்குதலில் 73 பேர் காயமடைந்துள்ளனர்.

கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்

எண்ணெய் விலை?!

தற்போது கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாவிற்கு 90 டாலர்களைத் தாண்டி வர்த்தகமாகி வருகிறது.

இந்த நிலையில், மத்திய கிழக்கில் இன்னொரு புதிய பிரச்சினை கிளம்பியுள்ளது எண்ணெய் விலையையும், எண்ணெய் போக்குவரத்தையும் மீண்டும் கேள்விக்குறியாக்குமோ என்கிற கேள்வி உலக நாடுகளிடம் எழுந்துள்ளது.

'இளைய தளபதி க்ரூப்ஸ்' - ரசிகர் மன்றம் தொடங்கி வளர்வது எப்படி? - அமைச்சர் சரத் முழு விளக்கம்!

பட்ஜெட் சட்டமன்றக் கூட்டத்தொடரின் கடைசி நாள் நிகழ்வு இன்று நடந்திருந்தது. இதில் பேசிய அமைச்சர் சரத் 'நாங்களெல்லாம் சாதாரணமாக வரவில்லை...' தான் ரசிகர் மன்றம் வளர்த்த கதையை எமோஷனலாக பேசியிருந்தார்.அமைச்... மேலும் பார்க்க

மதுராந்தகம், தாராபுரம் - இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் யார்?!

மதுராந்தகம், தாராபுரம் என இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட இரண்டு தொகுதிகளிலும் கண்டிப்பாக வெற்றிபெற வேண்டும் என களமிறங்கியிருக்கிறது அ.தி.மு.க.''நாம் வெற்றிபெற்ற தொகுதிகளை விட்டுக்கொடுத்துவிடக் கூடாது'' எ... மேலும் பார்க்க

`சாலை ஆக்கிரமிப்பு வாகனங்ள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம்..!’ - புதுச்சேரி உழவர்கரை நகராட்சி அதிரடி

புதுச்சேரியின் பிரதான சாலைகளிலும், குடியிருப்பு வீதிகளிலும் பொதுமக்கள் தங்களின் பயன்பாடற்ற வாகனங்களை பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கின்றனர். அதனால் நாள்தோறும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந... மேலும் பார்க்க

"அம்பேத்கரின் சட்டத்திற்கு காக்கி ட்ரவுசர் போட்ட அமைச்சர்"- நிர்மல் குமாருக்கு அன்பில் மகேஸ் கண்டனம்

இன்று சட்டப்பேரவையில் தமிழ்நாடு சட்டத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பேசினார். அந்த உரையில், முன்னாள் முதலமைச்சர் மற்றும் திமுகத் தலைவர் ஸ்டாலின் பெண்களை இழிவாகப் பேசியதால்தான் மிசாவில் கைதா... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி: `கள்ளச்சாராய மரணங்களுக்கு அதிகாரிகளே காரணம்!’ - கோகுல்தாஸ் அறிக்கை சொல்வதென்ன ?

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் 19-ம் தேதி அதிகாலையில் கள்ளச்சாராயம் குடித்ததால் ஒன்று, இரண்டு என மெல்லத் தொடங்கிய உயிரிழப்புகள், அன்று நள்ளிரவைத் தாண்டுவதற்குள் கருணாபுரம... மேலும் பார்க்க

"எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும்..!"- முதல்வர் விஜய் விளக்கம்

நேற்று (செப்.7) நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் காவல்துறை, தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது முதல்வர் விஜய், திமுகவை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். சர்க்காரியா கமிஷன், ... மேலும் பார்க்க