செய்திகள் :

திருடுவதே தொழில்; மனைவிக்கும் கைவரிசையைக் கற்றுக்கொடுத்த கணவன் - போலீஸில் சிக்கிய பின்னணி!

post image

வேலூர் மாவட்டம், காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை பகுதியில் வசிக்கும் ஓய்வுபெற்ற ஆசிரியை மரியா. கடந்த மாதம் 27-ம் தேதி மரியா தனது கணவர் ரவிக்குமாருடன் வீட்டை பூட்டிவிட்டு உறவினரின் வீட்டுக்குச் சென்றார். பின்னர், இருவரும் அன்று இரவு திரும்பியபோது, தங்கள் வீட்டு கதவு உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ந்துபோயினர். விரைவாக வீட்டுக்குள் சென்று பார்வையிட்டபோது, அறைகளில் இருந்த பீரோக்களும் உடைக்கப்பட்டு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 36 பவுன் தங்க நகைகளும் திருடுபோனது தெரியவந்தது.

இதையடுத்து, காட்பாடி காவல் நிலையம் சென்று புகாரளித்தனர். உடனே விசாரணையில் இறங்கிய போலீஸாரும் சம்பவ பகுதிகளைச் சுற்றிலும் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளையும் கைப்பற்றி ஆய்வுக்குஉட்படுத்தினர். அதில் தெரியவந்த சந்தேகத்திற்கிடமான நபர்களையும் அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டனர்.

முத்துவேல் கார்த்திக், அவரின் மனைவி பிரபாவதி

இந்த நிலையில்தான் ஆந்திர மாநில எல்லையோரமுள்ள `டெல்’ பகுதியில் காரில் இளம்பெண்ணுடன் சுற்றிவந்த நபரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் மகன் முத்துவேல் கார்த்திக் என்பதும், உடன் இருந்த பெண் அவரின் மனைவி பிரபாவதி என்பதும் தெரியவந்தது.

ஓய்வுபெற்ற ஆசிரியையின் வீட்டில் கைவரிசை காட்டியதையும் முத்துவேல் கார்த்திக் ஒப்புக்கொண்டார். மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், விருதுநகர், ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பல்வேறு திருட்டு வழக்குகளும், கொள்ளை வழக்குகளும் இருப்பதும், தொடர் குற்றச் செயல்கள் காரணமாக `சரித்திர பதிவேடு குற்றவாளி’யாகவும் போலீஸாரால் அவர் கண்காணிக்கப்பட்டு வந்திருக்கிறார் எனவும் தெரியவந்திருக்கிறது.

இதையடுத்து, `உள்ளூரில் திருட முடியாது’ என்பதால் வடமாவட்ட பகுதிகளில் வீடுகளை நோட்டமிட்டு திருட மனைவியையும் உடன் அழைத்து வந்திருக்கிறார் முத்துவேல் கார்த்திக். வீடு வாடகைக்கு எடுத்து தங்கும்போது, தன்னை `ஐ.டி ஊழியர்’ என்றே முத்துவேல் கார்த்திக் பில்டப் கொடுத்து வந்திருக்கிறார். தற்போது, வேலூர் மாவட்டத்துக்கு அருகேயுள்ள ஆந்திர மாநிலம் சித்தூரில் வாடகைக்கு வீடு எடுத்து மனைவி மற்றும் தனது இரு பிள்ளைகளுடன் தங்கியிருந்த முத்துவேல் கார்த்திக், அங்கிருந்து அடிக்கடி காட்பாடி, வேலூர் பகுதிக்கு வந்து வீடுகளை நோட்டமிட்டு திருடுவதை வழக்கமாக்கியிருந்தார்.

திருடும் நகைகளை அரக்கோணம், திருத்தணி போன்ற பகுதிகளிலுள்ள நகைக் கடைகளில் ஜோடியாகச் சென்று அடகு வைப்பது அல்லது விற்றுவிட்டு புதிய நகைகளாக வாங்குவது என சொகுசாக இருந்திருக்கின்றனர். அப்படி வாங்கும் புதிய நகைகளை மனைவிக்கு அணிவித்து அழகுப் பார்த்திருக்கிறார் முத்துவேல் கார்த்திக்.

பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் மற்றும் பொருள்கள்

கணவரின் எல்லாத் திருட்டுக்கும் மனைவி பிரபாவதியும் உடந்தையாக இருந்துவந்திருக்கிறார். சமீபத்தில், ஆசிரியையின் வீட்டில் திருடிய நகைகளையும் விற்று, அதில் கிடைத்த பணத்தை வைத்து ரூ.10 லட்சம் மதிப்பில் புதிய கார் ஒன்றையும் வாங்கியிருக்கிறார்கள். அந்த காரில் மனைவி, பிள்ளைகளையும் அழைத்துச் சென்று மேலும் சில வீடுகளையும் நோட்டமிட்டு கைவரிசைக் காட்டத் திட்டமிட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

ஆசிரியையின் வீட்டில் திருடிய பின்னர் புதிய காரில் காட்பாடியிலுள்ள சித்தூர் பேருந்து நிறுத்தப் பகுதிக்கும் வந்து டாஸ்மாக் கடையில் பீர் வாங்கிக் குடித்துவிட்டு, `வேறு எங்குத் திருடலாம்’ என்றும் நோட்டமிட்டுச் சென்றிருக்கிறார் முத்துவேல் கார்த்திக். இதையடுத்து, முத்துவேல் கார்த்திக்கிடம் இருந்து சுமார் 26 பவுன் நகைகளையும், புதிய காரையும் பறிமுதல் செய்த போலீஸார், இவரையும், திருட்டுக்கு உடந்தையாக இருந்த மனைவி பிரபாவதியையும் கைது செய்து இன்று நீதிமன்றக் காவலில் சிறையிலடைத்திருக்கின்றனர். மேலும், இவர்களின் 10 வயதுக்குஉட்பட்ட இரு பிள்ளைகளையும் மீட்டு விருதுநகர் மாவட்டத்திலுள்ள தாத்தா, பாட்டியிடம் ஒப்படைக்கவும் போலீஸார் அனுப்பி வைத்தனர்.

இரவு பார்ட்டிக்கு எதிர்ப்பு, கேமரா மூலம் கண்காணிப்பு: ஆத்திரத்தில் மாமனாரை ஆள்வைத்து கொன்ற மருமகள்!

உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரைச் சேர்ந்தவர் வினீத் மினோச்சா (63). தொழிலதிபரான இவரின் மருமகள் பெயர், ஷாலு. சம்பவத்தன்று வினீத் அவரது வீட்டில் 26 முறை கத்தியால் குத்திக் கொலைசெய்யப்பட்டார். இது தொடர்பா... மேலும் பார்க்க

நெல்லை: மது பாட்டிலுக்கு ஆசைப்பட்டு கார் கடத்திய இளைஞர்கள் - போதை தெளிந்ததும் சிறை சென்ற சோகம்!

நெல்லை டவுன், கல்லத்தி முடுக்கு தெருவைச் சேர்ந்தவர், சூர்ய சரவணன். பட்டப் படிப்பை முடித்த இவர், வேலை தேடிவருகிறார். தன் தந்தை குமரகுரு ராமலிங்கத்தின் காரை, சூர்ய சரவணன் பயன்படுத்தி வந்தார்.வீட்டுக்குள... மேலும் பார்க்க

`Will Kill Sugar Daddy Soon' - மனைவியைக் கொன்று தலையை ஃபிரிட்ஜில் வைத்த இளைஞர் `பகீர்' தகவல்!

அஸ்ஸாம் மாநிலம், கவுகாத்தியில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டிலிருந்து வந்த துர்நாற்றத்தைத் தொடர்ந்து, பக்கத்து வீட்டுக்காரர்கள் இது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் வி... மேலும் பார்க்க

குழந்தை திருமணங்களால் மூன்று சிறுமிகள் கர்ப்பம்! – போக்சோ வழக்கில் இளைஞர்களை தேடும் கடலூர் போலீஸ்

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே இருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, செவிலியர் கல்லூரியில் படித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லை என்று மருத்துவமனைக்குச் சென்... மேலும் பார்க்க

மும்பை விமான நிலையத்தில் பயணிகள் பேக்கில் தொடரும் பணம், நகை திருட்டு! குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை

மும்பை விமான நிலையத்தில் பயணிகளின் பேக்கில் இருந்து அடிக்கடி திருட்டு நடக்கிறது. சமீபத்தில் மும்பையில் இருந்து நியூயார்க் சென்ற மாணவர் ஒருவரின் பேக்கில் இருந்து 5 ஆயிரம் அமெரிக்க டாலர் திருட்டு போனது.... மேலும் பார்க்க

வீட்டிக்கு வெளியில் மது அருந்தியதை தட்டிக்கேட்ட மணிப்பூர் பாடகர் - அடித்து கொன்ற ஹோட்டல் ஊழியர்கள்

மணிப்பூரை சேர்ந்த பாடகர் விக்ரம் சிங் என்பவர் டெல்லி அருகில் உள்ள கிலோகரி என்ற கிராமத்தில் பல ஆண்டுகளாக வசித்து வந்தார். அவரது வீட்டிற்கு அருகில் ஒரு ஹோட்டல் இருக்கிறது. அங்குள்ள விக்ரம் சிங் வீட்டிற்... மேலும் பார்க்க