செய்திகள் :

``மனிதர்களையே அடித்துக் கொல்லும்போது, விலங்குகள் மீது எப்படி கருணை வரும்?" - நடிகை நிவேதா பெத்துராஜ்

post image

தெருநாய்களை பாதுகாக்க கோரி 'விலங்குகளுக்கான சொர்க்கம்' என்ற அரசு சாரா அமைப்பு சார்பில், புதுப்பேட்டை, லாங்ஸ் கார்டன் சாலையில் நேற்று அமைதி பேரணி நடந்தது. இந்த பேரணியில் நடிகை நிவேதா பெத்துராஜ் கலந்துகொண்டார்.

தெரு நாய்களுக்கு ஆதரவான பதாகைகளை ஏந்தியும், தெருநாய்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பியும் பேரணி நடத்தப்பட்டது.

nivetha pethuraj
nivetha pethuraj

அப்போது செய்தியாளர்களை சந்தித்த நடிகை நிவேதா பெத்துராஜ், ``ஒரு ஊரில் நாய் கடிக்கிறது என்றால் அதை எல்லோருக்கும் பரப்பி, ஒரு பயத்தை உருவாக்கும் செயல். நாய் கடிப்பதால் ரேபிஸ் நோய் வருகிறது, எனவே, நான் நாய்கடியை சரியானது என நான் சொல்லவில்லை.

ஆனால், இதை வைத்து பயத்தைப் பரப்புவதற்குப் பதிலாக என்ன தீர்வு கொடுக்கலாம் என்பதுதான் முக்கியம். சிறுவயதிலிருந்தே இது தொடர்பான புரிதலை குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டும். ஒருவர் தவறாக நடந்துகொள்கிறார் என்பதால் எல்லோரையும் நான் அப்படியே பார்ப்பதில்லையே. அதேதானே நாய்களுக்கும் நாம் பொருத்திப்பார்க்க வேண்டும்.

ஊடகங்கள் நாய் கடி செய்தியைப் போடும்போதே அதற்கான தீர்வுகளையும் சேர்த்துப் போடுங்கள். நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்களை நாம் பாதுகாக்க வேண்டும் என்பதில் மாற்றுகருத்தில்லை. அதே நேரம், ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களையும், ரேபிஸ் நோய்க்கான தடுப்பூசி போடுபவர்களையும் ரேபிஸ் பாதித்தவர்களாக கணக்கெடுக்கக் கூடாது.

தமிழ்நாட்டில் 4.5 லட்சம் நாய்கள் இருக்கின்றன. இந்த நாய்களை அடைக்க வேண்டுமென்றால் குறைந்தபட்சம் 2500 முகாம்கள் தேவைப்படும். எனவே, இதற்கு அரசு எடுக்கும் முன்னெடுப்புக்கு பதிலாக, நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தலாம். அதற்கான என்.ஜி.ஓ-களை நியமிக்கலாம்.

நாய்கள்
நாய்கள்

மக்களையும், நாய்களையும் பாதுகாக்கதானே நாம் அவர்களுக்கு வாக்களித்து தேர்வு செய்கிறோம். இதை செய்வது அவர்களின் பொறுப்பு. அரசு மட்டும் இதில் முழுமையாக ஈடுபட வேண்டும் என்பதல்ல. குழந்தைகளே நாய்களை அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மனிதர்களே மனிதர்களை அடித்துக்கொல்லும்போது, விலங்குகள் மீது எப்படி கருணை வரும்? எனவே, குழந்தைகளுக்கு நாம் இதையெல்லாம் கற்றுக்கொடுக்க வேண்டும். மனிதர்கள் மட்டும்தான் இந்த உலகில் வாழவேண்டுமென்றால் நாம்மால் வாழ முடியாது. கொஞ்சம் அனுசரித்து வாழப் பழகனால் எல்லோருக்கும் நல்லது எனக் கருதுகிறேன்" எனக் குறிப்பிட்டார்.

Indigo: `தொடரும் விமான ரத்து, தாமதம்' - பயணிகள் ஆர்ப்பாட்டம்; இண்டிகோ நிறுவனத்துக்கு என்ன பிரச்னை?

இந்தியாவின் முக்கிய விமானப் போக்குவரத்து நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ நிறுவனம் சமீப காலமாக விமான தாமதம், விமானப் பயணம் ரத்து உள்ளிட்ட தீவிர பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. நவம்பர் மாதத்தில் மட்டும் ... மேலும் பார்க்க

சிங்கக் கூண்டுக்குள் தானே நுழைந்த இளைஞர் - பிரேசிலில் அதிர்ச்சி சம்பவம் | வீடியோ

பிரேசில் நாட்டில் இருக்கும் உயிரியல் பூங்கா ஒன்றில் 19 வயது இளைஞர் ஒருவர் தானாகவே சிங்கத்தின் கூண்டுக்குள் சென்று மாட்டிக்கொண்டு உயிரிழந்த சம்பவம் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.கடந்த நவம்... மேலும் பார்க்க

Rage Bait: 2025-ம் ஆண்டின் சிறந்த வார்த்தை; `இது வெறும் சொல் அல்ல' - எச்சரிக்கும் ஆக்ஸ்போர்ட்!

ஒவ்வொரு ஆண்டும் ஆக்ஸ்போர்ட் அகராதி ஒரு சொல்லைத் தேர்வு செய்து அதை அந்த ஆண்டின் சிறந்த வார்த்தையாக அறிவிக்கும். அதன் அடிப்படையில் இந்த ஆண்டு "ரேஜ் பெய்ட்" (Rage Bait) என்ற வார்த்தையைத் தேர்வு செய்திருக... மேலும் பார்க்க

Elon Musk:``என் மகன்களில் ஒருவரின் பெயரில் 'சேகர்' எனச் சேர்த்திருக்கிறேன்" - எலான் மஸ்க்

"WTF is" பாட்காஸ்ட் தொடரில் தொழில்முனைவோரும் முதலீட்டாளருமான நிகில் காமத் தொழில் வல்லுநர்களுடன் உரையாற்றுவார். அதன் அதன் அடிப்படையில் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் உடன்... மேலும் பார்க்க

`ஒரு நம்பர் பிளேட் விலை ரூ.1.17 கோடியா?' - ஹரியானாவில் நடந்த ஏலமும் வைரல் வாகன நம்பரும்!

ஹரியானா மாநிலத்தில் வாரந்தோறும் VIP அல்லது ஃபேன்சி வாகன எண் பலகைகளுக்கான ஆன்லைன் ஏலம் நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை மாலை 5 மணி முதல் திங்கட்கிழமை காலை 9 மணி வரை, ஏலதாரர்கள் தங்களுக்கு விருப்பமான எண்ணுக்... மேலும் பார்க்க

``AI என் பதவியைக் கூட பறித்துவிடும்" - AI குறித்து வெளிப்படையாக பேசிய சுந்தர் பிச்சை

செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தில் CEO (தலைமை நிர்வாக அதிகாரி) பதவியைக் கூட எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது என கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் பிபி... மேலும் பார்க்க