செய்திகள் :

மனைவியின் தலையை வெட்டி பிரிட்ஜில் வைத்த கணவன்; போலீஸிடமிருந்து தப்பிக்க முயலும்போது விபரீதம்

post image

அசாம் மாநிலம் கவுகாத்தியைச் சேர்ந்த ராமானுஜ் கோஸ்வாமி (30) என்பவர் தனது மனைவி ரியா என்பவரைக் கொலை செய்துவிட்டு தலையைத் துண்டித்து பாலிதீன் பேக்கில் வைத்து பிரிட்ஜில் வைத்துவிட்டு தலைமறைவாகிவிட்டார்.

பக்கத்து வீட்டுக்காரர்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீஸார் ராமானுஜ் வீட்டைச் சோதனை செய்து ரியாவின் உடலையும், தலையையும் மீட்டனர். பின்னர் ராமானுஜ் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரித்தபோது தனது மனைவி தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், அவருக்கு அடுத்தவருடன் தொடர்பு இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 8ம் தேதி குற்றம் நடந்த இடத்திற்கு ராமானுஜை போலீஸார் அழைத்துச் சென்றிருந்தபோது, ​​அந்தப் படுகொலை குறித்து கோஸ்வாமி எந்தவிதமான வருத்தமும் தெரிவிக்கவில்லை என்றும், இந்தக் கொலைக்காக மன்னிப்பு கோரும் எண்ணமோ இல்லை என்றும் அங்கு கூடியிருந்த பத்திரிகையாளர்களிடம் கூறினார்.

மேலும், சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டால், தனது மனைவியின் 'சுகர் டாடி' என்று அவர் அழைக்கப்படும் நபரையும் கொலை செய்வேன் என்றும் அவர் மிரட்டினார்.

கொலை செய்தபோது ராமானுஜ் குடிபோதையில் இருந்ததாக போலீஸார் தெரிவித்தனர். கொலை நடந்த வீட்டில் காலி மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் போலீஸ் வாகனத்தில் இருந்து குதித்ததில் ராமானுஜ் இறந்து போனார்.

இன்று அதிகாலையில், கவுகாத்தி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு ராமானுஜ் கோஸ்வாமியை ஹதிகான் போலீஸ் நிலையத்திற்குப் போலீசார் அழைத்துச் சென்றுகொண்டிருந்தபோது இச்சம்பவம் நடந்தது.

கோஸ்வாமி திடீரென போலீஸாரைத் தாக்கிவிட்டு, நரகசுர் பஹார் பகுதிக்கு அருகே ஓடும் வாகனத்திலிருந்து கீழே குதித்தார். அவர் ஒரு பள்ளத்தில் விழுந்து பலத்த காயமடைந்தார். போலீசார் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

பிற ஆண்களுடன் பேசுகிறார்: சென்னையில் இருந்து காதலியை வரவழைத்து ஹோட்டல் அறையில் குத்திக்கொன்ற காதலன்

அசாம் மாநிலம் உடல்புரி மாவட்டத்தைச் சேர்ந்த அபிஜித் கிண்டோ, குரியா என்ற பெண்ணைக் காதலித்து வந்தார். குரியா சென்னையில் தங்கி இருந்தார். குரியா சென்னையிலிருந்து வேறு இரண்டு பெண்களுடன் அசாமில் உள்ள கம்ரூ... மேலும் பார்க்க

மீன்களை பாலியல் வன்கொடுமை செய்த நபர்: சிசிடிவி ஆதாரத்துடன் கைது செய்த காவல்துறை! - என்ன நடந்தது?

பாங்காக் நகரின் துங் சோங் ஹோங் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் வெளிப்புறத்தில், சிமெண்டால் கட்டப்பட்ட பெரிய மீன் தொட்டி இருக்கிறது. இந்த மீன் தொட்டியில் வளர்க்கப்படும் வண்ண மீன்கள் தொடர்ந்து திடீர் திடீரெ... மேலும் பார்க்க

கோவையில் 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை – குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்!

கோவை கடந்த 12ம் தேதியன்று இரவு சுமார் 7.30 மணி அளவில் 14 வயது சிறுமியை இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக கோவை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக... மேலும் பார்க்க

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு: குற்றஞ்சாட்டும் தவெக; சவால்விடும் திமுக; காத்திருக்கும் நீதி

முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் 2018, மே 22-ம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில், 2 பெண்கள் உட்பட 13 பேர் போலீஸாரால் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர... மேலும் பார்க்க

கேரளம்: ஒரு வயது குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற தாய்; திருமண நாளில் இளம்பெண் செய்த கொடூரம்

கேரள மாநிலம் ​திருவனந்தபுரம் மாவட்டம் விளவூர்க்கல் பொற்றா பகுதியைச் சேர்ந்தவர் அபிஜித். மருத்துவப் பிரதிநிதியாகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கிறிஸ்டி (29). இவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு... மேலும் பார்க்க

காட்பாடி: தேவாலய கட்டுமானப் பணி விபத்தில் 3 பேர் பலி; ஒப்பந்ததாரர் மீது வழக்குப் பதிவு!

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த ஆந்திர மாநில எல்லையில் மந்தி கிருஷ்ணாபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில், புதிதாக சி.எஸ்.ஐ தேவாலயம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், நேற்று மாலை கான்க... மேலும் பார்க்க