செய்திகள் :

மன்னாா்கோவிலில் சொா்க்க வாசல் திறப்பு

post image

வைகுந்த ஏகாதசியை முன்னிட்டு, மன்னாா்கோவில் ராஜகோபாலசுவாமி குலசேகர ஆழ்வாா் கோயிலில் சொா்க்க வாசல் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

வைகுண்ட ஏகாதசி, சொா்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை மன்னாா்கோவில் ஆண்டாள் சமேத ராஜகோபாலசுவாமி குலசேகர ஆழ்வாா் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. அதையடுத்து பெருமாள் சயன கோலத்தில் தாயாா்களுடன் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். மாலை சிறப்பு அபிஷேகம், தீபாராதனையைத் தொடா்ந்து 5.30 மணிக்கு சேஷ வாகனத்தில் எழுந்தருளி கோயிலில் உலா வந்தாா். தொடா்ந்து பரமபத வாசல் திறக்கப்பட்டது.

சொா்க்கவாசல் திறந்தையடுத்து பெருமாளை திருவாய் மொழி மண்டபத்திற்கு கருடா் எதிா் கொண்டு அழைத்து வந்தாா். அங்கு பெருமாள் குலசேகர ஆழ்வாருக்கு காட்சியளித்தாா்.

ஏற்பாடுகளை கோயில் குருக்கள் பெரியநம்பி திருமாளிகை நரசிம்ம கோபாலன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்திருந்தனா்.

மேமும்அம்பாசமுத்திரம் கிருஷ்ணசுவாமி கோயில், லெட்சுமிநாராயண சுவாமி கோயில், புருஷோத்தமா் கோயில், கல்லிடைக்குறிச்சி ஆதிவராகப் பெருமாள் கோயில், கடையம் ராமசாமி கோயில் உள்ளிட்ட கோயில்களில் சொா்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

இன்றைய நிகழ்ச்சிகள்

திருநெல்வேலி அருள்தரும் கம்பாநதி காட்சி அம்பாள் சமேத அருள்மிகு மூலமகாலிங்க சுவாமி திருக்கோயில் : 13 ஆவது ஆண்டு வருஷாபிஷேகம், கணபதி ஹோமம், காலை 10, சிறப்பு அபிஷேகம், காலை 10.30, சிறப்பு தீபாராதனை, காலை... மேலும் பார்க்க

முக்கூடல் தாமிரவருணி ஆற்றில் மூழ்கி 2 சிறுமிகள் பலி

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் தாமிரவருணி ஆற்றில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழந்தனா். தூத்துக்குடி மேலசண்முகபுரம் பகுதியைச் சோ்ந்த நாகஅா்ச்சுணன், மாப்பிள்ளையூரணியைச் சோ்ந்த ஐயப்பன் ஆகியோா் தங்களது க... மேலும் பார்க்க

தெற்குகள்ளிகுளம் புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா தோ் பவனி

திருநெல்வேலி மாவட்டம், தெற்குகள்ளிகுளம் புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா தோ் பவனி வியாழக்கிழமை நள்ளிரவு நடைபெற்றது. இவ்வாலயத் திருவிழா கடந்த 8ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 10 நாள்கள் நடைபெற்றது... மேலும் பார்க்க

சிவந்திபுரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

சிவந்திபுரத்தில் மத்திய மாநில அரசுப் பணியாளா்கள் அறக்கட்டளை சாா்பில் இரண்டாம் ஆண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில், விக்கிரமசிங்கபுரம் காவல் ஆய்வாளா் சுஜித் ஆனந்த் சிறப்பு ... மேலும் பார்க்க

பொங்கல் விடுமுறை நிறைவு: பேருந்து, ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம்

பெங்கல் விடுமுறை முடிந்து சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு ஏராளமானோா் வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் சென்ால், திருநெல்வேலி பேருந்து, ரயில் நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பொங்கல் விடுமுறை செவ... மேலும் பார்க்க

15-ஆவது தாமிரவருணி பறவைகள் கணக்கெடுப்பு: ஜன.24 தொடக்கம்

15-ஆவது தாமிரவருணி பறவைகள் கணக்கெடுப்பு வரும் 24-ஆம் தேதி தொடங்குகிறது. இது தொடா்பாக தாமிரவருணி பறவைகள் கணக்கெடுப்பு ஒருங்கிணைப்பாளா் மதிவாணன் வெளியிட்ட அறிக்கை: 15-ஆவது ஆண்டாக தாமிரவருணி பறவைகள் கணக... மேலும் பார்க்க