செய்திகள் :

'மன்னித்துவிடுங்கள்; தர்மேந்திர பிரதானைக் காப்பாற்றுவதற்காக.!' - அபிஜித் தீப்கே வேதனை

post image

நேற்று டெல்லியில் நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி நடத்தினர் காக்ரோச் ஜனதா கட்சி.

தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதே அவர்களது முக்கிய கோரிக்கை.

நாடாளுமன்றம் அருகே பேரணி சென்றதும், காவல் துறையினர் அவர்களைக் கலைந்துபோகச் சொல்லி அறிவுறுத்தினர். போராட்டக்காரர்கள் மறுத்ததால், அவர்கள் மீது தடியடி நடத்தியது போலீஸ்.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே...
போராட்டம்
போராட்டம்

"எங்கள் ஆதரவாளர்கள் அனைவருக்கும், குறிப்பாக ஆண் காவல்துறையினரால் கொடூரமாகத் தாக்கப்பட்ட பெண் பிள்ளைகளிடம் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

நாங்கள் இன்னும் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருக்கலாம். டெல்லி காவல்துறையின் இந்த மனிதநேயமற்ற செயல்களிலிருந்து உங்களைப் பாதுகாக்க நான் இன்னும் சிறந்த முறையில் செயல்பட்டிருக்கலாம்.

20-க்கும் மேற்பட்ட மாணவர்களின் மரணத்திற்குப் பொறுப்பான தர்மேந்திர பிரதான் என்பவரைக் காப்பாற்றுவதற்காக, இன்னும் பல இளம் மாணவர்களின் ரத்தத்தைச் சிந்தக்கூட இந்த அரசு தயாராக இருந்தது.

ஒருவேளை நீங்கள் இதில் காயமடைந்து, இந்தப் பதிவைப் பார்க்கிறீர்கள் என்றால், தயவுசெய்து எனக்கு நேரடியாகச் செய்தி அனுப்புங்கள். நான் உங்களிடம் தனிப்பட்ட முறையில் பேசி மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன்.

உங்கள் அனைவருக்காகவும் நாங்கள் தொடர்ந்து போராடுவோம்." என்றிருக்கிறார்.

"டாஸ்மாக்கில் பாட்டலுக்கு 10 ரூபாய் வாங்குவது குறைந்துள்ளது" - அமைச்சர் விக்னேஷ் தகவல்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், “போதையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பது இன்... மேலும் பார்க்க

"16 வருச உழைப்புக்குக் கிடைச்ச அங்கீகாரம்" - வீட்டு வசதி வாரியத் தலைவர் சிவா நெகிழ்ச்சி

வீட்டு வசதி வாரியத்தின் தலைவராக தவெக நிர்வாகியான சிவாவை நியமித்து நியமன ஆணையையும் வழங்கியிருக்கிறார் முதல்வர் விஜய்.Sivaசிவா, தவெகவின் பெரம்பூர் தொகுதி மாவட்டச் செயலாளர். சென்னையிலேயே அதிகமாக பெரம்பூர... மேலும் பார்க்க

டெல்லி மாணவர்கள் போராட்டம்: ``தவெக மீது சேறு வாரி இறைப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள்" - தவெக

நீட் உள்ளிட்ட அரசுத் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடி என மத்திய அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளானது. இந்த நிலையில், காக்ரோச் ஜனதா பார்ட்டி எனும் இளைஞர் அமைப்பு, அரசுத் தே... மேலும் பார்க்க

"முன்னாள் எம்எல்ஏ வீட்டில் ஒரு வாரமாக கரண்ட் கட்" - கலெக்டரிடம் புகார் அளித்ததும் பரபரத்த அதிகாரிகள்

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக 2006 முதல் 2011 வரை இருந்து வந்தவர் ஜான்ஜோசப். சி.பி.எம் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ-வான இவர் தற்போது சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார். அவ... மேலும் பார்க்க

டெல்லி மாணவர்கள் போராட்டம்: ``ஒரு தலைமுறையின் ஒட்டுமொத்த கோபமாக மாறியிருக்கிறது" - பா.ரஞ்சித்

நீட் உள்ளிட்ட அரசுத் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடி என மத்திய அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளாகின.இந்த நிலையில், காக்ரோச் ஜனதா பார்ட்டி எனும் இளைஞர் அமைப்பு, அரசுத் தேர... மேலும் பார்க்க