செய்திகள் :

'மின்துறையின் கடன் இப்போது ரூ.2,47,130 கோடியாக உயர்ந்திருக்கிறது' - மின் வாரியத்தின் வெள்ளை அறிக்கை

post image

கடந்த வாரம் தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து நிதியமைச்சர் மரிய வில்சன் வெள்ளை அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உள்கட்டமைப்பு,நிதி, வருவாய், செலவினம் ஆகியவை குறித்த வெள்ளை அறிக்கையை மின்சாரத்துறை அமைச்சர் சி.டி. ஆர் நிர்மல்குமார் வெளியிட்டு வருகிறார்.

மின்சார வாரியத்தின் வெள்ளை அறிக்கை வெளியீடு
மின்சார வாரியத்தின் வெள்ளை அறிக்கை வெளியீடு

"2001-06 இல் வருவாய் 59,084 கோடியாகவும் செலவு 67,439 கோடியாகவும் இருந்தது. 8,355 கோடி ரூபாய் பற்றாக்குறையாக இருந்தது.

கடந்த ஆட்சியில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டும், பற்றாக்குறை 933 கோடியாக இருந்தது. கிட்டத்தட்ட 51,000 கோடி செலவினம் அதிகரித்திருக்கிறது.

செலவு அதிகரித்த அளவுக்கு கட்டமைப்பு வசதிகள் எதுவும் அதிகரிக்கவில்லை.

மக்கள்தான் மின் கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டிருக்கிறார்களே ஒழிய, கடந்த அரசு மின் துறையை சீரமைக்க ஒன்றுமே செய்யவில்லை.

மின்சார வாரியத்தின் வெள்ளை அறிக்கை
மின்சார வாரியத்தின் வெள்ளை அறிக்கை

5 ஆண்டுகளில் ரூ. 34,447 கோடி மின்வாரியத்தில் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. புதிய திட்டங்கள் இல்லாமலேயே செலவு அதிகரித்திருக்கிறது" என்று நிர்மல் குமார் தெரிவித்திருக்கிறார்.

2001 இல் 6,492 கோடியாக இருந்த மின் துறையின் கடன் இப்போது 2,47,130 கோடியாக உயர்ந்திருக்கிறது.

கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 87,000 கோடி ரூபாயை கடனாக வாங்கியிருக்கின்றனர்.

மின் துறைக்கு 1,40,635 ஊழியர்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால், நம்மிடம் 74,714 பேர் மட்டுமே பணியில் இருக்கின்றனர். 65,921 காலிப்பணியிடங்கள் இருக்கிறது. இன்னும் 5 ஆண்டுகளில் 16,000 பேர் ஓய்வை எட்டவிருக்கின்றனர்" என்றார்.

தகவல்கள் தொடர்ந்து அப்டேட் செய்யப்படும்.!

பிரமாண்ட ஸ்வர்ணகிரி; `ஆந்திராவின் KGF' - சந்திரபாபு நாயுடு பெருமிதம்

ஆந்திரப் பிரதேச மாநிலம், கர்னூல் மாவட்டம் துக்கலி மண்டலத்தில் உள்ள ஜொன்னகிரி கிராமத்தில், தனியார் துறையின் மிகப்பெரிய தங்கம் சுரங்கம் மற்றும் தங்கம் பிரித்தெடுக்கும் ஆலையை ஆந்திர முதல்வர் என். சந்திரப... மேலும் பார்க்க

"அப்பாவை அங்க தேடாதீங்க; மகளிர் உரிமைத்தொகை இருக்கும்வரை நான்தான் முதல்வர்" - ஸ்டாலின் பதிலடி

திருவாரூர் மாவட்டம் காட்டூரில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டிருக்கிறார். அப்போது விழா மேடையில் பேசிய அவர், "நாட்டில் மின்வெட்டுப் பிரச்னை, டெல்டா மாவட்டத்தில் ... மேலும் பார்க்க

தனியார்மயம்: `முறையான கழிப்பறை வசதிகூட இல்லை' - தூய்மைப் பணியாளர்களின் குமுறல்களுக்கு பதில்?

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட 12 மாநகராட்சிகளில் தனியார் நிறுவனங்களிடம் தூய்மைப் பணிக்கான ஆலோசனைகளுக்காக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளதா... மேலும் பார்க்க

'தேங்க்யூ CM சார்' - மறுக்கப்பட்ட சாமி கும்பிடும் உரிமை; கோயில் நுழைவு மேற்கொண்ட பட்டியலின மக்கள்

பட்டியலின மக்கள் வழிபாடு செய்ய பல தலைமுறைகளாக மாற்று சமூகத்தினரால் தடை விதிக்கபட்டு இருந்த நிலையில், கரூர் மாவட்ட நிர்வாகத்தின் அதிரடி செயல்பாட்டால் பட்டியலின மக்கள் தடை நீங்கி, முதல் முறையாக கோயிலுக்... மேலும் பார்க்க

"அந்தச் சமயத்தில் சுவேந்து அதிகாரிதான் ஆறுதல் சொன்னார்" - TMC மஹுவா மொய்த்ரா

மேற்கு வங்கத்தில் சட்டசபைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு மம்தாவும் அவரது கட்சியும் நாளுக்கு நாள் சரிவைச் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா மேற்கு வங்க முதல்வர... மேலும் பார்க்க