செய்திகள் :

'முதல்வருக்கு ஒரு நியாயம் கவுன்சிலருக்கு ஒரு நியாயமா?' - மாநகராட்சியில் வெடித்த 'டெண்டர்' விவகாரம்!

post image

சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் கடந்த ஜூலை 29 ஆம் தேதி நடந்திருந்தது. இந்த கூட்டத்தில் 'லிமிடெட் டெண்டர்' தொடர்பான வாதத்தின் போது துணை மகேஸ் குமார் 'முதல்வருக்கு ஒரு நியாயம்...கவுன்சிலருக்கு ஒரு நியாயமா?' என கொதித்து பேசியிருந்தார்.

மகேஸ் குமார்
மகேஸ் குமார்

சிறுசிறு பணிகளுக்கான லிமிடெட் டெண்டர் முறையை தவெக ஆட்சியமைந்தவுடன் நிறுத்தி வைத்திருந்தனர். இதனால் மாநகராட்சியில் மக்களுக்கு தேவையான அடிப்படை பணிகளை கூட செய்ய முடியவில்லை என மாமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் குமுறியிருந்தனர்.

10 - 20 லட்சம் மதிப்பிலான லிமிடெட் டெண்டர்களை லோக்கலில் யார் நன்றாக வேலை செய்வார்களோ அவர்களுக்கு கொடுத்து மக்களுக்கு தேவையான வேலைகளை செய்து வந்தோம். ஆனால், இப்போது அப்படி லிமிடெட் டெண்டர்களை விட முடியவில்லை. கவுன்சிலருக்கான வார்டு மேம்பாட்டு நிதியையும் விடுவிக்காமல் இருப்பதால் மக்களுக்கான அடிப்படை பணிகளை கூட எங்களால் செய்ய முடியவில்லை என திமுக, அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கவுன்சிலர்கள் குறைகளை கூறியிருந்தனர்.

CM Vijay
CM Vijay

இதுசம்பந்தமாக துணை மேயர் மகேஸ் பேசுகையில், 'என்னுடைய வார்டிலேயே லிமிடெட் டெண்டர் இல்லாமல் பள்ளமான சாலைகளை சரி செய்ய முடியவில்லை. துணை மேயரின் வார்டிலேயே இப்படியா என மக்கள் கேட்கின்றனர். எனக்கு பதில் சொல்ல முடியவில்லை. முதல்வரின் பெரம்பூர் அலுவலகம் சமீபத்தில் புனரமைக்கப்பட்டு திறக்கப்பட்டது. அதற்கு மட்டும் லிமிடெட் டெண்டர் விட்டீர்களே. அது மட்டும் எப்படி சாத்தியப்பட்டது? முதல்வருக்கு ஒரு நியாயம் கவுன்சிலர்களுக்கு ஒரு நியாயமா?' என்றார். முதல்வரின் பெரம்பூர் அலுவலகம் புனரமைக்கப்பட விடப்பட்ட டெண்டர் கோப்புகளையும் அவையில் எடுத்து காட்டினார்

மாமன்ற கூட்டம்
மாமன்ற கூட்டம்

இதுசம்பந்தமாக பதிலளித்த ஆணையர் சமீரன், 'லிமிடெட் டெண்டர்கள் எங்கேயும் நிறுத்தி வைக்கப்படவில்லை. 10.06.2026 அன்று லிமிடெட் டெண்டர்களுக்கான வரைமுறைகள் வெளியிடப்பட்டது. அதை பின்பற்றி லிமிடெட் டெண்டர்களை விட எந்தத் தடையும் இல்லை' என்றார்

அடுத்தடுத்து வெளியாகும் ஊழல் குற்றச்சாட்டுகள்! - எப்படி எதிர்கொள்ளப்போகிறது திமுக?

செந்தில் பாலாஜி மீதான ஊழல் குற்றச்சாட்டு திமுக ஆட்சிக் காலத்தில், 2021 முதல் 2025 வரை டாஸ்மாக் நிறுவனத்தில் மதுபானங்கள் கொள்முதல், பார்களுக்கு உரிமம் வழங்குதல், ஊழியர்கள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு நடைம... மேலும் பார்க்க

தவெக: ``முதலில் மின்வெட்டுப் பிரச்னை; இப்போது மின்கட்டணத்தில் பிரச்னை" - ஸ்டாலின் விமர்சனம்

தமிழ்நாட்டில் கடந்த மே மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு ஜூலை மாதத்தில் வீட்டு மின் கட்டணம் வழக்கத்தை விடப் பல மடங்கு உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் மத்தியில் பரவலான புகார்கள் எழுந்தன. பில்லிங் செயல்பாட்டில... மேலும் பார்க்க

"கமிஷன் வரவில்லை; மணல் கொள்ளை நின்றுவிட்டது என அவர்களுக்குப் பொறுக்கவில்லை"- யாரைச் சொல்கிறார் வைகோ?

சென்னையில் நேற்று ஏபிஜே அப்துல் கலாம் தேசிய விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய மதிமுக தலைவர் வைகோ, ``பொறுக்கவில்லையே! ஆட்சி போய்விட்டதே, அதிகாரம் போய்விட்டதே, வரவேண... மேலும் பார்க்க

மாநிலப் பதவி கொடுக்கும் விஜய்; மாவட்டத்தைக் கேட்கும் விஜயபாஸ்கர் ஸ்கொயர்? - க்ளைமாக்ஸ் என்ன?

தவெக-வில் இணைந்த விஜயபாஸ்கர் ஸ்கொயருக்கு ஒரு மாதம் ஆகியும் கட்சிக்குள் பதவி கொடுக்காமல் வைத்திருந்த விஜய், விரைவில் அவர்களுக்கு முக்கிய பொறுப்பை வழங்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.விஜயபாஸ்கர் ஸ... மேலும் பார்க்க

திருவாரூர்: ``200 ஏக்கர் விளைநிலங்களை அழிப்பதற்கு தவெக அரசு அனுமதித்தது எப்படி?" - சீமான் காட்டம்

திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தானில் விளைநிலங்களை அழித்து முறைகேடாக அமைக்கப்படும் தனியார் சூரிய ஒளி மின் உற்பத்தி மையத்தை தமிழ்நாடு அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் த... மேலும் பார்க்க