செய்திகள் :

'எம்.ஜி.ஆரை இன ரீதியாக தமிழ்நாட்டில் தனிமைப்படுத்த பார்த்தார்கள், அப்போது கண்ணதாசன்.!' - வைரமுத்து

post image

கவிஞர் கண்ணதாசனின் நூற்றாண்டு விழா நேற்று (ஜூலை.30) சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு வளாகத்தில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய கவிஞர் வைரமுத்து, "தொழில்நுட்ப புரட்சி, தொலைபேசி கலாசாரம், சமூக ஊடகங்கள் வந்த பிறகு தமிழர்கள் தங்களது முன்னோடிகளை அதிகமாக மறக்கின்றனர். மறக்கடிக்கப்படுகின்றனர்.

உள்ளூர் கலாசாரத்தை அழிப்பதற்கு பல சர்வதேச நிறுவனங்கள் திட்டமிடுகின்றன. நமது முன்னோர்களை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் வரையில்தான் மொழி, கலாசாரம் இருக்கும். பாரம்பரியம் நிலைக்கும்.

கண்ணதாசன்
கண்ணதாசன்

கவிஞர் கண்ணதாசனின் கவிதைகளை பள்ளி, கல்லூரி பாடப் புத்தகங்களில் இடம் பெறச் செய்ய வேண்டும். சிவாஜி சிலை திறப்பு விழாவில் சொன்னேன். தமிழ்நாட்டில் 50-களில் பிறந்தவர்கள் நிச்சயம் 4 பேர்களால் பாதிக்கப்பட்டிருப்பார்கள்.

எம்.ஜி.ஆர், சிவாஜி, கலைஞர், கண்ணதாசன் இந்த நான்கு பேரில் ஒருவரின் பாதிப்புக்கூட இல்லாமல் ஒருவர் இருந்தால் அவர் தமிழ்நாட்டில் இல்லை என்று பொருள். இந்த நான்கு பேரின் பாதிப்பு இல்லாமல் இருக்க முடியாது.

இதில் எம்.ஜி.ஆர், சிவாஜி, கலைஞர் ஆகிய மூவருடனும் பணியாற்றியவர் கண்ணதாசன்.

எம்.ஜி.ஆருக்கு யார் செய்த உதவியை விடவும், கவிஞர் கண்ணதாசன் செய்த உதவி மிகப்பெரியது.

எம்.ஜி.ஆரை இன ரீதியாக தமிழ்நாட்டில் தனிமைப்படுத்த பார்த்தார்கள். 'எங்க ஊரிலேயே எம்.ஜி.ஆர் என்ன ஆளுங்க...அவர் மலையாளியாமே' என்று கூட சொல்லி இருக்கிறார்கள்.

எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆர்

கலைஞர்களைக் கூட சாதி வைத்து பார்க்கும் அவலம் தமிழ்நாட்டில் இருந்தது, இருக்கிறது என்று சொல்வதற்கும் நான் தயங்க மாட்டேன். எம்.ஜி.ஆரும் தமிழர் தான் என்று கண்ணதாசன் எழுதியிருக்கிறார்.

மலையாளிகள் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சேரன் இனத்தைச் சேர்ந்தவர்கள். ஆதிக்குடியில் இருந்து வந்தவர்கள் சேரன் இனத்தவர்கள். அதனால் நீங்கள் தமிழர் தான் என்று கூறி எம்.ஜி.ஆரை காப்பாற்றியவர் கண்ணதாசன்" என்று பேசியிருக்கிறார் வைரமுத்து.

Madhampatty Rangaraj: `ராகா ரங்கராஜுக்கு துணை நிற்பேன்!' - உண்மையை உடைத்த மாதம்பட்டி ரங்கராஜ்

ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிறிஸ்டில்டா, தானும் மாதம்பட்டி ரங்கராஜும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டதாகவும், தன்னுடைய குழந்தைக்கு அவர்தான் தந்தை எனவும் கூறியிருந்தார். பிறகு, தங்களுக்குள் நடந்த திருமணத... மேலும் பார்க்க

Kavin: 'என் தங்க மகனே & மகளே'- இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோரான கவின் - மோனிஷா தம்பதி

'லிஃப்ட்', 'டாடா' போன்ற படங்களின் வெற்றிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துக்கொண்டார் கவின். தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்தவர் இப்போது சினிமாவில் பரபரப்பான லைன் அப்களுட... மேலும் பார்க்க

The Odyssey: "என்றென்றும் வரலாற்றில் நிலைத்து நிற்கும்!" - 'தி ஒடிஸி' குறித்து கமல்ஹாசனின் பார்வை

நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் 'தி ஒடிஸி' படத்தைப் பாராட்டிப் பதிவிட்டிருக்கிறார். கிறிஸ்டோபர் நோலன் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களை கமல்ஹாசன் பெரிதும் விரும்பிப் பாராட்டுவார். The Ody... மேலும் பார்க்க

Simran: 10 வயது மாற்றுதிறனாளி சிறுமிக்கு செய்த உதவி! - சிம்ரன் செய்த நெகிழ்ச்சி செயல்

நடிகை சிம்ரன் 10 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை நேரில் சந்தித்து, அந்த சிறுமியின் கனவை நனவாக்கியிருக்கிறார். பிறக்கும்போதே ஒரு கையுடன் பிறந்து நிஷா, நடனத்தின் மீது ஆர்வம் கொண்டவர். எதையும் தடையாக நினைத... மேலும் பார்க்க

Raai Lakshmi: "புடவையில் நடித்தாலும் என்னை கிளாமரான நாயகியாகவே பார்க்கிறார்கள்!" - ராய் லக்ஷ்மி

'தர்மபுரி', 'தாம் தூம்', 'காஞ்சனா' உள்ளிட்ட படங்களில் நடித்து மக்களுக்குப் பரிச்சயமானவர் நடிகை ராய் லட்சுமி. முதுகுப் பகுதியில் ஏற்பட்டிருந்த காயம் காரணமாக சினிமாவிலிருந்து விலகி இரண்டு ஆண்டுகள் ஓய்வி... மேலும் பார்க்க

Sai Abhyankkar: 'என்னது அதுதான் இதுவா?' - விமர்சனங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்த சாய் அபயங்கர்!

'கருப்பு' படத்தில் சூர்யாவுக்கு அதிரடி ஹிட் பாடல்களைக் கொடுத்திருந்தார் இசையமைப்பாளர் சாய் அபயங்கர். அந்தப் படத்தைத் தாண்டி, தனுஷின் 'ஓம்', 'தமிழ் முருகன்', அல்லு அர்ஜுனின் 'ராக்கா', சூர்யாவின் 48-வது... மேலும் பார்க்க