செய்திகள் :

மும்பை: சூட்கேஸில் இருந்த 22 வயது பெண்ணின் சடலம்; 50 வயது லிவ்-இன் பார்ட்னர் சிக்கியது எப்படி?

post image

மும்பை அருகில் உள்ள ஷில் தைகர் கழிமுகப்பகுதியில் பாலத்திற்குக் கீழே டிராலி பேக் ஒன்று கேட்பாரற்று கிடந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் விரைந்து வந்து அந்தப் பேக்கைப் பறிமுதல் செய்து திறந்து பார்த்தபோது அதில் பெண் ஒருவரின் உடல் இருந்தது. அதனை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு இது குறித்து கொலை வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

அப்பெண்ணின் கையில் பி.வி.எஸ் என்று டாட்டூ வரையப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில் போலீஸார் விசாரித்து வந்தனர். விசாரணையில் அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் பிரியங்கா விஷ்வகர்மா (22) என்று அடையாளம் காணப்பட்டது. கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து டிராலியைக் கொண்டு வந்து போட்டது வினோத் ஸ்ரீனிவாஸ் (50) என்று தெரிய வந்தது.

கொலை
கொலை

அவரைப் பிடித்து சென்று விசாரித்தபோது கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். பிரியங்காவைக் கொலை செய்து உடலை ஒரு நாள் வீட்டில் வைத்திருந்துவிட்டு அதன் பிறகு டிராலி பேக்கில் அடைத்து கழிமுகப்பகுதிக்குக் கொண்டு வந்து பாலத்திலிருந்து கழிமுகப்பகுதியில் தூக்கி எறிந்ததாக போலீஸாரிடம் வினோத் தெரிவித்துள்ளார். பாலத்திற்குக் கீழேதான் டிராலி பேக் கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்கள் இரண்டு பேரும் 5 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தது வினோத்திடம் விசாரித்ததில் தெரிய வந்தது. சமீப காலமாக இருவரும் அடிக்கடி சண்டையிட்டு வந்தது தெரிய வந்துள்ளது.

சென்னை: `உங்க தம்பி தூக்கு போட்டு தற்கொலை செய்துட்டாரு’ - கணவரைக் கொன்று நாடகமாடிய மனைவி சிக்கினார்

சென்னை, கொடுங்கையூர், வெங்கடேஸ்வரா நகர் 2-வது தெருவில் குடியிருந்தவர் மணிகண்டன் (34). இவர், சொந்தமாக கார் வைத்து சில நிறுவனங்களுக்கு ஓட்டி வந்தார். இவரின் மனைவி சரண்யா. இந்தத் தம்பதியினருக்கு ஒரு மகனு... மேலும் பார்க்க

வேலூர்: பெண் சிசுவை கால்வாயில் வீசிய தந்தை, பாட்டி கைது; நல்லடக்கம் செய்த போலீஸ் - நடந்தது என்ன?

வேலூர் அரசு `பென்ட்லேண்ட்’ பல்துறை உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அருகிலுள்ள கழிவுநீர் கால்வாயில், நேற்று முன்தினம், பச்சிளம் பெண் சிசுவின் சடலம் மிதந்து கொண்டிருந்ததைப் பார்த்து பொது மக்கள் அதிர்ச்சியட... மேலும் பார்க்க

`ரூ.50 லட்சத்துக்கு ஆடம்பர பைக் கேட்டு ரகளை' - மகனை கம்பியால் அடித்துக்கொன்ற தந்தை

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த வஞ்சியூரைச் சேர்ந்தவர் வினயானந்த் (52). இவரது மகன் ஹிருத்திக்(28). ஹிருத்திக் ஆடம்பர பைக் வேண்டும் பெற்றோரிடம் தகராறு செய்துவந்தார். தொல்லை தாங்கமுடியாமல் லோன் எடு... மேலும் பார்க்க

`தூங்க கூட நேரம் கிடைக்கவில்லை’ - தண்ணீர் தொட்டியில் வீசி குழந்தையைக் கொன்ற தாய்

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் ரெட்டித்தோப்பு துணை மின்நிலையம் அருகிலுள்ள குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் அக்பர் பாஷா (27). ஷு கம்பெனி தொழிலாளி. இவரின் மனைவி அஸ்லியா தஸ்மின் (23). இவர்களுக்கு 5 வ... மேலும் பார்க்க

நெல்லை: 'வீட்டில ஒரு ரூபாய் இல்லை; இதுல இத்தன கேமரா!’ - கடுப்பான திருடன் எழுதி வைத்த கடிதம்!

நெல்லை புறநகர் பகுதியான பேட்டை, ஐஓபி காலனியைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் பால். 57 வயதான இவர் அந்தப் பகுதியில் கிறிஸ்துவ ஊழியம் செய்து வருகிறார். அவரது மகள் மதுரையில் உள்ள தனியார் வங்கியொன்றில் பணியாற்றி வருகி... மேலும் பார்க்க

கரூர் சம்பவம் : இரண்டாம் நாளாக சி.பி.ஐ முன்பு ஆஜரான த.வெ.க நிர்வாகிகள்! நடந்தது என்ன?

த.வெ.க கட்சி இந்தாண்டு செப்டம்பர் 27-ம் தேதி நடத்திய பிரசார கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு, 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, டெல்லி உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சிறப்பு புலனாய்வு குழு விச... மேலும் பார்க்க