செய்திகள் :

மும்பை: சூட்கேஸில் இருந்த 22 வயது பெண்ணின் சடலம்; 50 வயது லிவ்-இன் பார்ட்னர் சிக்கியது எப்படி?

post image

மும்பை அருகில் உள்ள ஷில் தைகர் கழிமுகப்பகுதியில் பாலத்திற்குக் கீழே டிராலி பேக் ஒன்று கேட்பாரற்று கிடந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் விரைந்து வந்து அந்தப் பேக்கைப் பறிமுதல் செய்து திறந்து பார்த்தபோது அதில் பெண் ஒருவரின் உடல் இருந்தது. அதனை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு இது குறித்து கொலை வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

அப்பெண்ணின் கையில் பி.வி.எஸ் என்று டாட்டூ வரையப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில் போலீஸார் விசாரித்து வந்தனர். விசாரணையில் அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் பிரியங்கா விஷ்வகர்மா (22) என்று அடையாளம் காணப்பட்டது. கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து டிராலியைக் கொண்டு வந்து போட்டது வினோத் ஸ்ரீனிவாஸ் (50) என்று தெரிய வந்தது.

கொலை
கொலை

அவரைப் பிடித்து சென்று விசாரித்தபோது கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். பிரியங்காவைக் கொலை செய்து உடலை ஒரு நாள் வீட்டில் வைத்திருந்துவிட்டு அதன் பிறகு டிராலி பேக்கில் அடைத்து கழிமுகப்பகுதிக்குக் கொண்டு வந்து பாலத்திலிருந்து கழிமுகப்பகுதியில் தூக்கி எறிந்ததாக போலீஸாரிடம் வினோத் தெரிவித்துள்ளார். பாலத்திற்குக் கீழேதான் டிராலி பேக் கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்கள் இரண்டு பேரும் 5 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தது வினோத்திடம் விசாரித்ததில் தெரிய வந்தது. சமீப காலமாக இருவரும் அடிக்கடி சண்டையிட்டு வந்தது தெரிய வந்துள்ளது.

திருப்பதி: `இது பட்டு இல்ல பாலிஸ்டர்' ரூ.54 கோடி மோசடி - சோதனையில் அதிர்ச்சி

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பட்டு துப்பட்டா வழங்கியதில் மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் திருப்பதி தேவஸ்தனம் போர்டு தலைவர் பி.ஆர்.நாயுடு, கோயிலுக்கு வழங்கப்படும் பட்டு துப்... மேலும் பார்க்க

குமரி: தனியார் ரிசார்ட்டில் பிறந்தநாள் விழா பெயரில் 'போதை கூடுகை'- 7 பேரை கைதுசெய்த குமரி போலீஸ்!

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே மருங்கூர் பேரூராட்சிக்கு உட்பட்ட இடத்தில் ஆற்றின் கரை ஓரமாக தனியாருக்கு சொந்தமான ரிசார்ட் இயங்கி வருகிறது. இங்கு தடை செய்யப்பட்ட உயர் ரக போதை பொருட்கள் பயன்படு... மேலும் பார்க்க

25 பேர் பலியான கோவா நைட் கிளப் தீ விபத்து; டெல்லி மருத்துவமனையில் உரிமையாளர் ஒருவர் கைது

சுற்றுலாவிற்கு மிகவும் புகழ்பெற்ற கோவாவில் கடந்த வாரம் ‘Birch by Romeo Lane’ என்ற நைட்க்ளப்பில் திடீரென இரவில் தீப்பிடித்ததில், சுற்றுலா பயணிகள் உட்பட 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இத்தீவிபத்து தொடர... மேலும் பார்க்க

தண்ணீரா? ஆசிட்டா? முகமூடி கொள்ளையனை விரட்டிய 70 வயது மூதாட்டி - வைரல் வீடியோ

சிவகாசி பழனியாண்டவர்புரம் காலனியில் வசிப்பவர் மகேஸ்வரி (70). இவர் தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். அதிகாலை 5 மணியளவில் தனது வீட்டின் முன்பக்கக் கதவைத் திறந்து வாசல் பகுதியைத் தண்ணீர் தெளித்துச்... மேலும் பார்க்க

`அவனுடன் இருப்பது போன்று என்னுடனும்.!’ - பெண்ணுக்கு தொல்லை; நண்பனை வெட்டி போர்வெல்லில் போட்ட வாலிபர்

குஜராத் மாநிலம் மேற்கு கட்ச் பகுதியில் நாகத்ரனா எனும் பகுதியின் அருகில் உள்ள முரு என்ற கிராமத்தை சேர்ந்த ரமேஷ்(20) என்ற வாலிபரை கடந்த சில நாட்களாக காணவில்லை. இதையடுத்து ரமேஷ் சகோதரர் இது குறித்து போலீ... மேலும் பார்க்க

மாணவிக்கு பாலியல் தொல்லை: திருப்பதி சமஸ்கிருத பல்கலைக்கழக பேராசிரியர்கள் கைது

பாலியல் வன்முறைஆந்திரா மாநிலம் திருப்பதியில் தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர்கள் லட்சுமண் குமார், சேகர் ரெட்டி ஆகியோர் ஒடிசாவைச் சேர்ந்... மேலும் பார்க்க