செய்திகள் :

`மேகேதாட்டுவில் அணை கட்டக் கூடாது!’ - புதுச்சேரி சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேறிய தீர்மானம்

post image

மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம், தி.மு.க எம்.எல்.ஏக்கள் செந்தில்குமார், கார்த்திகேயன், த.வெ.க ஆதரவு எம்.எல்.ஏ நேரு, ல.ஜ.க எம்.எல்.ஏ ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் உள்ளிட்டவர்கள் புதுச்சேரி சட்டப்பேரவையில் தனிநபர் தீர்மானம் கொண்டு வந்தனர்.

அதை அரசுத் தீர்மானமாக ஏற்றுக்கொண்டு முன்மொழிந்து பேசிய முதல்வர் ரங்கசாமி, ``புதுச்சேரி மாநில மக்களின் நலனுக்கு எதிராகவும், உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு மாற்றாகவும் மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது. மேலும், அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கைகளுக்கு இந்த சட்டப்பேரவை தனது கண்டனத்தையும், எதிர்ப்பையும் பதிவு செய்கிறது.

புதுச்சேரி சட்டப்பேரவை | முதல்வர் ரங்கசாமி

மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு எடுத்துள்ள நடவடிக்கை, புதுச்சேரி மாநில மக்களின் நலனுக்கு எதிரானது. புதுச்சேரி உள்ளிட்ட காவிரி பாசன மாநிலங்களின் முன் அனுமதி பெறாமல் மேகேதாட்டுவில் அணை கட்டுவது ஏற்றுக் கொள்ள முடியாது.

அதனால் இந்த விவகாரத்தில் கர்நாடக அரசு மேலும் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருக்க, மத்திய அரசு உடனடி தடை விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், காரைக்கால் பகுதி விவசாயிகள் நலனைப் பாதுகாக்கவும், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி புதுச்சேரிக்கு வழங்கப்பட்ட நீராதார உரிமைகளைப் பாதுகாக்கவும், அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஆதரவு அளிப்பதென்று இந்த சட்டப்பேரவை ஒரு மனதாக தெரிவித்துக் கொள்கிறது" என்றார்.

திடீர் விசிட்; கண்ணாடி வழங்கிய முதல்வர் விஜய்; இறுகப் பற்றி நெகிழ்ந்த மூதாட்டி! | Photo Album

Vijay: ```கண்ணு உன்ன ரொம்ப பிடிக்கும்'னு சொன்னேன்!" - முதல்வர் சர்ப்ரைஸ் விசிட்; மூதாட்டி நெகிழ்ச்சி மேலும் பார்க்க

Vijay: ```கண்ணு உன்ன ரொம்ப பிடிக்கும்'னு சொன்னேன்!" - முதல்வர் சர்ப்ரைஸ் விசிட்; மூதாட்டி நெகிழ்ச்சி

ஒவ்வோர் ஆண்டும் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் தமிழ்நாட்டிற்கான காவிரி நீரை கர்நாடகா அரசு திறந்துவிட மறுத்ததால் மேட்டூர் அணையில் போதும... மேலும் பார்க்க

கிண்டி கலைஞர் பல்நோக்கு மருத்துவமனை மருத்துவமனை: ஆய்வுக்கு வந்த குரங்குகள் - கண்டுகொள்ளுமா அரசு?

சென்னை கிண்டியில் உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்புடன் உருவாக்கப்பட்டது கலைஞர் பல்நோக்கு மருத்துவமனை.தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான ஏழை எளிய நோயாளிகள் தங்களின் உயிரைக் காப்பாற்ற... மேலும் பார்க்க

FQL மோசடி: இளைஞர் தற்கொலை; 'தடுக்கத் தவறிய காவல்துறை பொறுப்பேற்க வேண்டும்' - அன்புமணி ராமதாஸ்

எப்.க்யூ.எல் (FQL) நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்த திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் இராசு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் இந்த சம்பவம... மேலும் பார்க்க

`சரியும் ராகுல் பிம்பம்; திக்குமுக்காடும் காங்கிரஸ்?' மாணிக்கம் தாகூர், விஜய் சந்திப்பு; பின்னணி!

பிரதமர் வேட்பாளர் - விஜய்நடிகராக இருந்து அரசியல் தலைவராக உருவெடுத்த த.வெ.க தலைவர் சி.ஜோசப் விஜய், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார். இந்த நிலையில், சமீபத்தி... மேலும் பார்க்க

கழிவுகள் கொட்டும் இடமாக மாறிய வாழவாய்க்கால்: கேள்விக்குறியான சுகாதாரம்; முகம்சுளிக்கும் மக்கள்!

திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் பிரதான சாலையையொட்டி அமைந்துள்ள வாழவாய்க்கால் பகுதியில் பல்வேறு வகையான கழிவுகள் கொட்டப்படுவதால், அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு வருவதாக பொதுமக... மேலும் பார்க்க