செய்திகள் :

"Excellent, சட்டமன்றத்தில் தனக்குக் கிடைக்கும் நேரத்தை..!"- சௌமியா அன்புமணியைப் பாராட்டிய கமல்ஹாசன்

post image

பாமக எம்எல்ஏ செளமியா அன்புமணியை நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் பாராட்டி இருக்கிறார்.

சட்டமன்றத்தில் மக்களின் பிரச்னைகளைச் சரியான தரவுகளோடு சௌமியா அன்புமணி பேசி வருகிறார். பலரும் அவரைப் பாராட்டி வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று துணை சபாநாயகர் ரவிசங்கரும் சட்டமன்றத்தில், “வரலாற்று சிறப்புமிக்க இந்தப் பேரவையில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் எப்படி இந்த அவையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்?

சௌமியா அன்புமணி
சௌமியா அன்புமணி

அந்த 10 நிமிடங்களை எப்படிப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்? தன்னுடைய தொகுதி மக்களுக்கு என்னென்ன சொல்ல வேண்டும் என்பதை செளமியா அன்புமணியிடம் இருந்து நாம் எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டும்.

தேவையில்லாத சர்ச்சைகள், தேவையில்லாத இடைச்சொற்கள் இதெல்லாம் இல்லாமல் முழுக்க முழுக்க 100 சதவீதம் சமூதாய ரீதியாகதான் அவர் பேசுகிறார்” என்று செளமியா அன்புமணியைப் பாராட்டி பேசியிருந்தார்.

தற்போது நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் பாராட்டி இருக்கிறார்.

செளமியா அன்புமணி
செளமியா அன்புமணி

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "Excellent. சட்டமன்றத்தில் தனக்குக் கிடைக்கும் நேரத்தை மிகச் சரியாகவும், துல்லியமான தகவல்களோடும் மக்கள் நலனுக்காகப் பயன்படுத்தும் சகோதரி சௌமியா அன்புமணி அவர்களைப் பாராட்டுகிறேன்" என்று பதிவிட்டிருக்கிறார்.

கிண்டி கலைஞர் பல்நோக்கு மருத்துவமனை மருத்துவமனை: ஆய்வுக்கு வந்த குரங்குகள் - கண்டுகொள்ளுமா அரசு?

சென்னை கிண்டியில் உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்புடன் உருவாக்கப்பட்டது கலைஞர் பல்நோக்கு மருத்துவமனை.தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான ஏழை எளிய நோயாளிகள் தங்களின் உயிரைக் காப்பாற்ற... மேலும் பார்க்க

FQL மோசடி: இளைஞர் தற்கொலை; 'தடுக்கத் தவறிய காவல்துறை பொறுப்பேற்க வேண்டும்' - அன்புமணி ராமதாஸ்

எப்.க்யூ.எல் (FQL) நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்த திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் இராசு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் இந்த சம்பவம... மேலும் பார்க்க

`சரியும் ராகுல் பிம்பம்; திக்குமுக்காடும் காங்கிரஸ்?' மாணிக்கம் தாகூர், விஜய் சந்திப்பு; பின்னணி!

பிரதமர் வேட்பாளர் - விஜய்நடிகராக இருந்து அரசியல் தலைவராக உருவெடுத்த த.வெ.க தலைவர் சி.ஜோசப் விஜய், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார். இந்த நிலையில், சமீபத்தி... மேலும் பார்க்க

கழிவுகள் கொட்டும் இடமாக மாறிய வாழவாய்க்கால்: கேள்விக்குறியான சுகாதாரம்; முகம்சுளிக்கும் மக்கள்!

திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் பிரதான சாலையையொட்டி அமைந்துள்ள வாழவாய்க்கால் பகுதியில் பல்வேறு வகையான கழிவுகள் கொட்டப்படுவதால், அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு வருவதாக பொதுமக... மேலும் பார்க்க

காமராஜருக்கு மெரினாவில் இடம் மறுக்கப்பட்டதா? - காங்கிரஸ் MLA குற்றசாட்டிற்கு தங்கம் தென்னரசு பதிலடி

"முன்னாள் முதல்வர் காமராஜர் மறைந்த போது அவரை நல்லடக்கம் செய்ய சென்னை மெரினா கடற்கரையில் திமுக அரசு இடம் தர மறுத்தது” என காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் தாரகை கத்பர்ட் நேற்று குற்றம்சாட்டிருந்தார். ... மேலும் பார்க்க