செய்திகள் :

`மேடை ஏறலாம், வசனம் பேசலாம்... ஆனால்.!' - விஜய்க்கு வானதி சீனிவாசன் சவால்

post image

கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், “திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவிட்டும் மாநில அரசு அதை நிறைவேற்றாமல் இருக்கிறது. எந்த முகாந்திரமும் இல்லாமல் திமுகவினர் அதை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

வானதி சீனிவாசன்

சட்டம் ஒழுங்கு பிரச்னை என்று பொய்யான காரணங்களை கூறுகிறார்கள். தமிழர்களின் அடையாளங்களை அழிக்கிற விதமாக திராவிட மாடல் திமுக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

திமுக-வினரின் நோக்கமே இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்த வேண்டும், இந்து கோயில்களுக்கு உரிய மரியாதை கொடுக்கக் கூடாது என்பது தான். அது அவர்களின் ரத்தத்தில் ஊறியுள்ளது. ஆன்மிக நம்பிக்கையை எந்த அரசியல் சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது.

முதல்வர் ஸ்டாலின்

ஊழல்வாதிகளை மிரட்டி தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் கூறுகிறார். இவ்வளவு பேசும் முதலமைச்சர் அவரது அமைச்சரவையில் உள்ள கே.என் நேரு மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது ஊழலாக தெரியவில்லையா.

முதலமைச்சர் தன் அருகில் இருப்பவர்களை பார்த்துவிட்டு பேசினால் நியாயமாக இருக்கும். ஊழல் வழக்கிற்காக பதவியில் இருந்த அமைச்சரை வீட்டிற்கு அனுப்பிய பெருமைக்குரியவர் முதலமைச்சர் ஸ்டாலின் தான். அவருக்கு எங்களை பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது.

விஜய்

விஜய் என்னதான் புது புது வார்த்தைகளால் பேசினாலும், அல்டிமேட்டாக திமுகவை வீழ்த்தப் போவது தேஜகூ தான். மேடை ஏறலாம், வசனம் பேசலாம், கூட்டத்தையும் காட்டலாம். ஆனால் திமுகவை வீழ்த்தும் சக்தி எங்களுக்கு தான் இருக்கிறது” என்றார்.

விஜய்க்காக அலகு குத்தி, கிரேனில் தொங்கி சாகசம்; தவெக தொண்டர் கைது; இன்ஸ்பெக்டரைக் கண்டித்த டிஐஜி

வேலூர் அகரம்சேரியில், நேற்று நடைபெற்ற த.வெ.க கூட்டத்தில் விஜய் கலந்துகொண்டார். சென்னையிலிருந்து சாலை மார்க்கமாக வேலூர் வந்த விஜய்க்கு வழிநெடுக த.வெ.க தொண்டர்களும், ரசிகர்களும் வரவேற்பு கொடுத்தனர்.வெட்... மேலும் பார்க்க

`எந்த பிரச்னைக்கும் இடம் கொடுக்காமல்... எங்கள் இலக்கு.!' - தேர்தலில் போட்டியிடாதது குறித்து தினகரன்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 78-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை கே.கே நகர் பகுதியில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா திருவுருவ சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன... மேலும் பார்க்க

பீகார்: கல்வி நிறுவனங்களுக்கு அருகில் இறைச்சி விற்கத் தடை; பாஜக கூட்டணி அரசு சொல்லும் காரணம் என்ன?

பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி ஆட்சி, அம்மாநிலத்தில் சில பொது இடங்களில் இறைச்சி மற்றும் மீன் விற்பனையைத் தடை செய்ய முடிவு செய்திருக்கிறது. பொது சுகாதாரம், சுற்றுச்சூழல் ப... மேலும் பார்க்க

"ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10,000" - 3ம் கட்ட வாக்குறுதியை வெளியிட்டு எடப்பாடி பழனிசாமி அதிரடி

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிகொண்டிருக்கிறது. இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பேரணி, பிரசாரம், பொதுக்கூட்டம், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் என அரசியல் களம் அனல் பறக்கிறது.இது ஒருபுறம் இருக்... மேலும் பார்க்க