செய்திகள் :

நெல்லை: “திமுக ஆட்சியில் எதிர்க்கட்சிகளின் குரல்வளை நெரிக்கப்படுகிறது” - நயினார் நாகேந்திரன்

post image

நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், “திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற முடியாத சூழல் குறித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தும்கூட முருக பக்தர்கள் மத்தியில் ஒரு மன வருத்தம் நீடிக்கிறது.

எனவே, அந்த மனக்குறையைப் போக்கிடவும் இறைவனை வேண்டிக்கொள்ளவும் விளக்கேற்றும் நிகழ்வினை ஒருங்கிணைத்துள்ளோம். தமிழகமெங்கும் வாழும் முருக பக்தர்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் குத்துவிளக்கேற்றி ’கந்த சஷ்டி கவசம்’ படிக்க வேண்டுமென்று முக்கிய வேண்டுகோளை விடுத்துள்ளோம்.

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

வரும் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது உறுதி. தி.மு.க கூட்டணியின் தொகுதிப் பங்கீடுகள் மின்னல் வேகமா? முயல் வேகமா? என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே அந்தக் கூட்டணியில் இருப்பவர்கள்தான் இருக்கிறார்கள். புதிதாக யாரும் சேரவில்லை.

தமிழகத்தில் நடந்து வரும் தி.மு.க ஆட்சியில் எதிர்க்கட்சிகளின் குரல்வளை நெரிக்கப்படுகிறது. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பேசும் கருத்துக்கள் மறைக்கப்படுகின்றன. அமைச்சர் நேரு உள்ளிட்ட பல அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை மற்றும் ஊழல் தடுப்புப்பிரிவின் வழக்குகள் உள்ளன. நீதிமன்றமே சில அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்யக் கூறியுள்ளது.

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

ஆனால், இந்த அரசு ஒருதலைப்பட்சமாகச் செயல்படுகிறது. பிரதமருக்கு எதிராக தென்காசியில் பேசிய முக்கியத் தலைவரை இதுவரை இந்த அரசு கைது செய்யவில்லை. ஆனால், பா.ஜ.கவினரைச் சிறிய காரணங்களுக்காகக் கூட கைது செய்கிறார்கள்.

விரைவில் எங்களது கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் பேசி தொகுதிப் பங்கீடு குறித்து அறிவிப்போம். டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட பல தலைவர்கள் எங்களுடன் இணைந்தே உள்ளனர். வரும் தேர்தலில் ஒரு பலமான மாற்றத்தை மக்கள் பார்ப்பார்கள்” என்றார்.

`எந்த பிரச்னைக்கும் இடம் கொடுக்காமல்... எங்கள் இலக்கு.!' - தேர்தலில் போட்டியிடாதது குறித்து தினகரன்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 78-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை கே.கே நகர் பகுதியில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா திருவுருவ சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன... மேலும் பார்க்க

பீகார்: கல்வி நிறுவனங்களுக்கு அருகில் இறைச்சி விற்கத் தடை; பாஜக கூட்டணி அரசு சொல்லும் காரணம் என்ன?

பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி ஆட்சி, அம்மாநிலத்தில் சில பொது இடங்களில் இறைச்சி மற்றும் மீன் விற்பனையைத் தடை செய்ய முடிவு செய்திருக்கிறது. பொது சுகாதாரம், சுற்றுச்சூழல் ப... மேலும் பார்க்க

"ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10,000" - 3ம் கட்ட வாக்குறுதியை வெளியிட்டு எடப்பாடி பழனிசாமி அதிரடி

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிகொண்டிருக்கிறது. இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பேரணி, பிரசாரம், பொதுக்கூட்டம், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் என அரசியல் களம் அனல் பறக்கிறது.இது ஒருபுறம் இருக்... மேலும் பார்க்க

`விதிமுறைகளை மீறிய தவெக-வினர்; குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது!’ - வேலூர் மாவட்டக் காவல்துறை

வேலூர் அகரம்சேரியில், த.வெ.க நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நேற்று நடைபெற்றது. த.வெ.க தலைவர் விஜய் பங்கேற்று முப்பத்தைந்து நிமிடங்கள் பேசினார். அதற்கு முன்னதாக, காவல்துறையினர் அனுமதி கொடுப்பதில் காலத... மேலும் பார்க்க