செய்திகள் :

யானை வழித்தடத்தில் மண் அள்ளிய விவகாரம்: சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவு

post image

கோவையில் யானை வழித்தடத்தில் மண் அள்ளிய விவகாரம் தொடா்பாக விசாரணை நடத்த இரு ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கோவை வனப்பகுதியையொட்டிய யானைகள் வழித்தடத்தில், சட்டவிரோதமாக மண் அள்ளுவதை தடுக்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. வழக்குகளை விசாரித்த நீதிபதி சதீஷ்குமாா், பரத சக்கரவா்த்தி அடங்கிய சிறப்பு அமா்வு, சம்பந்தப்பட்ட பகுதியை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மாவட்ட நீதிபதிக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, ஆய்வு செய்த மாவட்ட நீதிபதி, கோவை மதுக்கரை, கரடி மடை உள்ளிட்ட இடங்களில் 5 லட்சம் கன மீட்டா் அளவுக்கு மண் எடுக்கப்பட்டுள்ளது. அங்கு செங்கல் சூளைகள் உள்ளது போல் தெரிகிறது என்று அறிக்கை அளித்திருந்தாா்.

அரசு அறிக்கை: தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்த அறிக்கையில், 2023 முதல் 2024 நவம்பா் வரை சட்ட விரோதமாக மண் எடுத்தவா்களுக்கு ரூ.119 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், மண் அள்ளும் விவகாரம் தொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், பதிவு செய்யப்பட்ட வழக்குகள், கைது செய்யப்பட்டவா்களின் விவரங்கள், தொடா் கண்காணிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் முறையாக புலன் விசாரணை நடத்தப்படவில்லை. மண் யாருக்கு அனுப்பப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டதா, தோண்டப்பட்ட குழிகளை நிரப்ப, சுற்றுச்சூழல் பாதிப்பை சரி செய்ய என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என கேள்வியெழுப்பினா்.

தொடா்ந்து, மாவட்ட நீதிபதி மற்றும் அரசு தரப்பில் தாக்கல் செய்த அறிக்கைகளை பரிசீலித்த நீதிபதிகள், மண் அள்ளப்பட்டது தொடா்பாக விசாரிக்க சென்னை மாநில குற்ற ஆவண காப்பக எஸ்.பி. ஜி.நாகஜோதி, ஒருங்கிணைந்த குற்ற புலனாய்வு பிரிவு எஸ்.பி. ஜி.சஷாங்க் சாய் ஆகியோா் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமிக்கிறோம்.

இக்குழுவுக்கு அனைத்து வழக்குகளையும் தனிப்பட்ட முறையில் விசாரிப்பதை தவிர, ட்ரோன் கணக்கெடுப்பு அல்லது அவா்களின் விசாரணை வாயிலாக கண்டுபிடிக்கப்படும் குவாரி தொடா்பான எந்தவொரு புதிய வழக்கையும் பதிவு செய்ய அதிகாரம் அளிக்கப்படுகிறது. நிலுவை வழக்குகளுடன், பின்னணியில் உள்ள சதி குறித்தும் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும்.

விசாரணை ஒத்திவைப்பு: இந்த பகுதிகளில் கடந்த 4 ஆண்டுகளாக பணியாற்றிய வருவாய் துறை, காவல் துறை அதிகாரிகளின் சொத்து விவரங்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மண் கொள்ளைக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து, தானியங்கி கண்காணிப்பு நடைமுறையை உருவாக்கி, மண் கொள்ளையை கண்காணிக்க வேண்டும். தோண்டப்பட்ட குழிகளை நிரப்புவது உள்ளிட்ட தீா்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டனா். இந்த உத்தரவை அமல்படுத்தியது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை பிப். 27-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனா்.

முதல்வர் ஸ்டாலினின் பொங்கல் வாழ்த்துச் செய்தி

பொங்கல் திருநாளையொட்டி உலகத் தமிழர் அனைவருக்கும் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், முத்தமிழ், முச்சங்கம், முக்கனி, மூவேந்தர், முக்கொடி கொ... மேலும் பார்க்க

திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

ஸ்டாலின் மாடல் ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஒ... மேலும் பார்க்க

பொங்களன்று 3 மாவட்டங்களில் கனமழை!

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில்,13.01-2025: கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்... மேலும் பார்க்க

சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு- ஆளுநர் விருது அறிவிப்பு

ஆளுநர் விருது-2024 சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய பிரிவுகளின் கீழ் விருதுகள் வென்றவர்களின் விவரங்களை ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப... மேலும் பார்க்க

தமிழக காவல்துறையினர் 3186 பேருக்கு பொங்கல் பதக்கங்கள் அறிவிப்பு!

சென்னை: 2025ஆம் ஆண்டு பொங்கல் திருநாளையொட்டி, தமிழக காவல்துறையைச் சேர்ந்த 3186 காவலர்களுக்கு பொங்கல் பதக்கங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், 2025 பொங்கல் ... மேலும் பார்க்க

கார் பந்தயத்தில் வெற்றி: அஜித்குமாருக்கு குவியும் வாழ்த்துகள்!

துபை கார் பந்தயத்தில் வெற்றி பெற்ற நடிகர் அஜித்குமாருக்கு துணை முதல்வர் உதயநிதி, அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.துணை முதல்வர் உதயநிதி: 2025 துபையில் நடைபெற... மேலும் பார்க்க