செய்திகள் :

ரயிலில் தள்ளி மாணவி கொலை: குற்றவாளியின் தண்டனையை குறைத்த உயர் நீதிமன்றம் - காரணம் என்ன?

post image

தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவங்களில் ஒன்று, பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி ரயில் முன் தள்ளி கொலை செய்யப்பட்ட வழக்கு. இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட வாலிபருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை, ஆயுள் தண்டனையாகக் குறைத்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை பரங்கிமலை காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் கல்லூரி மாணவி சத்ய பிரியா. அதே குடியிருப்பில் வசித்த சதீஷ் என்பவரும் சத்யபிரியாவும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

புறநகர் மின்சார ரயில்
புறநகர் மின்சார ரயில்

சத்யபிரியாவின் பெற்றோர் இந்தக் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், அவர் சதீஷுடன் பேசுவதைத் தவிர்த்தார். இதனால் சதீஷ் ஆத்திரத்தில் இருந்தார்.

இந்தச் சூழ்நிலையில், 2022-ஆம் ஆண்டு அக்டோபர் 13-ஆம் தேதி கல்லூரிக்குச் செல்வதற்காக சத்யபிரியா பரங்கிமலை ரயில் நிலையத்துக்கு வந்தார். அப்போது அங்கு வந்த சதீஷ், ரயில் வந்துகொண்டிருந்தபோது சத்யபிரியாவை தண்டவாளத்தில் தள்ளிவிட்டார். இதில் ரயில் மோதி, அவர் உடல் துண்டு துண்டாகச் சிதறியது.

இந்த வழக்கில் சதீஷ் கைது செய்யப்பட்டார். வழக்கை விசாரித்த சென்னை மகளிர் நீதிமன்றம், 2024-ஆம் ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி சதீஷுக்குத் தூக்குத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

இந்தத் தண்டனையை உறுதி செய்வதற்காக உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதேசமயம், இந்தத் தீர்ப்பை எதிர்த்து சதீஷும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் என். சதீஷ்குமார், எம். ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பின்வருமாறு தீர்ப்பளித்தனர், ``சதீஷுக்குக் கீழமை நீதிமன்றம் வழங்கிய தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கிறோம்.

உயர் நீதிமன்றம்
உயர் நீதிமன்றம்

எனினும், அவர் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையை நிறைவு செய்யும் வரை, எந்தவிதமான தண்டனைக் குறைப்பும் செய்யப்பட்டு முன்கூட்டியே விடுதலை செய்யப்படக் கூடாது. அவரது வயது மற்றும் எதிர்காலத்தில் மனம் மாறி திருந்துவதற்கு வாய்ப்பு இருக்கலாம் என்பதன் அடிப்படையில் இந்த முடிவை நாங்கள் எடுத்துள்ளோம்" என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கின்றனர்.

`பொய் வழக்கு; தமிழ்நாடு உள்துறை ரூ.8 லட்சம் இழப்பீடு கொடுக்க வேண்டும்’ - உயர் நீதிமன்றம் அதிரடி

உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரைச் சேர்ந்த சரத்குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், "கடந்த 2017 ஆம் ஆண்டில் வழிப்பறி செய்ய திட்டமிட்டதாக நான் உட்பட 5 பேர் மீது மதுக்கூர் போல... மேலும் பார்க்க

Surya Kant: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்ற சூர்ய காந்த்; மோடி, அமித் ஷா பங்கேற்பு

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த பி.ஆர். கவாய் பதவிக்காலம் நவம்பர் 24-ம் தேதியுடன் முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து அடுத்த உச்ச நீதிமன்ற நீதிபதியாக சூர்யா காந்த் இன்று பதவியேற்றார். உச்ச நீதிமன... மேலும் பார்க்க

``என் தீர்ப்புகளில் மிக முக்கியமானது" - புல்டோசர் வழக்கு குறித்து பகிர்ந்த பி.ஆர்.கவாய்

உச்ச நீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பணியாற்றிய பி.ஆர். கவாய் நாளையுடன் ஓய்வு பெற உள்ளார். அதனால் நேற்று கடைசி வேலை நாளின்போது, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் (SCBA) பிரிவு உபசார விழா நடைப... மேலும் பார்க்க

`கூட்டத்தினரின் பாதுகாப்புக்கு ஏற்பாட்டாளர்களே முழு பொறுப்பு’ - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு

அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்களுக்கு வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.அதில் பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கு, திட்டமிடுவதற்கு,... மேலும் பார்க்க

மசோதா : குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகளும், உச்ச நீதிமன்றத்தின் பதில்களும் | முழு விவரம்

ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர், மசோதாக்கள் மீது முடிவெடுக்க கால வரம்பு நிர்ணயத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்த நிலையில், அதன் மீது குடியரசுத் தலைவர் 14 கேள்விகளை எழுப்பியிருந்தார்.அந்த 14 ... மேலும் பார்க்க

`ஒரு மாநிலத்துக்கு இரு அதிகார அமைப்புகளை ஏற்க முடியாது’ - உச்ச நீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 சட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி நீண்டகாலமாகக் கிடப்பில் போட்டதை எதிர்த்து, தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.அந்த ... மேலும் பார்க்க