செய்திகள் :

ரயிலில் தள்ளி மாணவி கொலை: குற்றவாளியின் தண்டனையை குறைத்த உயர் நீதிமன்றம் - காரணம் என்ன?

post image

தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவங்களில் ஒன்று, பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி ரயில் முன் தள்ளி கொலை செய்யப்பட்ட வழக்கு. இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட வாலிபருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை, ஆயுள் தண்டனையாகக் குறைத்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை பரங்கிமலை காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் கல்லூரி மாணவி சத்ய பிரியா. அதே குடியிருப்பில் வசித்த சதீஷ் என்பவரும் சத்யபிரியாவும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

புறநகர் மின்சார ரயில்
புறநகர் மின்சார ரயில்

சத்யபிரியாவின் பெற்றோர் இந்தக் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், அவர் சதீஷுடன் பேசுவதைத் தவிர்த்தார். இதனால் சதீஷ் ஆத்திரத்தில் இருந்தார்.

இந்தச் சூழ்நிலையில், 2022-ஆம் ஆண்டு அக்டோபர் 13-ஆம் தேதி கல்லூரிக்குச் செல்வதற்காக சத்யபிரியா பரங்கிமலை ரயில் நிலையத்துக்கு வந்தார். அப்போது அங்கு வந்த சதீஷ், ரயில் வந்துகொண்டிருந்தபோது சத்யபிரியாவை தண்டவாளத்தில் தள்ளிவிட்டார். இதில் ரயில் மோதி, அவர் உடல் துண்டு துண்டாகச் சிதறியது.

இந்த வழக்கில் சதீஷ் கைது செய்யப்பட்டார். வழக்கை விசாரித்த சென்னை மகளிர் நீதிமன்றம், 2024-ஆம் ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி சதீஷுக்குத் தூக்குத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

இந்தத் தண்டனையை உறுதி செய்வதற்காக உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதேசமயம், இந்தத் தீர்ப்பை எதிர்த்து சதீஷும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் என். சதீஷ்குமார், எம். ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பின்வருமாறு தீர்ப்பளித்தனர், ``சதீஷுக்குக் கீழமை நீதிமன்றம் வழங்கிய தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கிறோம்.

உயர் நீதிமன்றம்
உயர் நீதிமன்றம்

எனினும், அவர் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையை நிறைவு செய்யும் வரை, எந்தவிதமான தண்டனைக் குறைப்பும் செய்யப்பட்டு முன்கூட்டியே விடுதலை செய்யப்படக் கூடாது. அவரது வயது மற்றும் எதிர்காலத்தில் மனம் மாறி திருந்துவதற்கு வாய்ப்பு இருக்கலாம் என்பதன் அடிப்படையில் இந்த முடிவை நாங்கள் எடுத்துள்ளோம்" என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கின்றனர்.

"ஆளுநரை அவமதிக்கும் வகையில் மாணவி நடந்து கொண்டது ஏற்புடையதல்ல" - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

"பல்கலை பட்டமளிப்பு விழாவில், ஆளுநரை அவமதிக்கும் வகையில் மாணவி நடந்து கொண்டது ஏற்புடையதல்ல, இதை தவிர்க்கும் வகையில் வழிகாட்டும் நெறிமுறைகளை உருவாக்க வேண்டும்" என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிக... மேலும் பார்க்க

"திருமண வயதை எட்டும் முன்னரே Live-in உறவில் இருக்கலாம்"- 18, 19 வயதினர் வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு

திருமண வயதை எட்டவில்லை என்றாலும் இரண்டு வயதுவந்த நபர்கள் மனம் விரும்பி 'லிவ்-இன்' உறவில் (Live-in Relationship) வாழ்வது அவர்களின் அரசியலமைப்புச் சட்ட உரிமை என ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: ``இன்றே மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும்" - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு

ஆண்டுதோறும் கார்த்திகை தீபம் தினத்தன்று திருப்பரங்குன்றம் மலையில் உச்சிப் பிள்ளையார் கோயிலின் தீபத் தூணில் தீபம் ஏற்றப்படும்.ஆனால், இந்த ஆண்டு கார்த்திகை தீபம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் ஏற்ற அனு... மேலும் பார்க்க

53 வயதில் திருமணமாகி 4 நாள்களில் பிரிவு; 14 ஆண்டுகள் போராடி ஜீவனாம்சம் பெற்ற பெண்

கணவன்–மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டு பிரிந்துவிட்டால், விவாகரத்துக்காக இருவரும் பல ஆண்டுகள் கோர்ட் படியேறுவது வழக்கமாக உள்ளது. மனைவியுடன் சில நாள்கள் மட்டுமே வாழ்ந்தாலும், விவாகரத்து ஏற்படும் போது கணவன்... மேலும் பார்க்க

``சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நியமனத்தில் BJP, RSS வழக்கறிஞர்களுக்கு கொலீஜியம் பரிந்துரை" - திருமா

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸுடன் நெருக்கமாக உள்ள வழக்கறிஞர்களை கொலீஜியம் பரிந்துரைப்பதாகவும், இதில் சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும் எனவும் வி.சி.க தலைவர் எம்.ப... மேலும் பார்க்க

`பொய் வழக்கு; தமிழ்நாடு உள்துறை ரூ.8 லட்சம் இழப்பீடு கொடுக்க வேண்டும்’ - உயர் நீதிமன்றம் அதிரடி

உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரைச் சேர்ந்த சரத்குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், "கடந்த 2017 ஆம் ஆண்டில் வழிப்பறி செய்ய திட்டமிட்டதாக நான் உட்பட 5 பேர் மீது மதுக்கூர் போல... மேலும் பார்க்க