செய்திகள் :

ராகுல் காந்தியின் தர்ணா அவரது தேசவிரோத முகத்தை மறைக்கும் ‘நாடகம்’ - ஜே.பி.நட்டா கடும் தாக்கு!

post image

நீட் வினாத்தாள் கசிவிற்காக டெல்லியில் மாணவர்கள் நடத்திய பேரணியில் பெல்லட் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தச் சம்பவத்தை எஃப்.ஐ.ஆராக பதிவு செய்யுமாறு இன்று டெல்லியில் தர்ணாவில் ஈடுபட்டார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.

இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா செய்தியாளர்களிடம், "இன்று ராகுல் காந்தி நடத்தும் தர்ணா போராட்டம் மாணவர்களுக்காகவோ அல்லது நீதிக்காகவோ நடத்தப்படுவது அல்ல.

அது காங்கிரஸ் கட்சியின் அரசியல் விரக்தியையும், ராகுல் காந்தியின் 'புகழ் வெளிச்சத்திற்காக ஏங்கும்' போக்கையும்தான் காட்டுகிறது.

காவல் நிலையத்தில் ராகுல் காந்தி
காவல் நிலையத்தில் ராகுல் காந்தி

இன்று 'வந்தே மாதரம்' பாடலுக்கு நேர்ந்த அவமதிப்பு விவகாரத்தில், காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் அனைத்துத் தரப்பிலிருந்தும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. தேசியப் பாடலை அவமதித்தது குறித்து காங்கிரஸ் கட்சியிடம் மக்கள் பதில் கேட்டு வருகிறார்கள்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் தேசியக்கொடி பொறிக்கப்பட்ட கேக்கை வெட்டுவதைப் பார்க்க முடிகிறது. தங்களின் இந்தத் தேசவிரோத முகத்தை மறைக்கவும், இந்த மிகப்பெரிய அசிங்கத்திலிருந்து மக்களின் கவனத்தைத் திருப்பவுமே ராகுல் காந்தி அவசர அவசரமாகக் காவல் நிலையத்தில் இந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.

ராகுல் காந்தி 'இதை' உணர வேண்டும்!

நாடு என்பது ஒரு குடும்பத்தின் 'பிடிவாத குணத்திலோ' அல்லது கேமராக்கள் மீதான அவர்களின் ஆசையிலோ இயங்கவில்லை.

மாறாக அரசியலமைப்பு, சட்டம் மற்றும் நீதித்துறை நடைமுறைகளின்படியே இயங்குகிறது என்பதை பாரதிய ஜனதா கட்சி தெளிவுபடுத்த விரும்புகிறது. மக்கள் தனது ஹிட் அண்ட் ரன் அணுகுமுறையையும், அரசியல் போலித்தனத்தையும் நன்றாகப் புரிந்து கொண்டுவிட்டார்கள் என்பதை ராகுல் காந்தி உணர வேண்டும்."

சர்க்கரை விலை ஏன் உயர்ந்தது? மத்திய அரசு சொன்ன காரணங்கள் இதோ! விலை உயர்வை தடுக்க 5 நடவடிக்கைகள்

இந்தியாவில் பண்டிகைகள் அடுத்தடுத்து வரிசைக் கட்டி நிற்பதால், சர்க்கரை தேவையைப் பூர்த்தி செய்ய மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதில் சில - சர்க்கரையை அதிகம் கையிருப்பில் வைத்திருக்... மேலும் பார்க்க

``ஓட்டத் தெரியாத ஒரு டிரைவரை நம்பி, மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்த ஒரு பேருந்தை.!" - துரைமுருகன்

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் கொடுக்கப்போவதாக நேற்று முன்தினம் (ஆகஸ்ட்.19) முதல்வர் விஜய் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்கு கடுமையான விமர்சனங்களும் எழுந்தன. திமுக உறுப்பினர்களுக்கு கார் வேண்டாம்... மேலும் பார்க்க

'227 எம்.எல்.ஏக்கள்; 396 கார்கள்; ரூ.89 கோடி; யாரிடமெல்லாம் கார் இல்லை? - MLA's Cars Detailed Report

சட்டமன்ற உறுப்பினர்கள் அத்தனை பேருக்கும் கார் கொடுக்கப்போவதாக அறிவித்திருக்கிறார் முதல்வர் விஜய். 'கோடிக்கணக்கான சொத்துகளை வைத்துக் கொண்டு ஏற்கனவே பல கார்களை வைத்திருக்கும் எம்.எல்.ஏக்களுக்கு மக்கள் வ... மேலும் பார்க்க

மேகதாது: `2027-ல் அடிக்கல் நாட்ட திட்டம்; இனியும் அலட்சியம் காட்டக் கூடாது!'- எச்சரிக்கும் அன்புமணி

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு தயாரித்து மத்திய அரசிடம் தாக்கல் செய்திருக்கிறது. உரிய அனுமதிகளை பெற்று அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற... மேலும் பார்க்க

'நான் உங்களின் ரசிகன்; உங்களைப் பார்க்கும்போது தனுஷ் சார்தான்..!'- பிரதீப் குறித்து சிவராஜ்குமார்

தமிழ் சினிமா கலைஞர்களைக் கொண்டாடும் 'ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2025' விழா கடந்த மாதம் (ஜூலை.3) நடைபெற்றது. இதில் சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருதை 'டூரிஸ்ட் ஃபேமிலி', படத்துக்காக அபிஷன் ஜீவிந்த்... மேலும் பார்க்க

’சொந்த கார் இல்லாத எம்.எல்.ஏ-க்களுக்கு மட்டுமே கார் வழங்கணும்’ – கார்த்தி சிதம்பரம்

கோவை விமான நிலையத்தில் சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”மக்கள் தொகையை அதிகரிக்கும் நோக்கில் அரசு திட்டங்கள் செயல்படுவதை நிறுத்த ... மேலும் பார்க்க