செய்திகள் :

'நான் உங்களின் ரசிகன்; உங்களைப் பார்க்கும்போது தனுஷ் சார்தான்..!'- பிரதீப் குறித்து சிவராஜ்குமார்

post image

தமிழ் சினிமா கலைஞர்களைக் கொண்டாடும் 'ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2025' விழா கடந்த மாதம் (ஜூலை.3) நடைபெற்றது.

இதில் சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருதை 'டூரிஸ்ட் ஃபேமிலி', படத்துக்காக அபிஷன் ஜீவிந்த் வென்றார்.

இந்த விருதை, கன்னட நடிகர் சிவராஜ்குமார் அபிஷன் ஜீவிந்திற்கு வழங்கினார்.

அபிஷன் ஜீவிந்த் - சிவராஜ்குமார்
அபிஷன் ஜீவிந்த் - சிவராஜ்குமார்

விருது வழங்கிய பிறகு மேடையில் பேசிய அவர், " 'டூரிஸ்ட் ஃபேமிலி' படம் பார்த்தப்போது மகிழ்ச்சியாக இருந்தது.

அந்தப் படத்தில் அவர் அருமையானக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அது நன்றாக இருந்தது.

முழுப்படத்தையும் அபிஷன் கொண்டு சென்ற விதம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அவரிடம் அபாரமான திறமை இருக்கிறது" என்று பாராட்டி இருக்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், "பிரதீப் இங்கு இருக்கிறார். அவருடைய எல்லாப் படங்களையும் நான் பார்த்திருக்கிறேன். நான் உங்களின் ரசிகன். எனக்கு தனுஷ் சார் ரொம்ப பிடிக்கும். நான் உங்களை பார்க்கும்போதெல்லாம் தனுஷ் சார் தான் ஞாபகத்துக்கு வருவார்.

பிரதீப் ரங்கநாதன்
பிரதீப் ரங்கநாதன்

நீங்கள் மிகச்சிறந்த நடிகர் மற்றும் நல்ல இயக்குநரும் கூட... இங்கு வந்தது மகிழ்ச்சி. ஆனந்த விகடன் ரொம்ப வருடங்களாகப் படித்துக்கொண்டிருக்கிறேன். நான் சென்னையில் தான் பிறந்தேன். அதனால் ஆனந்த விகடன் பற்றி எனக்கு தெரியும்" என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

மேகதாது: `2027-ல் அடிக்கல் நாட்ட திட்டம்; இனியும் அலட்சியம் காட்டக் கூடாது!'- எச்சரிக்கும் அன்புமணி

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு தயாரித்து மத்திய அரசிடம் தாக்கல் செய்திருக்கிறது. உரிய அனுமதிகளை பெற்று அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற... மேலும் பார்க்க

’சொந்த கார் இல்லாத எம்.எல்.ஏ-க்களுக்கு மட்டுமே கார் வழங்கணும்’ – கார்த்தி சிதம்பரம்

கோவை விமான நிலையத்தில் சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”மக்கள் தொகையை அதிகரிக்கும் நோக்கில் அரசு திட்டங்கள் செயல்படுவதை நிறுத்த ... மேலும் பார்க்க

ரயில் மோதி யானைகள் உயிரிழப்பதை தடுக்கும் ஏஐ தொழில்நுட்பம் – பின்பற்ற தயாரான பிற மாநிலங்கள்!

கோவையில் இருந்து கேரளாவிற்கு போத்தனூர், வாளையார் பகுதிகள் வழியாக இயக்கப்படும் ரயில்கள், மதுக்கரை வனப்பகுதி வழியாக செல்கின்றன. ரயில்கள் வந்து செல்வதற்கு வசதியாக ஏ, பி என இரண்டு ரயில் பாதைகள் அமைக்கப்பட... மேலும் பார்க்க

தொகுதி மறுவரையறை: ``ராகுல் காந்தி குறிப்பிட்ட அந்த 'எட்டப்பர்' விஜயா?" - திமுக எம்.பி தயாநிதிமாறன்

தென் மண்டல நிர்வாகக்குழு கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தலைமையில் கோவளத்தில் நேற்று நடந்தது. தென்னிந்திய மாநிலங்களை சேர்ந்த முதல்வர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில... மேலும் பார்க்க

தொகுதி மறுவரையறை : ``தமிழ்நாடு சட்டமன்றத் தீர்மானம் தான் காங்கிரஸின் நிலைபாடு.!" - ப.சிதம்பரம்

கடந்த 2011-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்து மக்களவைத் தொகுதிகளை அதிகரிக்க பா.ஜ.க அரசு தீவிரம் காட்டி வருகிறது. கடந்த மார்ச் மாதம் தொகுதி மறுவரையறை மசோதாவை ... மேலும் பார்க்க