செய்திகள் :

Man Eater: அதே புலி, அதே இடம்; மேலும் ஒருவரைக் கொன்று தின்ற ஆட்கொல்லியால் அச்சத்தில் உறைந்த மக்கள்!

post image

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகில் உள்ள ஓவேலி லாரஸ்டன் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி பாலகிருஷ்ணன் வீட்டின் அருகில் உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் வராத காரணத்தால், அதனைச் சீரமைப்பதற்காக கடந்த 9- ம் தேதி தனியார் காபி தோட்டத்தை ஒட்டிய பகுதிக்குச் சென்றபோது புலி தாக்கிக் கொல்லப்பட்டார். அவரின் உடல் பாகங்களையும் அந்தப் புலி தின்றுச் சென்றது. நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத அவரின் உடலில் கை, கால் உள்ளிட்ட சில பாகங்கள் மட்டுமே காட்டில் கிடந்தன. வனத்துறையின் அலட்சியம் காரணமாகவே குடியிருப்புக்கு அருகில் புலி தாக்குதல் சம்பவம் நடைபெற்றதாக உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

புலி தாக்குதல் சம்பவம்
புலி தாக்குதல் சம்பவம்

மனிதனைக் கொன்று தின்ற அந்தப் புலியை தீவிரமாக கண்காணித்து மக்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதாக வனத்துறையினர் உத்தரவாதம் அளித்திருந்தனர். இந்த நிலையில், அதே லாரஸ்டன்‌ பகுதியில் விவசாயி ரவிச்சந்திரன் என்பவரை இன்று மதியம் அதே புலி தாக்கிக் கொன்று அவரின் உடல் பாகங்களையும் தின்றுள்ளது. அதே போன்று ரவிச்சந்திரனின் கை, கால்களும் தனித்தனியாக காட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அடுத்தடுத்து மனிதர்களை வேட்டையாடி உண்ணும் ஆட்கொல்லி புலியால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

இது குறித்து தெரிவித்த உள்ளூர் மக்கள், ``அடுத்து இந்த புலி யாரை வேண்டுமானாலும் கொல்லலாம் என வனத்துறையிடம் கூறி வந்தோம். புலியை டிரோன் கேமராக்கள் மூலம் பார்த்து கண்காணித்து என்று கூறி, தற்போது வேடிக்கை மட்டுமே பார்த்து வருகிறார்கள். குழைந்தைகளை வைத்துக்கொண்டு இங்கு எப்படி நாங்கள் வாழ முடியும், நீங்களே சொல்லுங்கள்" எனக் கண்ணீர் வடிக்கின்றனர் ‌.

புலி தாக்குதல்

இது குறித்து தெரிவித்த வனத்துறையினர், ``சம்பந்தப்பட்ட புலியை இன்னும் அடையாளம் காண முடியவில்லை. வயது முதிர்வு, உடலில் காயம் போன்ற காரணங்களால் காட்டில் வேட்டையாடும் திறனை இழந்த அந்தப் புலி இரண்டு பேரைக் கொன்று தின்றிருக்கிறது. உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுச்‌ சென்று உடனடியாக அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்றனர்.

மசினகுடி: 11 நாளில் 3 பெண் யானைகள்; எல்-நினோ தாக்கத்தால் வறட்சியில் அடுத்தடுத்து மடியும் பேருயிர்

எல்-நினோ தாக்கம் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் நடப்பாண்டுக்கான தென்மேற்கு பருவமழை பொய்த்திருக்கிறது. சமவெளி பகுதிகளுக்கு இணையாக ஊட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதுடன் வற... மேலும் பார்க்க

கொசஸ்தலையாற்றில் கொத்துக்கொத்தாக செத்து மிதந்த மீன்கள் — எண்ணூர் பகுதியில் வெப்ப மாசு அச்சம்

சென்னை எண்ணூர் அருகே கொசஸ்தலையாறு மற்றும் எண்ணூர் முகத்துவாரப் பகுதியில் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் டன் கணக்கில் மீன்கள் மற்றும் பிற நீர்வாழ் உயிரினங்கள் செத்து கரை ஒதுங்கி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்ப... மேலும் பார்க்க

`10 லட்சம் விதைப்பந்துகள் இலக்கு’ - வேலூர் மலைகளைப் பசுமையாக்க ஆர்வம் காட்டும் மென்பொருள் பொறியாளர்

வேலூர் சத்துவாச்சாரி அருகேயுள்ள ரங்காபுரத்தில் வசித்து வருபவர் தினேஷ் சரவணன். மென்பொருள் பொறியாளரான இவர்... கோடைக்காலத்தில் பறவைகளின் தாகம் தணிக்கத் தனித்துவமான ஏற்பாடு செய்தல், ஏரிக்கரைகளில் பனை விதை... மேலும் பார்க்க

கோவை அருகே ரயில் மோதி காட்டு யானைகள் உயிரிழப்பு – யானைகள் தினத்தில் நடந்த சோகம்!

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு – கேரளம் எல்லைப்பகுதியான வாளையார் வனப்பகுதி வழியாக கேரளத்திற்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கேரள மாநிலத்திற்கு உட்பட்ட பகுதியில் 4 யானைகள் கொண்ட ஒரு யானை... மேலும் பார்க்க

புனித நீராட வந்த பக்தர்கள் ஏமாற்றம்... அமலைச் செடிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பழநி சண்முகநதி!

பழநி சண்முகநதிபழநி சண்முகநதிபழநி சண்முகநதிபழநி சண்முகநதிபழநி சண்முகநதிபழநி சண்முகநதிபழநி சண்முகநதி மேலும் பார்க்க

ஒரு மனிதன், ஒரு லட்சம் மரங்கள் - விவேக் விதைத்த கனவை நனவாக்கும் விழுப்புரம் சசி ராஜா

ஒரு நாட்டின் உண்மையான செல்வம் என்பது பணமும் கட்டடங்களும் அல்ல; நம்மைச் சுற்றியுள்ள பசுமையும், நாம் சுவாசிக்கும் சுத்தமான காற்றும்தான். ஆனால், நவீன நாகரிகத்தின் வளர்ச்சி என்ற பெயரில் நாம் நாள்தோறும் வெ... மேலும் பார்க்க