செய்திகள் :

`10 லட்சம் விதைப்பந்துகள் இலக்கு’ - வேலூர் மலைகளைப் பசுமையாக்க ஆர்வம் காட்டும் மென்பொருள் பொறியாளர்

post image

வேலூர் சத்துவாச்சாரி அருகேயுள்ள ரங்காபுரத்தில் வசித்து வருபவர் தினேஷ் சரவணன். மென்பொருள் பொறியாளரான இவர்... கோடைக்காலத்தில் பறவைகளின் தாகம் தணிக்கத் தனித்துவமான ஏற்பாடு செய்தல், ஏரிக்கரைகளில் பனை விதைகள் நடுதல், சிறைச்சாலைகளில் பசுமைப் பணி செய்தல், பாலாற்றைத் தூய்மைப்படுத்துதல், நாட்டு ரக விதைகளைச் சேகரித்துப் பரவலாக்கம் செய்தல், மலைப் பகுதிகளில் டிரோன் மூலம் விதைப்பந்துகளை வீசுதல், பொது இடங்களில் மரக்கன்றுகளை நடுதல் உள்ளிட்ட பணிகளில் கடந்த 12 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார்.

விதைப்பந்துகள் தயாரிப்பு
விதைப்பந்துகள் தயாரிப்பு

இந்த வருடமும் மலைப் பகுதிகளில் விதைப்பந்துகளை வீசுவதற்கான பணிகளில் ஈடுபட்டிருக்கிறார் தினேஷ் சரவணன். இதற்காக, ஸ்ரீபுரம் தங்கக் கோயிலின் பசுமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டமான `கிரீன் சக்தி’யுடன் இணைந்து 10 லட்சம் விதைப்பந்துகளைத் தயாரிப்பதற்கான பணிகளைத் தொடங்கியிருக்கிறார்.

மாணவ - மாணவிகள் விதைப்பந்து தயாரிப்புப் பணியில் ஆர்வம் காட்டுவதால், அவர்களிடம் சுற்றுச்சூழல் சார்ந்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார் தினேஷ் சரவணன்.

இதுபற்றி, தினேஷ் சரவணன் கூறுகையில், ``வேலூர் மாவட்ட மலைப்பகுதிகளில் பசுமைப் பரப்பை அதிகரிப்பதற்காக, இந்த வருடம் 10 லட்சம் விதைப்பந்துகளைத் தயாரித்து வீச இலக்கு நிர்ணயித்திருக்கிறோம். பெருநாவல், சிறுநாவல், கொடுக்காய்ப்புளி, அத்தி, வேங்கை, வேம்பு, சரக்கொன்றை, மயில் கொன்றை உள்ளிட்ட நாட்டு மர விதைகளைச் சேகரித்துக் கொண்டுவந்து, அதோடு மண், மணல், எரு கலந்து விதைப்பந்துகள் தயார்ச் செய்கிறோம்’’ என்றார்.

கோவை அருகே ரயில் மோதி காட்டு யானைகள் உயிரிழப்பு – யானைகள் தினத்தில் நடந்த சோகம்!

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு – கேரளம் எல்லைப்பகுதியான வாளையார் வனப்பகுதி வழியாக கேரளத்திற்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கேரள மாநிலத்திற்கு உட்பட்ட பகுதியில் 4 யானைகள் கொண்ட ஒரு யானை... மேலும் பார்க்க

புனித நீராட வந்த பக்தர்கள் ஏமாற்றம்... அமலைச் செடிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பழநி சண்முகநதி!

பழநி சண்முகநதிபழநி சண்முகநதிபழநி சண்முகநதிபழநி சண்முகநதிபழநி சண்முகநதிபழநி சண்முகநதிபழநி சண்முகநதி மேலும் பார்க்க

ஒரு மனிதன், ஒரு லட்சம் மரங்கள் - விவேக் விதைத்த கனவை நனவாக்கும் விழுப்புரம் சசி ராஜா

ஒரு நாட்டின் உண்மையான செல்வம் என்பது பணமும் கட்டடங்களும் அல்ல; நம்மைச் சுற்றியுள்ள பசுமையும், நாம் சுவாசிக்கும் சுத்தமான காற்றும்தான். ஆனால், நவீன நாகரிகத்தின் வளர்ச்சி என்ற பெயரில் நாம் நாள்தோறும் வெ... மேலும் பார்க்க

Elephant Day: வாழிடமும், வழித்தடமும் பாதுகாக்கப்பட்டால் மட்டுமே இந்தப் பேருயிர்களைக் காக்க முடியும்!

சம காலத்தில் நிலத்தில் வாழ்ந்து வரும் மிகப்பெரிய உயிரினமான யானைகள் அழிந்து வரும் பட்டியலில் உள்ளன. சூழலியல் பாதுகாப்பில் அளப்பரிய பங்காற்றி வரும் யானை இனத்தைப் பாதுகாக்க உலக அளவில் பல்வேறு முயற்சிகளை ... மேலும் பார்க்க

`அகழியையே வழித்தடமாக மாற்றிக்கொண்ட வைரல் யானைகள், குழப்பத்தில் வனத்துறை!' என்ன நடக்கிறது கூடலூரில்?

ஆசிய யானைகளின் மிக முக்கிய வாழிடங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது நீலகிரி மாவட்டத்தின்‌ கூடலூர். அதேவேளையில் நாட்டில் யானை - மனித எதிர்கொள்ளல்கள் அதிகம் நிகழும் பகுதிகளிலும் முக்கிய இடத்தில் இருக்கிறது.... மேலும் பார்க்க

பசிபிக் பெருங்கடலில் உருவான சூப்பர் எல் நினோ... நவம்பரில் வரலாறு காணாத அளவில் தீவிரம் ஆகலாம்!

இந்த ஆண்டு உலகம் முழுவதும் பெரும் பேசுபொருளாக மாறியிருப்பது சூப்பர் எல் நினோ. பசிபிக் பெருங்கடலின் கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பை விட 1.0°C-க்கு மேல் உயரும்போது எல்... மேலும் பார்க்க