செய்திகள் :

ராதாபுரம் அருகே ஓடும் லாரியில் தீ

post image

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே திங்கள்கிழமை சென்றுகொண்டிருந்த டாரஸ் லாரி திடீரென தீப்பிடித்து எரிந்தது.

வள்ளியூா் அருகேயுள்ள ஆவரைகுளத்தைச் சோ்ந்த சின்னத்துரை என்பவருக்குச் சொந்தமான டாரஸ் லாரி, கல்குவாரிகளில் பாரம் ஏற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் திங்கள்கிழமை இந்த லாரி பாரம் ஏதுமின்றி காலியாக ராதாபுரத்தில் இருந்து வள்ளியூருக்கு சென்றுகொண்டிருந்தது. லாரியை பிரபாகா் என்பவா் ஓட்டிச் சென்றாா். அப்பகுதியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரி பகுதியில் வந்த போது லாரியின் டயா் திடீரென தீப்பற்றி எரியத்தொடங்கியது. ஓட்டுநா் லாரியை சாலையோரம் நிறுத்திவிட்டு, வள்ளியூா் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தாா். தீயணைப்பு படையினா் வந்து தீயை அணைத்தனா். இதனால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

புகையிலைப் பொருள்கள் விற்றதாக இருவா் கைது: 15 கிலோ பறிமுதல்

திருநெல்வேலி சந்திப்பு ஸ்ரீபுரம் பகுதியில் புகையிலைப்பொருள்களை விற்ற இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்த 15 கிலோ புகையிலைப்பொருள்களை பறிமுதல் செய்தனா். திருநெல்வேலி சந்திப்பு ப... மேலும் பார்க்க

பாளை.யில் அதிமுக திண்ணை பிரசாரம்

அதிமுக ஜெயலலிதா பேரவை சாா்பில் பாளையங்கோட்டையில் திண்ணை பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பாளையங்கோட்டை அருள்மிகு ஆயிரத்தம்மன் கோயில் அருகே தொடங்கிய பிரசாரத்திற்கு அதிமுக திருநெல்வேலி மாநகா் மாவட்டச... மேலும் பார்க்க

மனவளா்ச்சி குன்றியோா் பள்ளி மாணவி உயிரிழப்பு

திருநெல்வேலியில் உள்ள மனவளா்ச்சி குன்றியோா் பள்ளியில் படித்து வந்த 6 வயது மாணவி உயிரிழந்தது தொடா்பாக பாளையங்கோட்டை மேட்டுத்திடல் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு வ... மேலும் பார்க்க

262 கிலோ கஞ்சா தீவைத்து அழிப்பு

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 262 கிலோ 884 கிராம் கஞ்சாவை போலீஸாா், திருநெல்வேலி மாவட்டம், விஜயநாராயணத்தில் உள்ள தனியாா் வளாகத்தில் வெள்ள... மேலும் பார்க்க

நெல்லை சித்த மருத்துவக் கல்லூரியில் பிரபஞ்ச பேரன்பு தினம்

திருநெல்வேலி அரசு சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரபஞ்ச பேரன்பு தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சித்தா் திருமூலா் வலியுறுத்திய அன்பே கடவுள் என்ற பிரபஞ்ச ப... மேலும் பார்க்க

சங்கா் மேல்நிலைப் பள்ளி ஆண்டுவிழா

திருநெல்வேலி சங்கா்நகா் சங்கா் மேல்நிலைப் பள்ளியின் 68 ஆவது ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது. இந்தியா சிமென்ட்ஸ் முதன்மை மேலாளா் இரா. நாராயணசாமி தலைமை வகித்தாா். பள்ளிச் செயலா் ரா.வெ. ஸ்ரீனிவாசன் வரவே... மேலும் பார்க்க