செய்திகள் :

OM: `உண்மை சம்பவங்கள்... தனுஷ் கேரக்டர் பெயர் அண்ணாமலை?' - ராஜ்குமார் பெரியசாமி கூறியதென்ன?

post image

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், தனுஷ், சாய் பல்லவி, மம்மூட்டி, ஸ்ரீலீலா நடிப்பில் வெளியாக உள்ள படம் 'ஓம்'.

சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தின் டைட்டில் அறிவிப்பு விழா நேற்று (ஜூன்.18) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய ராஜ்குமார் பெரியசாமி, " 'ஓம் என்பது ஆன்மிக சம்பந்தப்பட்ட தலைப்பு மாதிரி தெரிந்தாலும் இது உணர்வுப்பூர்வமான கதை. படத்தின் தலைப்புக்கும், கதைக்கும் பல லேயர்களில் அர்த்தம் இருக்கிறது.

 'ஓம்'
'ஓம்'

அதற்கு தற்போது விளக்கம் கொடுக்க வேண்டாம் என்று நினைக்கிறேன். 65 சதவீத படப்பிடிப்பை முடித்துவிட்டோம். தனுஷ் நடித்த படங்களில் இந்த படம் தான் அதிக பட்ஜெட்டில் தயார் ஆகிறது.

அதற்கு நடிகர்கள், கதைக்களம் என பல காரணங்கள் இருக்கிறது. தவிர, சினிமா பிஸினசும் முன்பை விட அதிகரித்திருக்கிறது. கார்த்திகேயன் என்ற கேரக்டரில் மம்முட்டி நடிக்கிறார்.

மற்றவர்களின் கேரக்டர்களை விரைவில் அறிவிப்போம். சூழ்நிலை காரணமாக மம்முட்டியை 6 மாதங்களாக என்னால் சந்திக்க முடியவில்லை. ஒருநாள் சென்னை வந்தவர் என்னிடம் கதை கேட்டார். அதில் அவருக்கு இருக்கக்கூடிய சந்தேகங்களையும் கேட்டார். உடனே நடிக்க ஓகே சொல்லிவிட்டார்.

தனுஷ், மம்முட்டி என 2 பேரும் தேசிய விருது பெற்றவர்கள். அவர்கள் தங்கள் கேரக்டரை உணர்ந்து அழகாக நடித்தனர். ஸ்ரீலீலா சம்பந்தப்பட்ட காட்சிகளை இப்போது எடுத்து வருகிறேன்.

அவர் டான்சில் மட்டுமல்ல, நடிப்பிலும் சிறந்தவர். பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருப்பதியில் நடந்த செம்மரக் கடத்தல், என்கவுண்டர் சம்பந்தப்பட்ட கதையா என கேட்கிறார்கள். டீசரில் சில விஷயங்கள் காண்பித்து இருக்கிறோம். சில உண்மை சம்பவங்கள் பாதிப்பில் இந்த கதை உருவாகி இருக்கிறது.

 'ஓம்'
'ஓம்'

நான் இயக்கிய அமரன் ஒரு பயோகிராபி. 'ஓம்' அந்தவகை கதை தான். உண்மை சம்பவங்கள் நிறைய இருக்கின்றன. ஆனால், அதை எப்படி திரைக்கதையாக கொடுக்கிறோம் என்பதில் வெற்றி இருக்கிறது.

தமிழர்களை எந்த இடத்திலும் தவறாக காண்பிக்கவில்லை. திருவண்ணாமலைக்கும் கதைக்கும் தொடர்பு இருக்கிறது. தனுஷ் கேரக்டர் பெயர் அண்ணாமலையா என்பதை இப்போது சொல்ல முடியாது" என்று பேசியிருக்கிறார்.

அரசன்: மிரட்டலான மூன்றாவது கெட்டப்; வெற்றிமாறன் குட்புக்கில் இடம்பிடித்த சிலம்பரசன் - Arasan அப்டேட்

உற்சாகத்தில் இருக்கிறார் சிலம்பரசன். தயாரிப்பாளர் தாணு, வெற்றிமாறனுடன் கூட்டணி அமைத்துள்ள 'அரசன்' படப்பிடிப்பு சென்னையில் சீறிப்பாய்ந்து போய்க் கொண்டிருக்கிறது. சிலம்பரசன்வடசென்னையை மையமாக வைத்து 'அரச... மேலும் பார்க்க

Samantha: "சமந்தா ஒரு பெண் என்பதைத் தாண்டி ஒரு போராளி!" - நடிகை கெளதமி

சமந்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆக்ஷன் படமான 'மா இண்டி பங்காரம்' ஜூன் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை அவரே தயாரிக்கவும் செய்திருக்கிறார். கடைசியாக சமந்தா நடிப்பில் 'க... மேலும் பார்க்க

`விஜய் சார், இதைவிட பெரிய ஏதோ ஒன்றிற்காகவே உருவாக்கப்பட்டவர் என்று...' - முதல்வரைச் சந்தித்த சமந்தா

நடிகை சமந்தா முதல்வர் விஜய்யை இன்று (ஜூன். 17) நேரில் சந்தித்திருக்கிறார். இதனை நெகிழ்ச்சியாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். புகைப்படத்துடன் அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "இன்... மேலும் பார்க்க

Engal Thangam: "தமிழில் நிறைய நல்ல படங்கள் பண்ணனும்னு பசியோடு இருக்கேன்!" - சென்னையில் சமந்தா

சமந்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆக்ஷன் படமான 'மா இண்டி பங்காரம்' ஜூன் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை அவரே தயாரிக்கவும் செய்திருக்கிறார். கடைசியாக சமந்தா நடிப்பில் 'க... மேலும் பார்க்க

"இந்த விழிப்புணர்வை உலகெங்கும் உள்ள அனைத்துப் பெண்களுக்கும்..!" - நடிகை சமந்தாவின் புதிய பிசினஸ்

திரைப்பிரபலங்கள் பலரும் சினிமாவைத் தாண்டி பல்வேறு பிசினஸ்களை நடத்தி வருகிறார்கள். பெரும்பாலான திரைப்பிரபலங்கள் சொந்தமாகவே உணவகங்களை நடத்தி வருகிறார்கள். அவர்களைத் தாண்டி இன்னும் பலர் பல்வேறு துறைகளில்... மேலும் பார்க்க

"அந்தப் புத்தகத்தைக் கொடுக்கத்தான்" - ரஜினியுடனான சந்திப்பு குறித்து நயினார் நகேந்திரன் விளக்கம்

சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்தை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று (ஜூன்.16) சந்தித்தார். பிரதமர் மோடி​யின் 12 ஆண்​டு​கால சாதனை​கள் குறித்த சிறப்புப் புத்​தகங்​களை ரஜினி​காந்த்திற்... மேலும் பார்க்க