செய்திகள் :

நிறுத்தப்பட்ட சட்டமன்ற ஒளிபரப்பு: "முழு நேரலை..முழு நேரலை...அத்தனையும் உருட்டா சார்! - அதிமுக கேள்வி

post image

தமிழக சட்டமன்றத்தின் 2-வது கூட்டத்தொடர் இன்று (ஜூன்.19) நடைபெற்றது. மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசை எதிர்த்து இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கிய நிலையில், பேரவையின் நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. சட்டப்பேரவை நேரலை நிறுத்தப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தமிழ்நாடு சட்டமன்றம்
தமிழ்நாடு சட்டமன்றம்

இந்நிலையில் இதுகுறித்து அதிமுக ஐடி விங் தனது எக்ஸ் தளத்தில் விமர்சித்து பதிவிட்டிருக்கிறது. "முழு நேரலை.. முழு நேரலை... அத்தனையும் உருட்டா சார்! ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை. நல்லா இருக்கு சார் உங்க மாற்றம். எந்த வாக்குறுதியும் நிறைவேத்துற மாதிரி ஐடியாவே இல்ல போல, அப்படித்தானே சார்!" என்று பதிவிட்டிருக்கிறது.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகன், கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக முடக்கப்பட்டிருந்த சட்டப்பேரவை நேரலை மீண்டும் தொடரும் என்று உறுதியளித்திருந்தார்.

அமைச்சர் ராஜ்மோகன்
அமைச்சர் ராஜ்மோகன்

முதல்வர் கொடுத்த வாக்கைக் காப்பாற்றிவிட்டார் என்று அமைச்சர்கள் பெருமிதம் தெரிவித்த அடுத்த நாளே, விவாதம் தொடங்கியவுடன் நேரலை நிறுத்தப்பட்டுள்ள சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. சட்டப்பேரவை நேரலை நிறுத்தப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

'யார் அதிகம் ஓட்டு வாங்குனது?' - அமைச்சர் அருண்ராஜ் vs சிவசங்கர் காரசார விவாதம்!

ஆளுநர் உரையின் மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானம் அவையில் நடந்து வருகிறது. அப்போது அமைச்சர் அருண் ராஜ் மற்றும் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் இடையே காரசாரமான விவாதம் நடந்தது.Arun Rajஅமைச்சர் அருண்ராஜ் பே... மேலும் பார்க்க

`எத்தனை தடவை தேசிய கீதம் போடணும்னு நான் முடிவு பண்ணிப்பேன்!' - அவையில் கடுப்பான சபாநாயகர்

ஆளுநர் உரையின் மீதான நன்றி தெரிவிக்கும் விவாதம் அவையில் நடந்து வருகிறது. அப்போது பேசிய திமுக எம்.எல்.ஏ வேலு முன்வைத்த விமர்சனம் ஒன்றிற்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிராபகர் கடுமையாக எதிர்வினையாற்றியிருந்தார்... மேலும் பார்க்க

சட்டசபையில் டாபிக் ஆன இயக்குனர் `அட்லி' - வித்தியாசமாக விமர்சனம் செய்த எம்.எல்.ஏ சிவசங்கர்!

சட்டமன்றத்தில் ஆளுநர் உரையின் மீதான நன்றி தெரிவிக்கும் விவாதம் நடந்து வருகிறது. இதில் பேசிய திமுக எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான சிவசங்கர் டைரக்டர் அட்லியை இழுத்து அரசை விமர்சனம் செய்திருந்தார். ச... மேலும் பார்க்க

அவையில் உதயநிதி வைத்த கோரிக்கை.! `கூடுதல் பத்தியாகச் சேர்க்கலாம்' - உடனே ஓகே சொன்ன முதல்வர் விஜய்!

கர்நாடக அரசு மேகதாதுவில் அணைக் கட்டுவதற்கு மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்நாடக மக்களின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண்போம் என கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்திருந்தார். அந... மேலும் பார்க்க

`எல்லையற்ற அதிகாரம் படைத்தவன்' - ஈரான் நிபந்தனையின்றி சரணடைந்ததாக சொல்லும் டொனால்டு ட்ரம்ப்!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நீண்ட இழுபறிக்கு பிறகு போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஈரான் தனது நாட்டின் எல்லைக்கு உட்பட்ட ஹார்மூஸ் ஜலசந்தியை முழுமையாக போக்குவர... மேலும் பார்க்க

`அமெரிக்க அதிபர்தான் பிரச்னை என்று இஸ்ரேலில் யாராவது நினைத்தால்.!'- துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் காட்டம்

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே போர் நிறுத்தத்திற்கான இடைக்கால ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவின் ராஜதந்திர மற்றும் ராணுவ உதவிகளை இஸ்ரேல் தலைவர்கள் மதிக்கத் தவறிவிட்டதாக அமெரிக்கத் த... மேலும் பார்க்க