செய்திகள் :

``ருதுராஜ்க்கு வாய்ப்பு தரவில்லை என்றால் அது முட்டாள் தனம்'' - இந்திய அணி தேர்வு குறித்து அஷ்வின்

post image

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்க அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது.

டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில், தென்னாப்பிரிக்க அணி டெஸ்ட் தொடரை முழுமையாக வென்றிருந்தது.

இதனைத் தொடர்ந்து, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி நேற்று (நவ. 30) ராஞ்சியில் நடைபெற்றது.

ராஞ்சியில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 17 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

Indian Team
Indian Team

இந்நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் வீரர்கள் தேர்வு சரியில்லை என முன்னாள் கிரிக்கெட் வீரர் அஷ்வின் விமர்சனம் செய்துள்ளார்.

இதுதொடர்பாக பேசிய அஷ்வின், "இரண்டாவது போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை என்றால், அது நிர்வாகம் எடுக்கும் ஒரு முட்டாள்தனமான முடிவு.

ஏனெனில் எதிர்வரும் இரண்டு போட்டிகளில் அவருக்கு வாய்ப்பை வழங்க வேண்டும். அப்படி வாய்ப்பு கொடுத்தாலே, அவர் தன்னுடைய திறனை வெளிப்படுத்த அது ஒரு வாய்ப்பாக இருக்கும்.

அதை விடுத்து திலக் வர்மாவை சேர்க்கச் சொல்வதெல்லாம் சரியான விஷயமாக எனக்கு தெரியவில்லை. ஹர்திக் பாண்டியா இல்லாத அணியில் நிதிஷ் குமாரை ஏன் சேர்க்கவில்லை என்று எனக்கு சந்தேகம் இருக்கிறது.

இந்த அணியில் நிதிஷ் குமார் இல்லை என்றால், அணியை தேர்வு செய்வதில் ஏதோ தவறு இருக்கிறது என்பதற்குத் தான் அர்த்தம். ஏன் அவரை தேர்வு செய்யவில்லை?

ருதுராஜ்
ருதுராஜ்

ஹர்திக் செய்யும் அதே விஷயத்தை நிதிஷ் குமாராலும் செய்ய முடியும். அவருக்கு தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட் அணியில் வாய்ப்பு வழங்கினால்தான், அவர் தன்னுடைய திறமையை நிரூபிக்கவும் முடியும், வளர்த்துக் கொள்ளவும் முடியும்.

இந்த அணியில் நிதிஷ் குமார் இல்லை என்றால், நாம் இத்தகைய தொடருக்கு எந்த மாதிரி அணியை தேர்வு செய்கிறோம் என்பதை சுயபரிசோதனை செய்து கொண்டு கேள்வி கேட்க வேண்டும்," என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.

google Search 2025: உலகளவில் தேடப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள்; முதல் 10 இடம் யாருக்கு?

இந்த 2025 ஆண்டு இந்தியாவிற்குப் புதிய கிரிக்கெட் வீரர்களை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது. இந்தியா - பாகிஸ்தான் இடையே இருந்த தீவிர அரசியல் முரண்பாடுகளுக்கு இடையேயும் இந்திய கிரிக்கெட் வீரர்களின் தாக்... மேலும் பார்க்க

IND vs SA: ஹர்திக்கின் அதிரடி; 101 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆரம்பமாகியிருக்கின்றன. தென்னாப்பிரிக்கா அணி டாஸை வென்று, பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணியில் அபிஷேக் சர்மா 1... மேலும் பார்க்க

"வருண் சக்கரவர்த்தியை இந்தப் போட்டியில் பயன்படுத்தாதீங்க, ஏன்னா..!" - கம்பீருக்கு அஷ்வின் ஐடியா!

இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்க அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது.டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்க அணி வெற... மேலும் பார்க்க

"சச்சின் அப்படி நெனச்சிருந்தா என்னால அதைச் செய்திருக்கவே முடியாது"- கங்குலியின் கேப்டன்சி சுவாரஸ்யம்

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் ஒரு மறக்கமுடியாத காயத்தை ஏற்படுத்திய உலகக் கோப்பைத் தொடர்களில் ஒன்று 2003 ஒருநாள் உலகக் கோப்பை.2023 உலகக் கோப்பையில் கோலி, ரோஹித் ஆடிய ஆட்டங்களுக்கெல்லாம் முன்னோடியா... மேலும் பார்க்க

விஜய் ஹசாரே விளையாட விராட் கோலி, ரோஹித் ஷர்மா நிர்பந்திக்கப்பட்டனரா? - BCCI பதில்!

இந்திய உள்ளூர் கிரிக்கெட்டில் முதன்மையான ஒருநாள் போட்டியான விஜய் ஹசாரே டிராபியில் (Vijay Hazare Trophy), நட்சத்திர வீரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி மீண்டும் களமிறங்க உள்ளனர். சில வாரங்களுக்க... மேலும் பார்க்க

`கில் அந்த இடத்துக்குத் தகுதியானவர்!' - சஞ்சு பேட்டிங் ஆர்டர் குறித்து சூர்யகுமார்

இந்தியா vs தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் தொடர் நவம்பர் 14-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2 - 0 என தென்னாப்பிரிக்கா வென்றது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் தொடரை 2 - 1 என... மேலும் பார்க்க