செய்திகள் :

ரூ.77 லட்சம் தருகிறேன்: தமிழக முதல்வர் விஜய்யின் ஏ.ஐ வீடியோவை பயன்படுத்தி பெண்ணிடம் 12 லட்சம் மோசடி

post image

ஏழைகளுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் விஜய் பேசவது போன்ற ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தது. அந்த வீடியோவை மும்பை வசாய் பகுதியை சேர்ந்த வத்சலா(66) என்ற பெண் பார்த்து விஜய்யிடம் நிதியுதவி கோர முடிவு செய்தார். இதற்காக அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டு இருந்த மொபைல் போன் நம்பருக்கு தொடர்பு கொண்டார். ஆனால் அந்த நம்பரில் பேசிய நபர் வேறு ஒரு மொபைல் நம்பரை கொடுத்து அந்த எண்ணில் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொண்டார்.

இரண்டாவது போன் நம்பருக்கு தொடர்பு கொண்டபோது அதில் பேசிய நபரிடம் ரூ.5 லட்சம் நிதியுதவி செய்யும்படி அப்பெண் கேட்டுக்கொண்டார். உடனே அதற்கான விண்ணப்ப கட்டணமாக ரூ.5 ஆயிரம் செலுத்தும்படி கேட்டுக்கொண்டார். பின்னர் அப்பெண்ணை தொடர்பு கொண்ட நபர் வெளிநாட்டில் இருந்து ரூ.77 லட்சம் கிடைக்க இருப்பதாக தெரிவித்தார். ஆனால் அந்த தொகையைப் பெற வரி மற்றும் இதர கட்டணங்களை செலுத்தவேண்டும் என்று போனில் பேசிய நபர் தெரிவித்தார்.

இதையடுத்து வத்சலா தனியார் கிரெடிட் சொசைட்டியில் கடன் வாங்கி, நகைகளை அடகு வைத்து, மகளின் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுத்து, 10 நாட்களில் மொத்தம் ரூ.12 லட்சத்தை மோசடி செய்தவர்கள் குறிப்பிட்ட வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி வைத்தார். அதன் பிறகும் அவர்கள் சொன்ன தொகை கிடைக்கவில்லை. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வத்சலா இது குறித்து போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

`நீ எனக்குக் கிடைக்கலைனா, உன் புருஷனைக் கொன்னுடுவேன்’- குடியாத்தம் மோசடிப் பேர்வழியின் கைது பின்னணி!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள பெரும்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஏ.டி.கே தினேஷ் என்கிற தினேஷ்குமார். பத்திரிகை ஒன்றில் அந்தப் பகுதி நிருபராக சுற்றிவந்த தினேஷ்குமார் மீது ஏற்கெனவே மிரட்டல், பண... மேலும் பார்க்க

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு: பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கிய நீதிமன்றம்

தூத்துக்குடியில் இயங்கி வந்த வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 22.05.2018 அன்று நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியதை அடுத்து, போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பெண்கள் உட்பட... மேலும் பார்க்க

ஆபரேஷன் தண்டர்: ஓணத்துக்கு டிரஸ் எடுக்க போனோம்! - தாயும் உடந்தை; குடும்பத்துடன் போதைபொருள் கடத்தல்!

கேரளாவில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க 'ஆபரேஷன் தண்டர்' என்ற பெயரில் கலால் அமலாக்கம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு சிறப்புப் படையினர் தீவிர வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், பெங்களூருவிலிருந... மேலும் பார்க்க

ஊட்டி: கன்னத்தில் மாறி மாறி அறைந்து கொண்ட போலீஸ் - ஹெட்மாஸ்டர்! நடந்தது என்ன?

நீலகிரி மாவட்டம் ஊட்டி மணிக்கூண்டு பகுதியில் நேற்று மாலை வந்த ஒரு காரை காவல்துறையினர் தடுத்தி நிறுத்தி சோதனை செய்துள்ளனர். வாகனத்தை ஓட்டி வந்த கடநாடு அரசுப்பள்ளி தலைமையாசிரியர் சீனிவாசன் என்பவர் மது ப... மேலும் பார்க்க

``20% கமிஷன் வேணும்… இல்லைன்னா பில் போடமாட்டேன்” - ரூ.1 லட்சம் லஞ்சம்; சிக்கிய வனச்சரக அலுவலர்!

தென்காசி மாவட்டம், புளியங்குடி சின்னமலை மற்றும் சிவகிரி வனப்பகுதிகளை ஒட்டிய பகுதிகளில் யானைகள் ஊருக்குள் புகுவதைத் தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டு வரும் யானை தடுப்பு அகழி பணியில், ஒப்பந்ததாரரிடம் பில்... மேலும் பார்க்க

சென்னை: `முதலில் தங்கை... அடுத்து மனைவி' - எலக்டரீசியனைக் கொலைசெய்த வியாபாரி; பகீர் பின்னணி!

சென்னை செங்குன்றம், பாடியநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினவேல் பாண்டியன் (40). இவர் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார். இவர், சில ஆண்டுகளுக்கு முன்பு புழல், காவாங்கரையைச் சேர்ந்த சரவணன் என்பவரின் தங... மேலும் பார்க்க