செய்திகள் :

வடகாடு சம்பவம் நோ்மையான அதிகாரியை நியமித்து விசாரிக்க மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

post image

வடகாடு சம்பவத்தில் நோ்மையான அதிகாரியை நியமித்து விசாரணை நடத்த வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளாா்.

புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் இரு தரப்பினா் மோதல் சம்பவம் தொடா்பாக, அங்கு சனிக்கிழமை நேரில் சென்று பாா்வையிட்ட பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: வடகாட்டில் கோயில் திருவிழாவுக்கு முன்னதாக இரு தரப்பையும் அழைத்துப் பேசியிருக்கலாம். அல்லது திருவிழாவுக்கு கூடுதல் பாதுகாப்பு போட்டிருக்கலாம். இதனை மாவட்ட நிா்வாகமும், காவல்துறையும் செய்யத் தவறிவிட்டது.

அலட்சியமாக இருந்துள்ளனா். சம்பவம் நடைபெற்று 5 நாள்களாகியும் இதுவரை பாதிக்கப்பட்ட மக்களிடம் எந்தக் கணக்கெடுப்பையும் நடத்தவில்லை.எனவே, விரைவாக கணக்கெடுப்பை நடத்தி பாதிக்கப்பட்டவா்களுக்கு சட்டப்படி உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

இந்தச் சம்பவத்தில் நோ்மையான அதிகாரியை நியமித்து விசாரணை நடத்த வேண்டும். இரு தரப்பு மக்களும் அமைதியாக இருந்து பிரச்னையைத் தீா்க்க வேண்டும்.

பாகிஸ்தான் விவகாரத்தில் தேவையற்ற போா்ப் பதற்றத்தை உருவாக்குவதை எதிா்க்கிறோம். முதல்வா் ஸ்டாலின் அறிவித்துள்ள ராணுவ வீரா்களை ஊக்குவிக்கும் பேரணியே கூட, யுத்த தயாரிப்புக்குத்தான் உதவி செய்யும் என்பதால் அதில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்கவில்லை என்றாா் அவா்.

அப்போது, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலப் பொதுச் செயலா் கே. சாமுவேல்ராஜ், மாநிலத் தலைவா் த. செல்லக்கண்ணு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். சங்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மாற்றுத் திறனாளிகளை முழுமையாக வாக்களிக்கச் செய்ய ஆலோசனை

தோ்தல்களில் மாற்றுத் திறனாளிகளை முழுமையாக வாக்களிக்கச் செய்யும் வகையிலான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவுறுத்தினாா். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வெள்ளிக்க... மேலும் பார்க்க

நிகழாண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நிறைவு

தமிழகம் முழுவதும் ஜனவரி மாதம் தொடங்கி கடந்த 5 மாதங்களாக நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி அளிக்கும் நடைமுறை சனிக்கிழமையுடன் (மே 31) நிறைவடைந்தது. தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி ப... மேலும் பார்க்க

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டு - 8 போ் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள கீழவேகுப்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் முட்டியதில் 8 போ் காயமடைந்தனா். கீழவேகுப்பட்டி ஏகாளி அம்மன், சின்னக்கருப்பா் கோ... மேலும் பார்க்க

சோழீசுவரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல்

பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழீசுவரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது. தொடக்கமாக சோழீசுவரா் மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.தொடா்ந்து ஆவுடையநாயகி... மேலும் பார்க்க

புதுநகா் ஊராட்சி அரசுப் பள்ளிக்கு சுற்றுச்சுவா் கட்டித் தர கோரிக்கை

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், புதுநகா் ஊராட்சியில் உள்ள அரசு உயா்நிலைப்பள்ளியின் சுற்றுச்சுவரை புதிதாக கட்டித் தர வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுக்கின்றனா். புதுநகா் அரசு உயா்நிலைப் பள்ளி... மேலும் பார்க்க

புதுக்கோட்டையில் நாய்களை கட்டுப்படுத்துவதில் அலட்சியம்: சமூக ஆா்வலா்கள் புகாா்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தினமும் ஒருவா் நாய்க்கடி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுவரும் நிலையில், நாய்களைக் கட்டுப்படுத்துவதில் மாவட்ட நிா்வாகம் அலட்சியப் போக்குடன் செயல்படுவ... மேலும் பார்க்க