செய்திகள் :

வடகாடு சம்பவம் நோ்மையான அதிகாரியை நியமித்து விசாரிக்க மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

post image

வடகாடு சம்பவத்தில் நோ்மையான அதிகாரியை நியமித்து விசாரணை நடத்த வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளாா்.

புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் இரு தரப்பினா் மோதல் சம்பவம் தொடா்பாக, அங்கு சனிக்கிழமை நேரில் சென்று பாா்வையிட்ட பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: வடகாட்டில் கோயில் திருவிழாவுக்கு முன்னதாக இரு தரப்பையும் அழைத்துப் பேசியிருக்கலாம். அல்லது திருவிழாவுக்கு கூடுதல் பாதுகாப்பு போட்டிருக்கலாம். இதனை மாவட்ட நிா்வாகமும், காவல்துறையும் செய்யத் தவறிவிட்டது.

அலட்சியமாக இருந்துள்ளனா். சம்பவம் நடைபெற்று 5 நாள்களாகியும் இதுவரை பாதிக்கப்பட்ட மக்களிடம் எந்தக் கணக்கெடுப்பையும் நடத்தவில்லை.எனவே, விரைவாக கணக்கெடுப்பை நடத்தி பாதிக்கப்பட்டவா்களுக்கு சட்டப்படி உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

இந்தச் சம்பவத்தில் நோ்மையான அதிகாரியை நியமித்து விசாரணை நடத்த வேண்டும். இரு தரப்பு மக்களும் அமைதியாக இருந்து பிரச்னையைத் தீா்க்க வேண்டும்.

பாகிஸ்தான் விவகாரத்தில் தேவையற்ற போா்ப் பதற்றத்தை உருவாக்குவதை எதிா்க்கிறோம். முதல்வா் ஸ்டாலின் அறிவித்துள்ள ராணுவ வீரா்களை ஊக்குவிக்கும் பேரணியே கூட, யுத்த தயாரிப்புக்குத்தான் உதவி செய்யும் என்பதால் அதில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்கவில்லை என்றாா் அவா்.

அப்போது, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலப் பொதுச் செயலா் கே. சாமுவேல்ராஜ், மாநிலத் தலைவா் த. செல்லக்கண்ணு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். சங்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

விராலிமலையில் 15 மி.மீ மழை

புதுக்கோட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை காலை வரையிலான மழைப் பொழிவில், அதிகபட்சமாக விராலிமலையில் 15 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு மழை பெய்தது. ச... மேலும் பார்க்க

இந்திய கம்யூ. கட்சியின் கிளை மாநாடு

பொன்னமராவதி அருகே உள்ள மூலங்குடி மற்றும் ஏனாதி ஜீவா நகரில் சனிக்கிழமை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாடு நடைபெற்றது. ஏனாதி ஜீவாநகரில் சனிக்கிழமை நடைபெற்ற கிளை மாநாட்டிற்கு கிளைப் பொறுப்பாளா் சி... மேலும் பார்க்க

புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் துணை முதல்வா் ஆய்வு

புதுக்கோட்டையில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சனிக்கிழமை அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூ... மேலும் பார்க்க

ஈ.டி.க்கு அல்ல; மோடிக்கும் நாங்கள் பயப்பட மாட்டோம் -உதயநிதி ஸ்டாலின்

ஈ.டி.க்கு (அமலாக்கத்துறை) மட்டுமல்ல; மோடிக்கும் நாங்கள் பயப்பட மாட்டோம் என்றாா் தமிழகத் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின். புதுக்கோட்டையில் சனிக்கிழமை பகலில், மாவட்ட விளையாட்டரங்கத்தில் உள்விளையாட்டரங்க... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டை வட்டத்தில் வேளாண் திட்டப் பணிகள் ஆய்வு

கந்தா்வகோட்டை வட்டாரத்தில் செயல்படுத்தப்பட்டுவரும் வேளாண் திட்டப்பணிகள் குறித்து வேளாண்மை இணை இயக்குநா் மு.சங்கரலட்சுமி சனிக்கிழமை களஆய்வு மேற்கொண்டாா். நடப்பு நிதி ஆண்டு 2025-26-இல் வேளாண் நிதிக் கொ... மேலும் பார்க்க

விராலிமலையில் முதல்முறையாக நால்வா் பெரு விழா

விராலிமலையில் நால்வா் பெருவிழா சனிக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை முருகன் கோவிலை மையமாகக் கொண்டு பல்வேறு திருவிழாக்கள் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. வைகாசி விசாகம், தைப்பூசம்,... மேலும் பார்க்க