செய்திகள் :

வருமான வரித் தாக்கலில் இனி உங்களுக்கு Form 16 'இல்லை' சம்பளதாரர்களே! மாற்று என்ன?

post image

வருகிற ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து புதிய வருமான வரிச் சட்டம் அமலாக உள்ளது.

இதனால், வருமான வரிப் படிவத்தில் இருந்து வருமான வரிக் கணக்குத் தாக்கல் வரை... இனி பல புதுப்புது மாற்றங்களைச் சந்திக்க உள்ளோம்.

இதுவரை வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யும் போது, தரவுகளை நாம் நிரப்பி வந்தோம். இனி அப்படி இல்லை.

வருமான வரிப் படிவத்தை ஓபன் செய்தாலே, தரவுகள் ஏற்கனவே பதிவாகி இருக்கும்.

அதை செக் செய்தால் போதுமானது. மேலும், ஏதேனும் தரவுகளில் மாற்றம் இருந்தால், அதை எடிட் செய்துகொள்ளலாம்.

income tax - வருமான வரி
income tax - வருமான வரி

இதே மாதிரி, இனி வருமான வரிப் படிவங்களின் நம்பர்களும் மாற உள்ளதாம்.

வரைவு வருமான வரிச் சட்டம், 2026-ன் கீழ்,

சம்பளதாரர்களின் படிவமான 16-ன் பெயர் 130 ஆக மாற உள்ளது.

இப்படி எந்தெந்த படிவங்களின் பெயர் எப்படி மாற உள்ளது என்பதைப் பார்ப்போம்.

3CA, 3CB, 3CD > 26

16A > 131

24Q > 138

26Q > 140

27Q > 144

26AS > 168

ஆக, இனி வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யும்போது, படிவங்களின் பெயரைப் பார்த்து தாக்கல் செய்யவும் மக்களே.

கோவிட் காலத்தில் பணிபுரிந்த செவிலியர்களுக்கு நிரந்தரப் பணி - நாளை கலந்தாய்வு!

கடந்த 2019 மற்றும் 2020 கோவிட் தொற்றுக் காலத்தில் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான செவிலியர்கள், பிறகு பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.அப்போது வருங்காலங்களில் ரெகுலரான பணி நியமனங்கள் நட... மேலும் பார்க்க

டிமாண்டி சாலை இனி எம்.எஸ்.விஸ்வநாதன் சாலை! - இசை மேதைகளின் பெயரில் சென்னை சாலைகள்!

தமிழகத்தின் திரை மற்றும் இசைத் துறைக்கு ஈடு இணையற்ற பங்காற்றிய பழம்பெரும் கலைஞர்களான எம்.எஸ்.விஸ்வநாதன், சீர்காழி கோவிந்தராஜன், திருச்சி லோகநாதன் ஆகியோரைக் கௌரவிக்கும் வகையில், அவர்கள் வாழ்ந்த மற்றும்... மேலும் பார்க்க

மைக்கேல்பட்டி பள்ளி மாணவி தற்கொலை வழக்கு: `மதமாற்றம் காரணமல்ல' - விரிவான அறிக்கை தாக்கல் செய்த சிபிஐ

தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த லாவண்யா என்ற மாணவி, கடந்த 2022-ம் ஆண்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.சித்தி கொடுமை, பள்ளியில் கொடுத்த கூடுதல் பணி ... மேலும் பார்க்க

`இரவினில் ஆட்டம்; பகலில் தூக்கம்; இதுதான் துணை முதல்வர் உலகம்" - எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு

ஈரோடு மாவட்டம், பவானிசாகரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்ட பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. அதில், எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசுகையில், "முதல்வர் ஸ்டாலின் அதிமுக, பாஜக-வுக்கு ... மேலும் பார்க்க

``இமய மலையாய் நிமிர வேண்டியவன், அதிமுக-வால் பாதாளத்துக்குச் சென்றேன்" - மனம் வெதும்பி பேசிய வைகோ

ஈரோட்டில் மதிமுக தேர்தல் நிதியளிப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசினார். அப்போது அவர், "கடந்த காலத்தில் நான் சில பிழைகளைச் செய... மேலும் பார்க்க

பாஜக-வை எதிர்க்காத விஜய்யுடன் காங்கிரஸ் கூட்டணியா? - குழப்பத்தில் கதர்கள்!

2024 நாடாளுமன்றத் தேர்தலில் விலகிச் சென்ற அ.தி.மு.க-வை, என்.டி.ஏ கூட்டணிக்குள் கொண்டுவந்த டெல்லி பா.ஜ.க., 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியை வீழ்த்த பல்வேறு அஸ்திரங்களை கையிலெடுத்திருக்... மேலும் பார்க்க