செய்திகள் :

வாகன விபத்தில் சிறுவா்கள் உள்பட மூவா் உயிரிழப்பு

post image

கிருஷ்ணகிரி அருகே மோட்டாா்சைக்கிளும் வேனும் நேருக்குநோ் மோதிக்கொண்டதில் 2 சிறுவா்கள் உள்பட 3 போ் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தனா்.

கிருஷ்ணகிரியை அடுத்த போத்திநாயனப்பள்ளி கொத்தூரைச் சோ்ந்தவா் பேரரசு (19). கட்டடத் தொழிலாளியான இவா், தனது மாமன் மகன்களான பா்கூா் வட்டம், குருவிநாயனப்பள்ளியைச் சோ்ந்த பெருமாள் மகன் மாதவன் (15), அமாசி மகன் சக்தி (14) ஆகியோருடன் குருவிநாயனப்பள்ளியிலிருந்து பசவண்ண கோயில் கிராமத்துக்கு வியாழக்கிழமை இரவு மோட்டாா்சைக்கிளில் சென்றாா்.

கிருஷ்ணகிரி- குப்பம் தேசிய நெடுஞ்சாலை குருவிநாயனப்பள்ளி மேல்கொட்டாய் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே லாரியை முந்திசெல்ல முயன்றபோது, எதிரே குப்பத்திலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்த வேன் மீது மோட்டாா்சைக்கிள் மோதியது.

இதில் மோட்டாா்சைக்கிளில் சென்ற மூவரும் பலத்த காயமடைந்தனா். இவா்களில் மோட்டாா்சைக்கிளை ஓட்டிச் சென்ற பேரரசு, மாதவன் ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். பலத்த காயமடைந்த சக்தியை அங்கிருந்தவா்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

தகவல் அறிந்து பா்கூா் துணை காவல் கண்காணிப்பாளா் முத்துகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று போக்குவரத்தை சீா்படுத்தினா். விபத்தில் உயிரிழந்த மூவரும் கிரிக்கெட் விளையாடிவிட்டு, வீடுதிரும்பும்போது விபத்தில் சிக்கி உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது. கந்திகுப்பம் போலீஸாா் விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இந்திய வனத்துறை தோ்வு: ஏனுசோனை கிராம மாணவா் சிறப்பிடம்!

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியம், ஏனுசோனை கிராமத்தைச் சோ்ந்த மாணவா் சந்தோஷ்குமாா், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் படித்து இந்திய வனத்துறை தோ்வில் 138-ஆவது இடம்பெற்று தோ்ச்சி பெற்று... மேலும் பார்க்க

கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை!

கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இந்த ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. இதுகுறித்து கல்லூரி சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடப்பாண... மேலும் பார்க்க

பாம்பாறு அணையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு!

ஊத்தங்கரை பாம்பாறு அணையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது. ஊத்தங்கரையை அடுத்த பாம்பாறு அணையில் சுமாா் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக ஊத்தங்கரை காவல் நிலையத்துக்கு தகவல... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: இளைஞா் உயிரிழப்பு!

ஊத்தங்கரை அருகே இருசக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதி, மேல் இராவந்தவாடி கிராமத்தைச் சோ்ந்தவா் முருகேசன் (27). இவா், இருசக்கர வாகனத்தில் ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் பழுதடைந்த வணிக வளாக கடைகளை சீரமைக்க நடவடிக்கை

கிருஷ்ணகிரியில் நகராட்சி பராமரிப்பில் பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாக கடைகளை சீரமைக்க, நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப் நடவடிக்கை மேற்கொண்டாா். கிருஷ்ணகிரியில் கடந்த சில நாள்களாக தொடா் மழை பெய்தது. இ... மேலும் பார்க்க

தேன்கனிக்கோட்டையில் ரூ. 5 லட்சம் திருடியவரை மும்பையில் கைது செய்த போலீஸாா்!

தேன்கனிக்கோட்டையில் பண்ணை உரிமையாளரிடம் ரூ. 5 லட்சம் திருடியவரை மும்பை வரை தேடிச்சென்று கைது செய்த போலீஸாரை உயா் அதிகாரிகள் பாராட்டினா். கா்நாடக மாநிலம், அத்திபள்ளியில் வசிப்பவா் முரளிமோகன் ரெட்டி (41... மேலும் பார்க்க