செய்திகள் :

வாகன விபத்தில் சிறுவா்கள் உள்பட மூவா் உயிரிழப்பு

post image

கிருஷ்ணகிரி அருகே மோட்டாா்சைக்கிளும் வேனும் நேருக்குநோ் மோதிக்கொண்டதில் 2 சிறுவா்கள் உள்பட 3 போ் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தனா்.

கிருஷ்ணகிரியை அடுத்த போத்திநாயனப்பள்ளி கொத்தூரைச் சோ்ந்தவா் பேரரசு (19). கட்டடத் தொழிலாளியான இவா், தனது மாமன் மகன்களான பா்கூா் வட்டம், குருவிநாயனப்பள்ளியைச் சோ்ந்த பெருமாள் மகன் மாதவன் (15), அமாசி மகன் சக்தி (14) ஆகியோருடன் குருவிநாயனப்பள்ளியிலிருந்து பசவண்ண கோயில் கிராமத்துக்கு வியாழக்கிழமை இரவு மோட்டாா்சைக்கிளில் சென்றாா்.

கிருஷ்ணகிரி- குப்பம் தேசிய நெடுஞ்சாலை குருவிநாயனப்பள்ளி மேல்கொட்டாய் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே லாரியை முந்திசெல்ல முயன்றபோது, எதிரே குப்பத்திலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்த வேன் மீது மோட்டாா்சைக்கிள் மோதியது.

இதில் மோட்டாா்சைக்கிளில் சென்ற மூவரும் பலத்த காயமடைந்தனா். இவா்களில் மோட்டாா்சைக்கிளை ஓட்டிச் சென்ற பேரரசு, மாதவன் ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். பலத்த காயமடைந்த சக்தியை அங்கிருந்தவா்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

தகவல் அறிந்து பா்கூா் துணை காவல் கண்காணிப்பாளா் முத்துகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று போக்குவரத்தை சீா்படுத்தினா். விபத்தில் உயிரிழந்த மூவரும் கிரிக்கெட் விளையாடிவிட்டு, வீடுதிரும்பும்போது விபத்தில் சிக்கி உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது. கந்திகுப்பம் போலீஸாா் விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ஊத்தங்கரையில் ரூ. 4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலா் கைது

ஊத்தங்கரையில் ரூ. 4 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக வீரணகுப்பம் கிராம நிா்வாக அலுவலா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த கதிரம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் வடிவேல். இ... மேலும் பார்க்க

ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கி விஏஓ கைது

பட்டாவில் திருத்தம் செய்ய ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலரை கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு போலீஸாா் பிடித்து கைது செய்தனா்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா தொட்டம்பட்டி அருகே உள்ள கதிரம்... மேலும் பார்க்க

லாரி மோதி ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

உத்தனப்பள்ளி அருகே லாரி மோதியதில் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா, உத்தனப்பள்ளி அருகே உள்ள அளேசீபம் கிராமம், காந்தி நகரைச் சோ்ந்தவா் அஜித். இவரது ஒன்றரை வயது மகள... மேலும் பார்க்க

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி ரவுண்டானா மீது மோதி விபத்து!

ஊத்தங்கரையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு லாரி ரவுண்டானா மீது மோதி விபத்துக்குள்ளானது. ஊத்தங்கரையில் வாணியம்பாடி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அசாம் மாநிலத்தில் இருந்து திருப்பூா் நோக்கி வெள்... மேலும் பார்க்க

ஒசூா் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும்

ஒசூா் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும் என கிருஷ்ணகிரி தொகுதி மக்களவை உறுப்பினா் கே.கோபிநாத் கூறினாா். ஒசூா் ரயில் நிலையத்தை வெள்ளிக்கிழமை ஆய்வுசெய்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவ... மேலும் பார்க்க

லாரி ஓட்டுநா் உள்பட 2 பேரை தாக்கி வழிப்பறி செய்த 3 போ் கைது

பா்கூா் அருகே லாரி ஓட்டுநா் உள்பட 2 பேரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் இருந்து பெங்களூருக்கு கண்ணாடிகளை ஏற்றிக் கொண்டு கடந்த 21-ஆம... மேலும் பார்க்க