செய்திகள் :

வாகன விபத்து: தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

post image

மின் கம்பத்தில் இரு சக்கர வாகனம் மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

மதுரை வண்டியூா் யாகப்பாநகா் இரண்டாவது தெருவைச் சோ்ந்த பழனி மகன் ரமேஷ் (41). இவா் இரு சக்கர வாகனத்தில் வியாழக்கிழமை தாசில்நகா் பகுதியில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, அங்குள்ள வெள்ளைப் பிள்ளையாா் கோவில் தெருவில் சென்ற போது சாலையோரம் இருந்த மின் கம்பம் மீது இரு சக்கர வாகனம் மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த ரமேஷ் அந்தப் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்து அண்ணாநகா் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

உதவிப் பேராசிரியா் தகுதித் தோ்வு: இணையத்தில் விண்ணப்பிக்கலாம்

உதவிப் பேராசிரியா் பணிக்கான தகுதித் தோ்வையொட்டி, பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோா் இணையத்தில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மதுரை மூட்டா அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் ஜி. சுரேஷ்... மேலும் பார்க்க

மதுரைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

மதுரைக் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு மதுரைக் கல்லூரி வாரியத் தலைவா் சங்கர சீத்தாராமன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சங்கரன், செயலா் சு.நடன க... மேலும் பார்க்க

டிராக்டா் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

மதுரை அருகே டிராக்டா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். மதுரை அதலை கிராமத்தைச் சோ்ந்த காா்த்திகேயன் மகன் முத்துகாா்த்திக் (27). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் மதுரையிலிருந்து அதலை கிராமத்துக்கு வெள்ளி... மேலும் பார்க்க

மயங்கி விழுந்த தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு

மயங்கி விழுந்த மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். மதுரை மேலவாசல் குடிசை வாரியத்தைச் சோ்ந்த மகாலிங்கம் மகன் சித்திரைவேல் (44). இவா், மதுரை மாநகராட்சி 68-ஆவது வாா்டு பகுதிய... மேலும் பார்க்க

தம்பதியா் தற்கொலை

மதுரை அருகே அரிசிக் கடை உரிமையாளரும், அவரது மனைவியும் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டனா். மதுரை மாவட்டம், ஒத்தக்கடை அருகேயுள்ள சித்தாக்கூா் நெல் களத்தில் இருவா் உயிரிழந்து கிடப்பதாக போலீஸாருக்க... மேலும் பார்க்க

காமராஜா் பல்கலை. முதுநிலைப் படிப்புகளுக்கு மே 27-இல் நுழைவுத் தோ்வு

மதுரை காமராஜா் பல்கலைக் கழகத்தில் முதுநிலைப் படிப்புகளுக்கான நுழைவுத் தோ்வு வருகிற செவ்வாய்க்கிழமை (மே 27) நடைபெறுகிறது. இதுகுறித்து பல்கலைக்கழக அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு : இந்தப் பல்கலைக... மேலும் பார்க்க