செய்திகள் :

காவல் மரணம்: "ஆகாஷ் டெலிசனின் உடலை வாங்கவில்லை என்றால் அரசே அடக்க செய்யும்" - நீதிபதி கெடு விதிப்பு

post image

சிவகங்கை அருகேயுள்ள மானாமதுரையில் கொலை செய்ய முயற்சித்த வழக்கு ஒன்றில் ஆகாஷ் டெலிசன் என்ற இளைஞரை மானாமதுரை போலீசார் கைது செய்தனர். 

போலீஸ் காவலில் இருந்த ஆகாஷ் டெலிசன் கைதான இரண்டாவது நாளே மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இறப்பதற்கு முன் நீதிமன்ற நடுவரிடம் ஆகாஷ் டெலிசன் கொடுத்த வாக்குமூலத்தில் போலீசார் தன்னுடைய காலை உடைத்ததாகக் கூறியிருந்தது, தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையடுத்து இறப்பிற்குக் காரணமான காவல்துறையினரைக் கைது செய்யும் வரை ஆகாஷ் டெலிசனின் உடலை வாங்க மாட்டோம் எனப் பெற்றொர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மதுரை ராஜாஜி மருத்துவமனையில் கடந்த மூன்று மாதங்களாக ஆகாஷ் டெலிசனின் உடல் வைக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் ஆகாஷின் தந்தை ராஜேஷ்கண்ணன் மதுரை அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில், "50 லட்ச ரூபாய் இழப்பீட்டை வழங்க வேண்டும், சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது எஸ்சி, எஸ்டி பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்'' என்று தெரிவித்து இருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி விக்டோரியா கௌரி, ''விசாரணை அதிகாரி, முடிந்தவரை விரைவாக விசாரணையை முடித்து, சட்டப்படி அதிகார வரம்புக்குட்பட்ட நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்'' என உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில் நேற்று அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

 ஆகாஷ் டெலிசன், ராஜேஷ்கண்ணன்
ஆகாஷ் டெலிசன், ராஜேஷ்கண்ணன்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விக்டோரியாக கௌரி, "மனுதாரர் கோரிக்கைகள்  நிறைவேற்றப்பட்டுள்ளன. இருப்பினும் தற்போது வரை, உடலை பெறாமல் இருப்பது ஏற்கத்தக்கது அல்ல. இறந்தவருக்கு உரிய மரியாதை செய்யப்பட வேண்டும். ஆகவே ஆகாஷின் பெற்றோர் இன்று மாலை 5 மணிக்கு உடலைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

தவறினால் நாளை காவல்துறையே உடலை அடக்கம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்படும்'' என்று உத்தரவிட்டு, வழக்கை இன்றைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து ஆகாஷ் டெலிசனின் பெற்றோர்கள் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

லஞ்சமும் டிஜிட்டல் மயம்! தாம்பரத்தில் ‘ஜிபே’ மூலம் பணம் வாங்கிய மின்வாரிய அதிகாரி சஸ்பெண்ட்

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் காவல் எல்லைக்குட்பட்ட கவுரிவாக்கம் மின்வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளராக (ஏ.இ) பணிபுரிந்து வந்தவர் பத்மாவதி. இவர் புதிய மின் இணைப்பு வழங்குவதற்காக வாடிக்கையாளர் ஒருவரி... மேலும் பார்க்க

வீட்டுக்குள் மாந்திரீகம்; ரத்தக் காயங்களுடன் சிறுவன் பிணம்; விசாரணை வளையத்துக்குள் பாட்டி - கொலையா?

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகேயுள்ள மேல்பட்டி கிராமம் ஆச்சாரி தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவரின் மனைவி ஆஷா. இருவருக்கும் திருமணமாகி ஏழாண்டுகள் ஆகிறது. 6 வயதில் முகிலன் என்ற ஒரேயொரு மகன் மட்... மேலும் பார்க்க

பிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை; மும்பையில் அதிர்ச்சி!

இந்தி சின்னத்திரையில் குங்கும் பாக்யா மற்றும் வாக்லே கி துனியா போன்ற டிவி தொடர்கள் மூலம் பிரபலம் அடைந்தவர், நடிகை சஞ்சிதா உகாலே (30). இவர் மும்பை புறநகர்ப் பகுதியில் உள்ள நாலாசோபாராவில் வசித்து வந்தார... மேலும் பார்க்க

கும்மிடிப்பூண்டி: பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 3 வயது சிறுமி உயிரிழப்பு; கொதித்தெழுந்த கிராம மக்கள்

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே சிப்காட் வளாகத்தை ஒட்டியுள்ள சிறுபுழல்பேட்டை கிராமத்தில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர், தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரின் மூன்று வ... மேலும் பார்க்க

ஈரோடு: மதுபோதையில் லாரியால் மோதிச் சென்ற ஓட்டுநர் - துரத்திச் சென்று பிடித்த துணிச்சல் பெண்!

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஒருவர், நேற்று மாலை ஸ்கூட்டியில் சென்றுள்ளார். ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா சந்திப்பு அருகில் சென்றுக் கொண்டிருக்கையில், பின்னால் வந்த லாரி ஒன்று பெண்ணின் ஸ்... மேலும் பார்க்க

திருவள்ளூரில் 3 வயது பெண் குழந்தை கூட்டுப் பாலியல் வன்கொடுமை - பீகாரை சேர்ந்த ஒருவர் கைது

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ளது சிப்காட் பகுதி ஒன்று. அங்கு நேற்று மாலை ஒரு வட மாநிலத் தம்பதியின் 3 வயது பெண் குழந்தை காணாமல் சென்றுள்ளது. அந்தக் குழந்தையை சிப்காட் பகுதி முழுவதும் தே... மேலும் பார்க்க