செய்திகள் :

`56' ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு அதிரடி!

post image

தமிழகக் காவல்துறையில் ஐ.பி.எஸ் அதிகாரிகள் மற்றும் எஸ்.பி அந்தஸ்திலான 56 உயர் அதிகாரிகளை அதிரடியாக பணி இடமாற்றம் செய்து தமிழக அரசின் உள்துறை இன்று (15.06.2026) உத்தரவிட்டுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அரசாணையை அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் கே.மணிவாசன் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் அரசாரணையின்படி, சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றி வரும் 56 உயர் போலீஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை, தாம்பரம், ஆவடி, கோவை மற்றும் திருச்சி ஆகிய மாநகரங்களின் துணை ஆணையர்கள் மற்றும் முக்கிய மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்கள் (SP) இந்த உத்தரவின் மூலம் மாற்றலாகியுள்ளனர்.

முதல்வர் விஜய்

முக்கிய மாற்றங்களாக, கட்டாயக் காத்திருப்பில் இருந்த டி.ஐ.ஜி இ.எஸ். உமா, சென்னை பெருநகர காவல் தலைமையக டி.ஐ.ஜி-யாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை தி.நகர் துணை ஆணையராக இருந்த எஸ்.குதாலிங்கம், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக (SP) மாற்றப்பட்டுள்ளார். சென்னை அடையார் துணை ஆணையர் ஏ.சி. கார்த்திகேயன் திருவண்ணாமலை மாவட்ட எஸ்பி-யாகவும், திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி விவேகானந்த சுக்லா கடலூர் மாவட்ட எஸ்.பி-யாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், விழுப்புரம் எஸ்.பி வி.வி.சாய் பிரணீத் திருவள்ளூர் மாவட்டத்திற்கும், கடலூர் எஸ்.பி எஸ். ஜெயக்குமார் திண்டுக்கல் மாவட்டத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும் பல மாவட்ட எஸ்.பி-க்கள் மற்றும் மாநகர துணை ஆணையர்களும் புதிய இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அதன்படி, சேலம் மாவட்ட எஸ்.பி கௌதம் கோயல் விருதுநகர் மாவட்டத்திற்கும், தர்மபுரி எஸ்.பி எஸ்.எஸ். மகேஸ்வரன் கோவை மாநகர போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி பி. தங்கதுரை கோவை மாநகர (வடக்கு) சட்டம்-ஒழுங்கு துணை ஆணையராகவும், திருப்பூர் மாவட்ட எஸ்.பி யாதவ் கிரீஷ் அசோக் நாமக்கல் மாவட்ட எஸ்.பி-யாகவும் மாற்றப்பட்டுள்ளனர். பெங்களூரு எல்லைக்கு அருகிலுள்ள கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி-யாக ஜி.எஸ். அனிதா நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை மாநகரக் காவல்துறையிலும் பல்வேறு முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்னை மத்திய குற்றப்பிரிவு (CCB-III) துணை ஆணையராக இருந்த எஸ். ஆரோக்கியம், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஏ.ஐ.ஜி-யாக மாற்றப்பட்டுள்ளார்.

காவல்துறை
காவல்துறை

சென்னை புளியந்தோப்பு துணை ஆணையர் கே. முத்துகுமார், சென்னை தெற்கு போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். தாம்பரம் போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையர் சமே சிங் மீனா, சென்னை புளியந்தோப்பு துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். கட்டாயக் காத்திருப்பில் இருந்த டாக்டர் கே. பிரபாகர், தாம்பரம் போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

``6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் காலை உணவு: பெரியார் பிறந்தநாளில் அமல்" – முதல்வர் விஜய்!

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் இன்று (15.06.2026) முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த முக்கிய ஆய்வுக் கூட்டம் நடைபெற்ற... மேலும் பார்க்க

நெல்லை: ஆட்சியர் அலுவலகம் அருகே தாமிரபரணி கரையை ஆக்கிரமித்துள்ள சீமை கருவேல மரங்கள் | Photo Album

திருநெல்வேலி: ஆட்சியர் அலுவலகம் அருகே தாமிரபரணி ஆற்றங்கரையை ஆக்கிரமித்துள்ள சீமை கருவேல மரங்கள்.!நெல்லை மாவட்டம், சொக்கம்பட்டி சுயம்பூற்றுநாதர் கோயில் : மனச்சுமைகள் குறையும்... உற்சாகம் பிறக்கும்! மேலும் பார்க்க

Zero FIR: குற்றம் நடந்தது ஓர் இடத்தில் என்றாலும், வேறு இடத்தில் புகாரளிக்கலாம்; என்ன நடைமுறை இது?

சில நேரங்களில் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றால், 'இது எங்கள் எல்லைக்குள் வராது' என்று சொல்வதைக் கேட்டிருப்போம். இந்த வசனத்தை திரைப்படங்களில்கூட கேட்டிருப்போம். சாதாரண மக்களுக்கு எங்கே நடந்த ... மேலும் பார்க்க

'அமைதி ஒப்பந்தத்தின் இறுதி வடிவம்' - அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை குறித்து பாகிஸ்தான் பிரதமர்!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் அமைதி ஒப்பந்த பேச்சுவார்த்தையில் திருப்புமுனை ஏற்பட்டிருக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையே இறுதி செய்யப்பட்ட அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாகப்... மேலும் பார்க்க

`சாதி மறுப்புத் திருமணங்களும், தொடரும் ஆணவக் கொலைகளும்!' - கர்நாடகாவைப் பின்பற்றுமா தமிழ்நாடு?

சாதியும் - திருமணமும்அண்ணல் அம்பேத்கர், 'சாதி மறுப்புச் சிந்தனை' (Annihilation of Caste) என்ற தனது நூலில், ``சொந்தச் சாதிக்குள்ளேயே திருமணம் முடித்துக்கொள்ளும் அமைப்புதான், இன்றளவும் 'சாதி' தப்பிப் பி... மேலும் பார்க்க

`மேட்டூர் அணை வரலாற்றில் ஏற்பட்டுள்ள 62-வது ஆண்டு காலதாமதம் இது!' - அதிகாரிகள் சொல்வதென்ன?

காவிரி ஆற்றுப்படுகை பாசனத்தின் அடிப்படை ஆதாரமாகப் பங்காற்றி வருகிறது மேட்டூர் அணை. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் காவிரி நீரால் சுமார் 15 லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கு மேல் குறுவை, சம்பா, தாளடி எ... மேலும் பார்க்க