செய்திகள் :

விஜய் ப்ளான்; அதிமுக யோசனை?! - தவெக முன்னிருக்கும் ஆப்ஷன்கள் என்னென்ன?

post image

மே 2026-ல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், யாரும் எதிர்பார்க்காத ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றத்தைத் தமிழ்நாட்டில் ஏற்படுத்தியுள்ளன. நடிகர் விஜய்-யின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை தனியாக எட்ட முடியவில்லை. இந்தச் சிக்கலான அரசியல் சூழலில் அடுத்து என்ன நடக்கும் என்றக் கேள்வி தமிழ்நாட்டு மக்களின் முகங்களில் கேள்விக்குறியாக இருக்கிறது.

தமிழக சட்டமன்றத்தின் மொத்த இடங்கள் 234.

இதில் த.வெ.க 108 இடங்களையும், தி.மு.க கூட்டணி 60 + 14, அ.தி.மு.க 46 + 7 என வென்றிருக்கின்றன.

த.வெ.க தலைவர் விஜய் திருச்சி கிழக்கு, பெரம்பூர் என இரு தொகுதிகளில் வெற்றிப் பெற்றிருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இதில் ஒரு தொகுதியின் எம்.எல்.ஏ-வாக மட்டுமே அவர் பதவியை தொடர முடியும், என்பதால், ஒரு தொகுதியின் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அதனால், ஒரு தொகுதி எண்ணிக்கை குறையும்.

மேலும், சட்டமன்றத்துக்கான சபாநாயகர் என ஒரு தொகுதி கணக்கில் வராது. எனவே, தற்போது இரண்டு தொகுதிகள் குறைந்து, த.வெ.க கையில் சட்டசபையில் வாக்களிக்க 106 உறுப்பினர்கள் மட்டுமே இருக்கின்றனர்.

எனவே, இடதுசாரிகளான கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விசிக போன்ற திமுக கூட்டணிக் கட்சிகள் ஆதரவளித்தால், தவெக தலைவர் விஜய் ஆட்சியமைக்க முடியும். இது தொடர்பாக இன்று திருமாவளவன், சி.பி.ஐ பாண்டியன், சி.பி.ஐ-எம் சண்முகம் ஆகியோர் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள், ``த.வெ.க-வை ஆதரிப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்" எனத் தெரிவித்திருந்தனர்.

தவெக விஜய்
தவெக விஜய்

இதற்கிடையில், சென்னை பட்டினப்பாக்கத்தில் தவெக தலைவர் விஜய் தன் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அவரின் ஆலோசனையில் இடதுசாரி கட்சிகளை உள்ளிழுப்பதற்கான முடிவுக்கு முக்கியத்துவம் அளிப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், தவெக-வுக்கு ஆதரவளிக்கும் கட்சிகள் அமைச்சரவையில் இடம் எதிர்பார்க்க கூடுதல் வாய்ப்பிருக்கிறது.

அதேநேரம், அதிமுக-வின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்போ, விஜய்க்கு 'எங்களின் பொது எதிரி திமுக-வை வீழ்த்தியதற்காக தவெக ஆட்சி அமைக்க அமைச்சரவைக்கு வெளியிலிருந்து ஆதரவளிக்கத் தயாராக இருக்கிறோம்' எனக் கூறும் யோசனையிலும் இருக்கிறதாம்.

ஆனால் பா.ஜ.க கூட்டணியில் இருக்கும் அதிமுக-வை விஜய் தேர்வு செய்வாரா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக வலம் வருகிறது.

விஜய் விசிக, கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ-க்கள் ஆதரவை பெற்று ஆட்சியமைப்பாரா.... அல்லது அதிமுக முகாமை நோக்கி ஆதரவு கரத்தை நீட்டுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

TVK: "NDA கூட்டணிக் கட்சிகளுக்கு கடிதம் அனுப்பும் எண்ணம் இல்லை" - சி.டி.ஆர். நிர்மல் குமார்

திமுக, அதிமுகவை விட, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும், ஆட்சி அமைக்கப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. நேற்றைய தினம், தவெகவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக காங்கிரஸ் அறிவித... மேலும் பார்க்க

`அஞ்சும் தவெக; அந்தக் கொள்கை உறுதியும் துணிவும் இருக்கிறதா விஜய்யிடம்?' - ஆளூர் ஷாநவாஸ்

108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், ஆட்சி அமைப்பதில் `உதவிக் கரம்' தேவைப்படுகிறது விஜய்-ன் தமிழக வெற்றிக் கழகத்துக்கு. திமுக கூட்டணியில் தொடர்ந்து வந்த காங்கிரஸ், அங்கிருந்து விலக... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி: ஜாம்பவான்களைக் காலி செய்த தவெக 'வழக்கறிஞர்' - நெகிழ்ச்சியில் குடும்பத்தினர்!

முன்னாள் எம்.பி செல்லக்குமார், சிட்டிங் அமைச்சர் அசோக்குமார் என இரண்டு 'வெயிட்டான' புள்ளிகளை எதிர்த்து, முதல் தேர்தலிலேயே கிருஷ்ணகிரி கோட்டையைத் தட்டித் தூக்கியிருக்கிறார் இந்த வழக்கறிஞர்.​யார் இந்த ம... மேலும் பார்க்க

`ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லை' - விஜய் உடனான சந்திப்பு குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம்!

ஆட்சியமைக்க பெரும்பான்மை ஆதரவு தேவை என ஆளுநர் வலியுறுத்தியதாக, தகவல் வெளியாகியிருக்கிறது.தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தன... மேலும் பார்க்க

`இரண்டு பி.எல்.ஓக்கள் காணாமப் போனாங்க!' - மம்தா தொகுதியான பவானிப்பூர் எஸ்.ஐ.ஆர் அதிகாரி சி.முருகன்

மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை இழந்துள்ளது.ஆனாலும் அந்தக் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, ‘நான் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன், தேர்தலில் சதி நடந... மேலும் பார்க்க

"ஆளுநர் மூலம் அரசியல் சாசனத்திற்கு விரோதமாக நடக்கிறது பாஜக" - பெ.சண்முகம் குற்றச்சாட்டு

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் என்கிற குரல் தற்போது தமிழ்நாடு முழுவதும் எழுந்துள்ளது. இதையடுத்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்... மேலும் பார்க்க