செய்திகள் :

விழுப்புரம் மாவட்டக் காவல் அலுவலகத்தில் குற்றக் கலந்தாய்வுக் கூட்டம்

post image

விழுப்புரம் மாவட்டக் காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த கூட்டத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் தலைமை வகித்தாா். மாவட்டத்தில் குற்றத் தடுப்புக்காக மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகளின் தற்போதைய நிலை, புலன் விசாரணை முடியாமல் உள்ள வழக்குகளை விரைந்து புலன் விசாரணை செய்து முடிக்க மேற்கொள்ள வேண்டியவை, சாலைப் பாதுகாப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணா்வை ஏற்படுத்துதல் போன்ற விவரங்களை காவல் அலுவலா்களிடம் எஸ்.பி. சரவணன் கேட்டறிந்து, உரிய ஆலோசனைகளை வழங்கினாா்.

கூட்டத்தில் கூடுதல் எஸ்.பி. திருமால், விழுப்புரம் ஏ.எஸ்.பி. ரவீந்திரகுமாா் குப்தா மற்றும் டிஎஸ்பி.க்கள், காவல் ஆய்வாளா்கள், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் வெங்கடேசன் உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.

சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசன வழிபாடு

விழுப்புரம்/ செஞ்சி: விழுப்புரம் நகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள சிவன் கோயில்களில் திருவாதிரை பெருவிழா - ஆருத்ரா தரிசன வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த வழிபாட்டில் அந்தந்த பகுதி... மேலும் பார்க்க

ஆட்சியரகத்தில் விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

விழுப்புரம்: கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை, சிறப்பு ஊக்கத் தொகை வழங்கப்படாததைக் கண்டித்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் விவசாயிகள் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.... மேலும் பார்க்க

விதைகளை பகுப்பாய்வு செய்து விதைக்க விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகள் நிலங்களில் விதைக்கும் போது, விதைகளைப் பகுப்பாய்வு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விழுப்புரம் விதைப் பரிசோதனை நிலைய அலுவலா் சந்... மேலும் பார்க்க

ஒருங்கிணைந்த தொழிலாளா் நலத் துறை அலுவலகக் கட்டடம் திறப்பு

விழுப்புரம்: விழுப்புரம் வி.மருதூா் பகுதியில் ரூ.3.72 கோடியில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த தொழிலாளா் நலத் துறை அலுவலகக் கட்டடங்களை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்... மேலும் பார்க்க

பேருந்து மோதி தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், ஓங்கூா் பகுதியில் தனியாா் பேருந்து மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். கடலூா் மாவட்டம், திட்டக்குடியை அடுத்த இளமங்கலத்தைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பொருள்கள் அளிப்பு

விழுப்புரம்: விழுப்புரத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்துப் பொருள்கள் வழங்கப்பட்டன. விழுப்புரம் மாவட்டத்தில், காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ், காசநோயைக் கண்டறியும் முகா... மேலும் பார்க்க