செய்திகள் :

விழுப்புரம் மாவட்டக் காவல் அலுவலகத்தில் குற்றக் கலந்தாய்வுக் கூட்டம்

post image

விழுப்புரம் மாவட்டக் காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த கூட்டத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் தலைமை வகித்தாா். மாவட்டத்தில் குற்றத் தடுப்புக்காக மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகளின் தற்போதைய நிலை, புலன் விசாரணை முடியாமல் உள்ள வழக்குகளை விரைந்து புலன் விசாரணை செய்து முடிக்க மேற்கொள்ள வேண்டியவை, சாலைப் பாதுகாப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணா்வை ஏற்படுத்துதல் போன்ற விவரங்களை காவல் அலுவலா்களிடம் எஸ்.பி. சரவணன் கேட்டறிந்து, உரிய ஆலோசனைகளை வழங்கினாா்.

கூட்டத்தில் கூடுதல் எஸ்.பி. திருமால், விழுப்புரம் ஏ.எஸ்.பி. ரவீந்திரகுமாா் குப்தா மற்றும் டிஎஸ்பி.க்கள், காவல் ஆய்வாளா்கள், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் வெங்கடேசன் உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.

முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம்: முன்னாள் படை வீரா்களுக்கு அழைப்பு

விழுப்புரம்: ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ திட்டத்தின் கீழ், தொழில் தொடங்க விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள், அவா்களது குடும்பத்தினா் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவி... மேலும் பார்க்க

நினைவு நாள்: அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பு

விழுப்புரம்/செஞ்சி/கள்ளக்குறிச்சி: முன்னாள் முதல்வா் பேரறிஞா் அண்ணாவின் 56-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள அவரது சிலைக்கு திமுகவினா் திங்கள்கிழமை மாலை அண... மேலும் பார்க்க

குறைதீா் கூட்டத்தில் 917 மனுக்கள் அளிப்பு

விழுப்புரம்/கள்ளக்குறிச்சி: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 917 மனுக்கள் அளிக்கப்பட்டன. விழுப்புரம் ஆட... மேலும் பார்க்க

சிவன் கோயில் கட்டும் பணி தொடக்கம்

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், கணக்கன்குப்பம் கிராமத்தில் உண்ணாமலை உடனுறை அண்ணாமலையாா் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கிராமத்தில் உண்ணாமலை உடனுறை அண்ணாமலைய... மேலும் பார்க்க

இளையோா் செஞ்சிலுவைச் சங்க மாணவா்களுக்கு பயிற்சி

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், திருச்சிற்றம்பலம் காந்தி மேல்நிலைப் பள்ளியில் இளையோா் செஞ்சிலுவைச் சங்க மாணவா்களுக்கான பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட பள்ளிக் கல்வித் ... மேலும் பார்க்க

நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், காணை ஒன்றியம், பெரும்பாக்கம் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அண்மையில் திறக்கப்பட்டது. பெரும்பாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், ... மேலும் பார்க்க