செய்திகள் :

வெயிலில் மயங்கிய அதிமுக வேட்பாளர்; மருத்துவமனையில் நலம் விசாரித்த திமுக வேட்பாளர் கோவி.செழியன்

post image

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று திருவிடைமருதுார் தனி தொகுதி. இங்கு தி.மு.க சார்பில், உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், அ.தி.மு.க., சார்பில், முன்னாள் எம்.எல்.ஏ இளமதி சுப்பிரமணியன், நாம் தமிழர் கட்சி சார்பில் திவ்யபாரதி, த.வெ.க சார்பில் பிரபாகரன் உள்ளிட்டோர் வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர். அனைத்து வேட்பாளர்களும் தொகுதிக்குள் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிமுக வேட்பாளரை நலம் விசாரித்த கோவி.செழியன்

அதிமுக வேட்பாளர் இளமதி சுப்பிரமணியன், ஆடுதுறை பேரூராட்சியில் தொடங்கி கோவிந்தபுரம், வண்ணக்குடி உட்பட 12 கிராமங்களில் வாக்கு கேட்டு பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது வெயில் கடுமையாக அடித்ததால் வெப்பம் அதிகமாக இருந்தது. போகப் போக வெயில் அதிகமானதால் வண்ணக்குடியில், பிரசாரம் செய்துகொண்டு இருந்த இளமதி சுப்பிரமணியன் வெயில் தாங்க முடியாமல் திடீரென மயங்கினார். அங்கிருந்த நிர்வாகிகள் அவரை, ஆடுதுறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு அவரைப் பரிசோதனை செய்த டாக்டர், வெயில் தாக்கத்தால் உடல் சோர்வு ஏற்பட்டுள்ளது என்றதுடன் அதற்கேற்ப சிகிச்சை அளித்துள்ளார். அப்போது அந்தப் பகுதியில் திமுக வேட்பாளர் கோவி.செழியன் மற்றும் மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி சுதா, முன்னாள் திமுக எம்.பி ராமலிஙகம் உள்ளிட்டோர் பிரசாரம் செய்து கொண்டு இருந்தனர். கோவி.செழியனுக்கு, இளமதி சுப்பிரமணியன் மருத்துவமனையில் அட்மிட் ஆன தகவல் தெரிய வர உடனே வாக்கு சேகரிப்பை பாதியில் நிறுத்தி விட்டு, அனைவருடனும் மருத்துவமனைக்குச் சென்று அதிமுக வேட்பாளர் இளமதி சுப்பிரமணியனிடம் உடல்நிலை குறித்து விசாரித்துள்ளார்.

மயங்கிய அதிமுக வேட்பாளர்

அப்போது, கோவி.செழியனுக்கு வணக்கம் வைத்து நன்றியை வெளிப்படுத்தினார் இளமதி. இந்த சம்பவம் திருவிடைமருதூர் தொகுதியில் பேசு பொருள் ஆனது. பிரசாரங்களில் இரு கட்சியினரும் கடுமையாக விமர்சித்து கொள்கின்றனர். அரசியல் ரீதியாக எதிர் எதிராக இருந்தாலும் அதை பார்க்காமல் ஓடிச் சென்று வகம் விசாரித்த கோவி.செழியனின் அரசியல் மாண்பை பலரும் பாராட்டினர். இது குறித்து இளமதி சுப்பிரமணியன் கூறியதாவது, ``எனக்கு சாதாரண தலைச்சுற்றல் தான். சிறிது நேரம் ஓய்வெடுத்த பிறகு, தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டேன். என்னை நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி" என்றார்.

சபரிமலை: ``நுழைவது மட்டும் உரிமையல்ல; பாரம்பர்யத்தைக் காப்பதும் உரிமைதான்" - மத்திய அரசு வாதம்!

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாம் என்ற தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரும் மனுக்கள் மீதான விசாரணை நடந்து வருகிறது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான இந்த அ... மேலும் பார்க்க

'திமுக வெற்றி பெற்றாலும், ஸ்டாலின் முதலமைச்சராக மாட்டார்' - மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சாவல்

கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் இன்று (09-04-2026) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டிற்கு என தனி... மேலும் பார்க்க

`கடந்த 5 ஆண்டுகளில் 8,900 கொலைகள்; தமிழ்நாட்டு மக்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை' - பியூஷ் கோயல்

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரசாரம் பரபரப்பாக நடந்து வருகிறது. இதற்கிடையில் என்.டி.ஏ கூட்டணிக்காக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பிரசாரத்தை முன்னெடுத்தார். அதைத் தொடர்ந்து கோவையில் செய்தியாளர... மேலும் பார்க்க

`ஜெயலலிதா டு விஜயகாந்த்' - தமிழக அரசியலில் சினிமா பிரபலங்களைத் தோற்கடித்த வேட்பாளர்கள் யார் யார்?

தமிழக அரசியலில் சினிமாவுக்கும் அரசியலுக்கும் நீண்டகாலத் தொடர்பு உண்டு. எம்.ஜி.ஆர், கலைஞர், ஜெயலலிதா போன்றவர்கள் அரசியலில் பெரும் வெற்றி பெற்றாலும், பல முன்னணித் திரை நட்சத்திரங்கள் மக்களிடம் செல்வாக்க... மேலும் பார்க்க