TNEB-ல் இப்போது 300 AEE-களுக்கு வேலை; மீதி 116 பேர் தகுதியற்றவர்களா? தவெக அரசுக்...
'வெளிச்சம் டிவி எழுச்சி தமிழருக்காக தொடங்கப்பட்டது; அப்படியே தொடரும்'- திமுகவில் இணைந்த பனையூர் பாபு
இன்று விசிகவின் ஊடகப் பிரிவு முதன்மைச் செயலாளர் பனையூர் பாபு திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார்.
திமுகவில் ஏன் இணைந்தார் என்பது குறித்து பனையூர் பாபு கூறுவதாவது...
"எப்போதும் அம்பேத்கர், தந்தை பெரியார் மற்றும் கார்ல் மார்க்ஸ் ஆகியோரின் கொள்கைப் பாதையிலேயே பயணிப்பேன். அந்த அரசியல் பயணம் திமுகவிலும் தொடரும்.

சீட்டுக்காக நான் கட்சியை விட்டு வெளியேறவில்லை. வேட்பாளர் அறிவிப்பு முதல் வாக்கு எண்ணிக்கை வரை விசிகவிலேயே இருந்தேன். அதற்குப் பின் நடந்த சில அரசியல் நகர்வுகளால் ஏற்பட்ட நிர்பந்தத்தினால் தான் வெளியேறினேன்.
மாநில அரசாங்கத்தில் மட்டுமல்ல, ஒன்றிய அரசாங்கத்திலும் ஆட்சியில் பங்கு பெறுவதற்கான தகுதி திருமா அண்ணனுக்கு உண்டு.
கொள்கை மாறாமல் இருக்க வேண்டுமானால், ஒன்றிய அரசிலேயே அமைச்சர் ஆகியிருக்கலாம் அல்லவா அவர்?
தவெக ஆதரவு குறித்து முன்பு எதுவும் திருமா அண்ணன் என்னிடம் கூறவில்லை.
பெயரளவில் மட்டுமே அம்பேத்கரையும், அண்ணாவையும் கொள்கைத் தலைவராக வைத்திருக்கிறார் விஜய்.
2016-ம் ஆண்டு காலகட்டத்தில் விசிகவின் எந்தவொரு நிகழ்வும் பெட்டி செய்தியாகக் கூட வராது. வெளிச்சம் தொலைகாட்சி தொடங்கப்பட்ட பிறகே, விசிகவின் நிகழ்வுகளை மக்களிடம் கொண்டு சேர்க்க ஒரே தொலைகாட்சி - வெளிச்சம் தொலைகாட்சி.
அந்தத் தொலைகாட்சிக்கும், விசிகவிற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அது என்னுடைய சொந்தக் காசில் தொடங்கப்பட்ட தொலைகாட்சி.
அந்தத் தொலைகாட்சி எழுச்சி தமிழருக்காகத் தொடங்கப்பட்டது. அது அப்படியே தொடரும்".















