செய்திகள் :

'வெளிச்சம் டிவி எழுச்சி தமிழருக்காக தொடங்கப்பட்டது; அப்படியே தொடரும்'- திமுகவில் இணைந்த பனையூர் பாபு

post image

இன்று விசிகவின் ஊடகப் பிரிவு முதன்மைச் செயலாளர் பனையூர் பாபு திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார்.

திமுகவில் ஏன் இணைந்தார் என்பது குறித்து பனையூர் பாபு கூறுவதாவது...

"எப்போதும் அம்பேத்கர், தந்தை பெரியார் மற்றும் கார்ல் மார்க்ஸ் ஆகியோரின் கொள்கைப் பாதையிலேயே பயணிப்பேன். அந்த அரசியல் பயணம் திமுகவிலும் தொடரும்.

திமுகவில் இணைந்த பனையூர் பாபு
திமுகவில் இணைந்த பனையூர் பாபு

சீட்டுக்காக நான் கட்சியை விட்டு வெளியேறவில்லை. வேட்பாளர் அறிவிப்பு முதல் வாக்கு எண்ணிக்கை வரை விசிகவிலேயே இருந்தேன். அதற்குப் பின் நடந்த சில அரசியல் நகர்வுகளால் ஏற்பட்ட நிர்பந்தத்தினால் தான் வெளியேறினேன்.

மாநில அரசாங்கத்தில் மட்டுமல்ல, ஒன்றிய‌‌ அரசாங்கத்திலும் ஆட்சியில் பங்கு பெறுவதற்கான தகுதி திருமா அண்ணனுக்கு உண்டு.

கொள்கை மாறாமல் இருக்க வேண்டுமானால், ஒன்றிய அரசிலேயே அமைச்சர் ஆகியிருக்கலாம் அல்லவா அவர்?

தவெக ஆதரவு குறித்து முன்பு எதுவும் திருமா அண்ணன் என்னிடம் கூறவில்லை.

பெயரளவில் மட்டுமே அம்பேத்கரையும், அண்ணாவையும் கொள்கைத் தலைவராக வைத்திருக்கிறார்‌ விஜய்.

2016-ம் ஆண்டு காலகட்டத்தில் விசிகவின் எந்தவொரு நிகழ்வும் பெட்டி செய்தியாகக் கூட வராது. வெளிச்சம் தொலைகாட்சி தொடங்கப்பட்ட பிறகே, விசிகவின் நிகழ்வுகளை மக்களிடம் கொண்டு சேர்க்க ஒரே தொலைகாட்சி - வெளிச்சம் தொலைகாட்சி.

அந்தத் தொலைகாட்சிக்கும், விசிகவிற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அது என்னுடைய சொந்தக் காசில் தொடங்கப்பட்ட தொலைகாட்சி.

அந்தத் தொலைகாட்சி எழுச்சி தமிழருக்காகத் தொடங்கப்பட்டது. அது அப்படியே தொடரும்".

TNEB-ல் இப்போது 300 AEE-களுக்கு வேலை; மீதி 116 பேர் தகுதியற்றவர்களா? தவெக அரசுக்கு திமுக கேள்வி!

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் (TNEB) 300 உதவி செயற்பொறியாளர்களுக்கு (AEE) பதவி உயர்வு வழங்கப்பட்டதில் உள்ள‌ குளறுபடிகள் குறித்து திமுக அறிக்கை வெளியிட்டுள்ளது.அந்த அறிக்கை இதோ..."நாள் ஒரு பொய்! பொழுதொ... மேலும் பார்க்க

நாளை டெல்லியில் இந்தியா கூட்டணி கூட்டம்; திமுக பங்கேற்கவில்லை: 'ஒற்றுமையாக இருக்கிறோம்' - காங்கிரஸ்

நாளை டெல்லியில் இந்தியா கூட்டணியின் கூட்டம் நடக்க உள்ளது. இந்தக் கூட்டத்தில் திமுக கலந்துகொள்ளாது. ஆனால், கூட்டத்தில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகள் முன்வைக்கும் நாட்டு நலன்களைப் பாதிக்கும் பிரச்னைகளுக்க... மேலும் பார்க்க

'மாநகராட்சியில் சொத்துக்கணக்கை காட்டாத மேயர் பிரியா உட்பட 157 கவுன்சிலர்கள்!' - விவரம் என்ன?

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்ட சென்னை மாநகராட்சியை சேர்ந்த 157 மாமன்ற உறுப்பினர்கள் தங்களின் சொத்துக் கணக்கை மாநகராட்சியில் தாக்கல் செய்யவில்லை என்கிற தகவல் வெ... மேலும் பார்க்க

பதவியேற்ற செ.ம.வேலுசாமி, புறக்கணித்த எஸ்.பி.வேலுமணி – கோவை அதிமுகவில் தொடரும் மோதல்!

சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, த.வெ.க. அரசிற்கு ஆதரவு அளித்த எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் தலைமையிலான சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் கட்சி பதவிகள் பறிக்கப்... மேலும் பார்க்க

விசிகவில் இருந்து திமுக-வில் இணைந்தார் பனையூர் பாபு!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் தான் போட்டியிட்டது விடுதலை சிறுத்தைகள் கட்சி.பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றாலும், இந்தத் தேர்தலில் பெரும்பான்மையைப் பெறவில்லை தமிழக வெற்றிக் கழகம்.... மேலும் பார்க்க

‘சீமான் திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக மாறியது ஏன்?' – காங்கிரஸ் கடும் தாக்கு!

காங்கிரஸின் மாநில பொதுச் செயலாளர் கணபதி சிவகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்யச் சொல்லி மேடைகளில் நகைச்சுவை நாடகம் நடத்தும் சீமானுக்கு, அந்தக் கேள்வியை... மேலும் பார்க்க