செய்திகள் :

வேலை தேடி வந்த இடத்தில் காதல்; எதிர்ப்பால் திருமணத்தை ரத்து செய்த தன்பால் ஈர்ப்பாளர்களான தோழிகள்

post image

ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்களின் திருமணம் இதுவரை அங்கீகரிக்கப்படாமல் இருக்கிறது. ஆனால் சில இடங்களில் அதுபோன்ற திருமணங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

புனே பிம்ப்ரி போலீஸ் நிலையத்தில் போலீஸாகப் பணியாற்றி வரும் இரு பெண்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒன்றாக ஒரே வீட்டில்தான் வசித்து வருகின்றனர். அவர்களில் ஒருவருக்கு புனே மாவட்டம் ஆகும். மற்றொருவருக்கு மகாராஷ்டிராவின் வடக்கு பகுதியாகும்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக இரண்டு பேரும் புனே வந்தனர். அப்போது அவர்கள் ஒன்று சேர்ந்து வேலை தேட ஆரம்பித்தனர்.

அதோடு அவர்கள் போலீஸ் வேலைக்கும் தேர்வு எழுதினர். இத்தேர்வில் இரண்டு பேருக்கும் புனே பிம்ப்ரி போலீஸ் நிலையத்தில் வேலை கிடைத்தது. இதனால் இருவருக்கும் இடையேயான நெருக்கம் அதிகரித்து ஒரின தம்பதியாக சேர்ந்து வாழ்ந்தனர்.

தங்களது இந்த இணைப்பைச் சட்டப்பூர்வமாக மாற்ற இரண்டு பேரும் முடிவு செய்தனர். இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து அதற்கான அழைப்பிதழ்களையும் அச்சடித்தனர்.

தங்களுக்குத் தெரிந்தவர்கள் அனைவருக்கும் இருவரும் திருமண அழைப்பிதழைக் கொடுக்க ஆரம்பித்தனர்.

இறுதியில் திருமணத்திற்கு விடுமுறை வேண்டும் என்று கோரி திருமண அழைப்பிதழுடன் தங்களது உயர் அதிகாரியைச் சந்தித்தனர். அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தது அதன் பிறகுதான் போலீஸ் நிலையத்தில் அனைவருக்கும் தெரிய வந்தது.

அதோடு இந்த விவகாரம் புனேயைச் சேர்ந்த பெண்ணின் குடும்பத்திற்கும் தெரியவந்தது. அவர்கள் உடனே போலீஸ் நிலையத்திற்கு வந்து தகராறு செய்தனர். ஆனால் அங்கு இருந்த போலீஸார் இரு பெண்களின் முடிவில் தங்களால் தலையிட முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்தனர்.

இருவரும் வரும் 30ம் தேதி திருமணம் செய்து கொள்ள தேதி குறித்து இருந்தனர். ஆனால் அதற்கான நேரம் நெருங்க நெருங்க திருமணத்தை ரத்து செய்யவேண்டும் என்று கோரி அவர்கள் இரண்டு பேருக்கும் நெருக்கடி அதிகரித்தது.

குடும்பத்தினர் மற்றும் பல்வேறு தரப்பினரின் நெருக்கடி காரணமாக இரண்டு பெண்களும் தங்களது திருமணத்தை ரத்து செய்துவிட்டனர். ஆனால் தாங்கள் இருவரும் சேர்ந்து வாழ்வதை யாராலும் தடுக்க முடியாது என்று அப்பெண்கள் தெரிவித்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி: `கள்ளச்சாராய மரணங்களுக்கு அதிகாரிகளே காரணம்!’ - கோகுல்தாஸ் அறிக்கை சொல்வதென்ன ?

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் 19-ம் தேதி அதிகாலையில் கள்ளச்சாராயம் குடித்ததால் ஒன்று, இரண்டு என மெல்லத் தொடங்கிய உயிரிழப்புகள், அன்று நள்ளிரவைத் தாண்டுவதற்குள் கருணாபுரம... மேலும் பார்க்க

"எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும்..!"- முதல்வர் விஜய் விளக்கம்

நேற்று (செப்.7) நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் காவல்துறை, தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது முதல்வர் விஜய், திமுகவை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். சர்க்காரியா கமிஷன், ... மேலும் பார்க்க

மதுராந்தகம் இடைத்தேர்தல்: தவெக-வில் சீட் வார்... மரகதம் குமரவேலுக்கு எதிராக உருவாகும் ரேஸ்!

தமிழகத்தில் காலியாக இருக்கும் ஏழு தொகுதிகளில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவித்திருக்கிறது இந்திய தேர்தல் ஆணையம். அந்த இரண்டு தொகுதிகளிலும் எம்.எல்.ஏ-க்களாக இருந்து, பத... மேலும் பார்க்க

`ஆளுங்கட்சியினர் அதிமுகவினரை தாஜா செய்கிறார்கள்; இடைத்தேர்தலில் நாங்கள்..!' - எடப்பாடி பழனிசாமி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். "இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு தொகுதிகளும் (மதுராந்தகம், தாராபுரம்) ஏற்கெனவே அதிமுக வெற்றி பெற்ற இடங்கள்... மேலும் பார்க்க

`நீதி கேட்கும் அதிமுக; குறைகூறும் திமுக... நம்பிக்கையில் தவெக' - இடைத்தேர்தல் களம் எப்படி இருக்கும்?

தமிழகத்தில் 7 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதன்படி, இவ்விரு தொகுதிகளுக்க... மேலும் பார்க்க

சீரற்ற சாலை; மருத்துவக் கழிவுகளால் நோய் பரவல் அபாயம்; கவனிப்பை பெறுமா செங்கல்பட்டு அரசு மருத்துவமனை?

தமிழகத்தின் முக்கிய நெடுஞ்சாலையான ஜி.எஸ்.டி சாலைக்கு அருகில் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது.தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்லும் இந்த மருத்துவமனை... மேலும் பார்க்க