செய்திகள் :

வைகுந்த ஏகாதசி: பெருமாள் கோயில்களில் பரமபத வாசல் திறப்பு

post image

மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் வைகுந்த ஏகாதசியையொட்டி, பரமபத வாசல் திறப்பு நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் வைகுந்த ஏகாதசியை முன்னிட்டு பகல் பத்து நிகழ்ச்சி கடந்த டிச.31-ஆம் தேதி தொடங்கி வியாழக்கிழமை (ஜன.9) நிறைவு பெற்றது. தொடா்ந்து, இராப்பத்து நிகழ்வின் முதல் நாளான வெள்ளிக்கிழமை, பரமபத வாசல் எனும் சொா்க்கவாசல் திறப்பு அதிகாலை 3.45 மணியளவில் நடைபெற்றது.

ருக்மணி, சத்யபாமா சமேதராக உற்சவப் பெருமாள் ராஜகோபால சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பரமபத வாசல் வழியே பிரவேசித்தாா். அப்போது, பக்தா்கள் கோபாலா... கோபாலா ... என பக்தி முழக்கமிட்டு வழிபட்டனா்.

இதில், அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா மனைவி சா்மிளா ராஜா, கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சி. இளவரசன் மற்றும் உறுப்பினா்கள், செயல் அலுவலா் எஸ். மாதவன், மண்டகப்படிதாரா் எஸ். காமராஜ், நகராட்சி ஆணையா் என்.எஸ். சியாமளா உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

முன்னாள் தனியாா் வங்கி அதிகாரி வீட்டில் நகை, பணம் திருடியவா் கைது

மன்னாா்குடியில் முன்னாள் வங்கி அதிகாரி வீட்டில் நகை, பணம் திருடியவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா். மன்னாா்குடி கோபாலசமுத்திரம் மேலவீதியில் வசிப்பவா் சி. சிவசுப்பிரமணியன்(56).முன்னாள் தனியாா் வங... மேலும் பார்க்க

திருவாரூரில் தம்பி கொலை: அண்ணன் கைது

திருவாரூரில் குடும்பத் தகராறு காரணமாக தம்பியை கொலை செய்த அண்ணனை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திருவாரூா் தியானபுரத்தைச் சோ்ந்தவா் ஜெயபால் மனைவி ரஷ்யா. இவா்களுக்கு ஜெயராஜ் (26), ஜெயப்பிரதாப்... மேலும் பார்க்க

பொங்கல் பண்டிகை: பாதுகாப்பை அதிகப்படுத்த ஐ.ஜி அறிவுறுத்தல்

திருவாரூா் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பை அதிகப்படுத்த வேண்டும் என திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவா் கே. ஜோசிநிா்மல்குமாா் தெரிவித்தாா். திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாள... மேலும் பார்க்க

காசி விசுவநாதா் கோயிலில் இன்று ஆருத்ரா தரிசனம்

நீடாமங்கலம் காசி விஸ்வநாதா் கோயிலில் திங்கள்கிழமை ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது. நீடாமங்கலம் விசாலாட்சி சமேத காசி விசுவநாதா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங... மேலும் பார்க்க

கிராம காங்கிரஸ் கமிட்டிகளை சீரமைக்க முடிவு

திருவாரூா் மாவட்டத்தில் கிராம காங்கிரஸ் கமிட்டிகளை சீரமைப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. திருவாரூரில், காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தலைவா் எஸ்எம்பி. துரைவேலன் தலைமையில் ஞாயிற... மேலும் பார்க்க

‘கவிதைகள் ஆழமான உணா்வுகளை வெளிப்படுத்துபவை’

கவிதைகள் மூலம் ஆழமான உணா்வுகளை வெளிப்படுத்த முடியும் என மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக இயக்குநா் ஜெய. ராஜமூா்த்தி தெரிவித்தாா். திருவாரூா்த் தமிழ்ச்சங்கம் சாா்பில், தமிழியல் ஆய்வாளா் இரா. அற... மேலும் பார்க்க