செய்திகள் :

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஆண்டாள் கோயிலில் கைசிக ஏகாதசி சிறப்பு வைபவம்; தமிழக, கேரள பக்தர்கள் தரிசனம்

post image

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் 108 வைணவ திவ்ய தேசங்களில் மிகவும் சிறப்புப் பெற்ற திருத்தலமாகும். இது பழமையானதும், ஆழ்வார்களுள் பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த திருத்தலமும் ஆகும். தமிழக அரசின் அரசு சின்னமாக இக்கோயிலின் கோபுரம் விளங்குவது இதன் சிறப்பை எடுத்துரைக்கிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில்

கைசிக ஏகாதசியின் புராண வரலாறு:

கைசிக ஏகாதசி, கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி அன்று வரும். பாணர் குலத்தைச் சேர்ந்த நம்பாடுவார் என்ற பக்தர் திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி கோயிலில் குடிகொண்டுள்ள நம்பிப்பெருமாளை கைசிகப் பண் இசையில் பாடியதால் இந்த ஏகாதசியை கைசிக ஏகாதசி என்று அழைக்கிறார்கள்.

நம்பாடுவார் தனது பெருமாள் பக்தியின் காரணமாக, தன்னை உண்ண வந்த பிரம்ம ராட்சஸனிடம் ஒரு வாய்ப்பு கேட்டு, பெருமாளைப் பாடிவிட்டு வந்து தன்னை உணவாகக் கொள்ளுமாறு கூறினார். பெருமாளைப் பாடி வந்த நம்பாடுவார், கைசிகப் பண்ணின் புண்ணிய பலத்தைத் தந்து பிரம்ம ராட்சஸனின் சாபத்தை நீக்கினார் இதுதான் கைசிக ஏகாதசியின் புராண வரலாறு.

108 போர்வை சாற்றும் வைபவத்தின் சிறப்பு:

இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் சுக்ல பட்ச ஏகாதசி அன்று நம்பாடுவான் என்ற பக்தனுக்குப் பெருமாள் அருள் செய்ததை முன்னிட்டும், குளிர் காலம் வருவதால் அதனைப் பக்தர்களுக்கு அறிவிக்கும் வண்ணமும் இங்கு கோயில் கொண்டு அருள் பாலிக்கும் சுவாமிகளுக்கு 108 போர்வைகள் சாற்றப்படும் வைபவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

108 போர்வை சாற்றுதல்
108 போர்வை சாற்றுதல்

அதுபோல் இந்த ஆண்டு இவ்வைபவம் இன்று அதிகாலை சிறப்பாக நடைபெற்றது. இந்த வைபவத்தின்போது இன்று ஒரு நாள் மட்டுமே கருடாழ்வார் தமது கருட சன்னதியிலிருந்து புறப்பட்டு பகல் பத்து மண்டபத்தில் எழுந்தருளுவார். இது வருடத்தில் ஒரே ஒரு நாள் மட்டும் நடைபெறும் அரிய காட்சியாகும்.

யாருக்கெல்லாம் போர்வை சாற்றப்படுகிறது:

இங்கு ஆண்டாள், ரங்கமன்னார், பெரிய பெருமாள், ஸ்ரீதேவி, பூமிதேவி, ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள் ஆகிய அனைவருக்கும் 108 போர்வைகள் சாற்றும் வைபவம் சிறப்பாக நடைபெற்றது.

ஒவ்வொரு திவ்ய தேசத்தையும் குறிக்கும் வகையில் 108 போர்வைகள் சாற்றப்படுவது குறிப்பிடத்தக்கது. இதனை முன்னிட்டுச் சிறப்புப் பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றன.

108 போர்வை சாற்றுதல்
108 போர்வை சாற்றுதல்

அதிகாலையில் கைசிக புராணம் விரிவாக வாசிக்கப்பட்டது. கார்த்திகை மாதத்தில் சுக்லபட்சத்தில் வரும் கைசிக ஏகாதசி அன்று உப்பில்லாமல் விரதம் கடைப்பிடித்தால் 108 ஏகாதசிகள் கடைப்பிடித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

அதிகாலை வேளையிலேயே விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், சாத்தூர், அருப்புக்கோட்டை, திருநெல்வேலி, கோவில்பட்டி மற்றும் கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து இந்த சிறப்பு வைபவத்தைத் தரிசனம் செய்தனர்.

மகாருத்ர ஹோமம்: ஆயுளில் ஒருமுறையாவது செய்ய வேண்டியது ஏன்? 8 பரிகாரங்கள் சொல்கிறது சாஸ்திரம்!

மகாருத்ர ஹோமம்: மகாருத்ர ஹோமத்தை நடத்தினாலோ, அதில் கலந்து கொண்டு சங்கல்பித்தாலோ எல்லா காரியங்களும் தடையின்றி நடைபெறும். தரித்திரத்தில் இருப்பவர் கோடீஸ்வரனாக மாறுவர் என்றெல்லாம் சொல்லப்படுகிறது.முன்பதி... மேலும் பார்க்க

விருதுநகர்: வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜகோபுரம்; சோதனை ஓட்டம் வெற்றி!

196 அடி உயரம் உடைய ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரத்திற்கு ஈடு இணை மண்ணுலகத்தில் ஏதுமில்லை என்றும், விண்ணுலகத்தில் உள்ள மேருமலைக்கு ஒப்பானது என்றும் கம்பர் பாடியுள்ளார்.இத்தகைய பெருமையும் சிறப... மேலும் பார்க்க

நினைத்த காரியங்கள் வெற்றி பெற வரமளிப்பாள் காரப்பாக்கம் கங்கை அம்மன் திருவிளக்கு பூஜை; அனுமதி இலவசம்!

2025 டிசம்பர் 19-ம் தேதி வெள்ளிக்கிழமை சென்னை ஓ.எம்.ஆர் காரப்பாக்கம் கங்கை அம்மன் கோயிலில் மாலை 6 மணி அளவில் சக்தி விகடன் வழங்கும் விளக்கு பூஜை நடைபெற இருக்கிறது. இதில் நீங்களும் கலந்து கொள்ளலாம். அது... மேலும் பார்க்க

மகாருத்ர ஹோமம்: 2026 உங்களுக்கு அதிர்ஷ்ட ஆண்டாக அமையும்! ஆயுள் ஆரோக்கியம் ஐஸ்வர்யம் பெருகும் அதிசயம்

மகாருத்ர ஹோமம்: 2026 உங்களுக்கு அதிர்ஷ்ட ஆண்டாக அமையும்! ஆயுள் ஆரோக்கியம் ஐஸ்வர்யம் பெருகும் அதிசயம்! 2026 ஜனவரி 2-ம் தேதி மார்கழி ஆருத்ரா அபிஷேக நன்னாளில் கோவை ஆர்.எஸ்.புரம் ஸ்ரீஅண்டவாணர் திருக்கோயில... மேலும் பார்க்க

திருப்பூர்: மதநல்லிணக்கத்தைப் போற்றும் `தர்கா - கார்த்திகை தீப' வழிபாடு!

திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான பிரச்னை எழுந்துள்ள நிலையில், மதநல்லிணக்கத்தைப் போற்றும் வகையில், திருப்பூர் அருகே உள்ள ஒரு தர்காவில் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு நடைபெற்று வ... மேலும் பார்க்க

திருவண்ணாமலை: அதிகாலை ஏற்றிய பரணி தீபம்; மாலை மலை உச்சியில் மகாதீபம்!

திருக்கார்த்திகை தீபம் என்றாலே திருவண்ணாமலைதான் நம் நினைவுக்கு வரும். நினைத்தாலே முக்தி தரும் இந்த அற்புதமான தலத்தில் ஏற்றப்படும் பரணி தீபம் மற்றும் மகாதீபம் ஆகியவற்றைக் காண லட்சக்கணக்கில் பக்தர்கள் த... மேலும் பார்க்க