செய்திகள் :

ஹரியானா: பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியை சரமாரியாகக் குத்திக் கொலை; முகமூடி அணிந்தவரின் வெறிச்செயல்

post image

ஹரியானா மாநிலம் பரிதாபாத் அருகில் உள்ள சிக்ரோனா கிராமத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் சந்தியா(29) என்ற ஆசிரியைப் பணியாற்றி வந்தார். பள்ளிக்குச் சற்று தொலைவில்தான் போலீஸ் நிலையம் இருக்கிறது. ஆசிரியை சந்தியா இன்று காலை பள்ளியில் இருந்தார். அந்நேரம் முகமூடி அணிந்த நபர் ஒருவர் வாயில் வழியாக நடந்து சென்று சந்தியாவின் பெயரைக் கூறி கேட்டார்.

இது குறித்து சந்தியாவிற்கு தகவல் கொடுத்தவுடன் சந்தியா அந்த நபரைச் சந்திக்க பள்ளி கேட் அருகில் வந்தார். வெளியே வந்தவுடன் சந்தியாவிடம் முகமூடி அணிந்த நபர் அவரின் பெயரைக் கேட்டுள்ளார்.

சந்தியா பெயரைச் சொன்னவுடன் முகமூடி அணிந்திருந்த நபர் சந்தியாவைச் சரமாறியாக கத்தியால் குத்த ஆரம்பித்தார். இதில் சந்தியா ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். ஆசிரியைச் சத்தம் கேட்டு பள்ளி நிர்வாகி ஓடி வந்தார். ஆனால் அவரையும் கத்தியைக் காட்டி மிரட்டி அருகில் வரவிடாமல் செய்துவிட்டார்.

பின்னர் மீண்டும் தரையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த சந்தியாவிடம் சென்று அவரை வயிறு மற்றும் முகத்தில் கத்தியால் மீண்டும் குத்தினார்.

30 விநாடியில் 35 முறை குத்தினார். பின்னர் அந்த நபர் பைக்கில் தப்பிச்சென்றுவிட்டார்.

சம்பவ இடத்தில் சந்தியா பரிதாபமாக உயிரிழந்தார். இக்காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அதில் முகமூடி அணிந்த நபர் பள்ளிக்குள் நுழைந்து லாபியில் காத்திருப்பதைக் காட்டுகிறது. அவர் ஆசிரியரைக் கண்டவுடன், அவர் ஆசிரியையை வெளியே செல்லும்படி சமிக்ஞை செய்கிறார்.

அதனைத்தொடர்ந்து சந்தியாவின் கழுத்தைப் பிடித்து வெளியே இழுத்து கத்தியால் குத்துவது அதில் பதிவாகி இருந்தது. கத்தியால் குத்திய நபரின் பெயர் அமித் என்று தெரிய வந்தது. அவரை போலீஸார் உடனே கைது செய்தனர்.

அமித் மீது சந்தியா மானபங்க புகார் கொடுத்திருந்தார். அப்படி இருந்தும் சந்தியாவிடம் பேச அமித் முயற்சி செய்தார். ஆனால் சந்தியா அதனைக் கண்டுகொள்ளவில்லை. இதனால் அடிக்கடி சந்தியாவைப் பின்தொடர்வதை அமித் வழக்கமாகக் கொண்டிருந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளார். பள்ளி வளாகத்திற்குள் நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

`இங்கதான் இருப்பா' - சிறுமியை பாலியல் கொடுமை செய்து கொன்றுவிட்டு உறவினர்களுடன் சேர்ந்து தேடிய இளைஞர்

மகாராஷ்டிரா மாநிலம், புனே அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கும் 9 வயது சிறுமி நான்காம் வகுப்பு படித்து வந்தாள். அவளது பெற்றோர் விவசாய வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில், உடல் நிலை சரியில்லாமல் சிறுமி பள்ளிக... மேலும் பார்க்க

தூத்துக்குடி: திருமணம் மீறிய உறவு; பெண்ணை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்றவர் கைது

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள சால்நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவரது மனைவி குருவலட்சுமி. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். அதே பகுதி... மேலும் பார்க்க

'எனக்கு ​ஐபோன், உனக்கு பைக்' தாத்தாவை கொன்று நகையை திருட காதலனுக்கு கொட்டேஷன் கொடுத்த 13 வயது பேத்தி

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் கருவாற்றா பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் சிவன்குட்டி (65). அம்பலப்புழாவைச் சேர்ந்த சிவன்குட்டி, குடும்பத்துடன் கொல்லம் பரவூரில் வசித்து வந்தார். மகளின் கணவர் ப... மேலும் பார்க்க

மதுரை: பெட்ரோல் பங்க் ஊழியரிடம் கத்தியைக் காட்டி ரூ. 35 ஆயிரம் பறிப்பு; வைரல் வீடியோவின் பின்னணி

மதுரை - மேலக்கால் பிரதான சாலையில் அமைந்துள்ள பெட்ரோல் பங்கில், நேற்று இரவு மதுரை பெத்தானியாபுரத்தைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் இரவு நேரப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.அப்போது, இருசக்கர வாகனத்தி... மேலும் பார்க்க

திருச்சி: ரீல்ஸ் மோகம்; கோயில் சுவற்றின்மீது பெட்ரோல் பாட்டிலில் தீ வைத்து வீசிய இருவர் கைது!

திருச்சி, பாலக்கரை, காஜாபேட்டை மெயின் ரோட்டில் கிருஷ்ணன் கோயில் உள்ளது. அந்த கோயில் சுவற்றில் இரவு நேரத்தில் பெட்ரோல் பாட்டிலில் தீ வைத்து அதை கோயிலின் சுவரில் மர்ம நபர்கள் வீசி உள்ளனர். இதனால், அந்த ... மேலும் பார்க்க

ஸ்கூட்டரில் சென்ற பெண்; துரத்திச் சென்று செயின் பறிக்க முயன்ற தவெக நிர்வாகி? - போலீஸ் தீவிர விசாரணை

கரூர் - கோவை சாலையில் உள்ள என்.எஸ்.கே நகர் பகுதியைச் சேர்ந்த மகுடபதியின் மனைவி பிரியா. இவர், தனது பெற்றோரை சந்திப்பதற்காக எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஈரோடு மாவட்டம், கொடுமுடி நோக்கி சென்றுள்ளார். அப்போது, ... மேலும் பார்க்க