செய்திகள் :

`ஹார்முஸ் அமெரிக்காவின் பிராந்தியமா?' - ட்ரம்ப் புதிய அதிரடி பேச்சு

post image

இதுவரை ஹார்முஸ் நீர்ச்சந்தியை அமெரிக்காவின் பிராந்தியமாக மாற்றப் போகிறேன் என்றுதான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறி வந்தார்.

ஆனால், தற்போது அமெரிக்காவின் பிராந்தியமாகவே ஹார்முஸ் நீர்ச்சந்தி ஆகிவிட்டது என்று பேசியிருக்கிறார்.

நேற்று (ஆகஸ்ட் 21) அமெரிக்காவில் நடந்த நிகழ்வு ஒன்றில், “ஈரான் அணு ஆயுதத்தைப் பெற நாம் அனுமதிக்கக் கூடாது.

ஈரான் அணு ஆயுதம் ஏந்துவதை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. மீறினால் மிக மோசமான விளைவுகளை நீங்கள் சந்திக்க நேரிடும்.

ஹார்முஸ் நீர்ச்சந்தி
ஹார்முஸ் நீர்ச்சந்தி

அமெரிக்கா களமிறங்கி அவர்களைத் தடுத்து நிறுத்தினோம். அவர்கள் இனி ஒருபோதும் அணு ஆயுதத்தைப் பெறவே முடியாது.

ஈரான் ஒப்பந்தம் செய்துகொள்ள மிகவும் ஆர்வமாக இருக்கிறது. தெஹ்ரானுடன் ஒப்பந்தம் செய்துகொள்வதில் வாஷிங்டன் (அமெரிக்கா) எந்த அவசரமும் காட்டவில்லை.

அவர்கள் எப்படியாவது ஒப்பந்தம் செய்துகொள்ளத் துடிக்கிறார்கள், ஆனால் நமக்கு [ஒப்பந்தம்] வேண்டுமா என்பதே நமக்குத் தெரியவில்லை.

ஏனென்றால், ஹார்முஸ் நீர்ச்சந்தியை இப்போது நான் அமெரிக்காவின் சொந்தப் பகுதியாகவே பார்க்கிறேன்... அது அமெரிக்காவின் பிராந்தியம்" என்று பேசியுள்ளார்.

"உலக நாடுகள் அமெரிக்காவின் தடைகளை பின்பற்றுவது, அவர்களுக்கு அடிபணிவதற்கு சமம்!" - ஈரான்

ஈரானுக்கு எதிராக ‘பொருளாதார D-Day’-வை அறிவித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.இதன் கீழ், ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது அமெரிக்கா பொருளாதார நடவடிக்கைகளை எடுக்கும்.அமெரிக்காவின் இந்த அறிவ... மேலும் பார்க்க

’திமுக எம்.எல்.ஏ-க்கள் கார் வாங்க மறுத்ததற்கு இதுதான் காரணம்.!’ – செங்கோட்டையன் சொன்ன விளக்கம்

கோவை விமான நிலையத்தில் வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “சட்டமன்றத்தில் ஒவ்வொருவரும் கற்றுக் கொள்ள வேண்டியது ஒன்றே ஒன்றுதான். பேரவை தலைவர், த... மேலும் பார்க்க

புதுச்சேரி: `இனி ஹெல்மெட் அணிவது கட்டாயம்!' - காவல்துறை தலைமை அதிரடி உத்தரவு

புதுச்சேரியில் கடந்த 15 ஆண்டுகளாக இருசக்கர வாகன விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கு நிகராக உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 2017-ம் ஆ... மேலும் பார்க்க

FIR பதிவு செய்ய 8 மணி நேர போராட்டம்: ‘நீதிக்கான பிரேக்’ எங்கிருந்து போடப்பட்டது? - ராகுல் காந்தி

நீட் வினாத்தாள் கசிவை எதிர்த்து டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் கிட்டத்தட்ட ஒரு மாதக்காலம் போராட்டம் நடத்தியது அனைவரும் அறிந்ததே.ஜூலை 20-ம் தேதி, போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி சென்ற... மேலும் பார்க்க