செய்திகள் :

‘10 ரூபாய் பாலாஜி ரூ.14,950 கோடி சம்பாதித்துள்ளார்’ – அண்ணாமலை குற்றச்சாட்டு

post image

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அம்மன் அர்சுணனை ஆதரித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை புலியகுளம் பகுதியில், பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, “எளிய மனிதர் அம்மன் அர்சுணன். எங்கே சென்றாலும் நடந்தே சென்று மக்களை சந்திக்கிறார். குறைந்தபட்சம் 50,000 வாக்கு வித்தியாசத்தில் அம்மன் அர்சுணன் வெற்றி பெறுவார். 10 ரூபாய் பாலாஜி அவருடைய தகுதி என்ன? ஜெயிலில் இருந்தது தான் அவர் தகுதி. அவர் கொடுத்த கொலுசில் வெள்ளி இல்லை. இங்கு வந்தது இரண்டாவது சாதனை. 5 கட்சி மாறி இருப்பது மூன்றாவது சாதனை.

தமிழகத்தில் திமுக ஆட்சி வேண்டாம் என மக்கள் முடிவு செய்து விட்டார்கள். தேஜ கூட்டணி ஆட்சிக்கு வரும். கோவை தெற்கு செந்தில் பாலாஜி வீழ்ச்சி ஆரம்பித்து, சேப்பாக்கம் வரை செல்ல போகிறது. கரூர் திமுகவில் இருந்த 18 சுயேட்சை வேட்பாளர்களை பூத்திற்காகவும், சண்டை போடுவதற்கும், கலவரம் செய்வதற்காகவும் கொண்டு வந்துள்ளார்கள். அனைவருக்கும் ஒரே நோட்டரி போட்டுள்ளார்கள். இவர்களை கோவைக்குள் விடக்கூடாது.

அண்ணாமலை
அண்ணாமலை

முதல்வர் ஸ்டாலினிடம் இரண்டு பெட்டி கொடுத்தால் அன்பு தம்பி, 5 பெட்டி கொடுத்தால் ஆற்றல் மிகுந்தவர் என்பார், அதிக பெட்டி கொடுத்ததால் தளபதி என்றே செந்தில்பாலாஜிக்கு பெயர் வைத்துள்ளார் முதல்வர். அதிமுகவை அடிமை கட்சி என கூறுகிறார் ஸ்டாலின். அதிக முறை ஆட்சிக்கு வந்த கட்சி அதிமுக, திமுக இல்லை. காங்கிரஸ் முன்பு திமுக பெட்டி பாம்பாக உள்ளது. ஆ.ராசா பேசினால் வழக்கு வரும், அதனால் அவரை பேசாமல் வைத்துள்ளார்கள். நம் கூட்டணியில் குடும்ப ஆட்சி கிடையாது. அண்ணாதுரை நான்கு வளர்ப்பு குழந்தைகளை அரசியலுக்கு அனுப்பி வைத்தார். அவர்கள் எங்கே? அவர்கள் எல்லாம் அரசு வேலை செய்து வருகிறார்கள். அண்ணாதுரைக்கு நேர் எதிர்க்கட்சி என்றால் அது திமுக தான்.

செந்தில்பாலாஜி கரூருக்கு கூட போக முடியாது. அறிவாலயத்திற்கு தான் செல்ல முடியும். திமுக செய்த சாதனைகளை பற்றி ஸ்டாலின் பேச மாட்டார். தேர்தல் அறிக்கையை தான் கூறுவார். ஸ்டாலின் கணக்கு ஆசிரியர் நல்ல ஆசிரியர், ஆனால் மாணவன் தான் மக்கு. கனிமொழி தூங்கும் போது வந்த கனவை எல்லாம் மைக்கில் பேசுவார். கனிமொழி உங்கள் பெயரில் சிலிண்டர் கணக்கு உள்ளதா? நீங்கள் சிலிண்டர் வாங்கி உள்ளீர்களா? சிலிண்டர் தட்டுப்பாடு என்று பொய் சொல்ல கூடிய ஒரே ஒருவர் கனிமொழி தான். பொய்யை பேசுவதையே ஒரே கொள்கையாக வைத்துள்ளார்கள். 10 ரூபாய் பாலாஜி என ஏன் செல்கிறோம் என்றால், டாஸ்மாக் வருமானம் மட்டும் 5 ஆண்டுகளில் ரூ. 2 லட்சத்து 24 ஆயிரம் கோடி ஆகும். இதில் பாட்டிலுக்கு ரூ. 10 ரூபாய் மூலம் ரூ.14,950 கோடியை சம்பாதித்துள்ளார். அம்மன் அர்சுணனை சட்டமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். எடப்பாடியார் முதல்வர் ஆக வேண்டும்” என்றார்.

இறந்த குழந்தைகளும்; எரிந்த Bag-குகளும்: பாகிஸ்தானிற்கு காலிபாஃபுடன் கிளம்பிய 'இறந்த' தோழர்கள்

ஈரான் போர் தொடங்கிய முதல் நாள் - பிப்ரவரி 28, 2026.அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானின் உச்ச தலைவர் அயோதுல்லா அலி கமேனியை மட்டும் கொன்று உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தவில்லை.ஈரானின் மினாப்பில் உள்ள பெண்... மேலும் பார்க்க

MQ-4C Triton : ஹோர்முஸ் வளைகுடாவில் அமெரிக்காவின் ரூ.1,600 கோடி மதிப்பிலான உளவு டிரோன் திடீர் மாயம்!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு இரண்டு நாட்களே ஆன நிலையில், உலகின் மிக முக்கிய கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் வளைகுடா பகுதியில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. அமெரிக்... மேலும் பார்க்க

மார்ச் 23, ஏப்ரல் 7 தேதிகளில் கச்சா‌ எண்ணெய் விலை சரிவு: ட்ரம்ப் அறிவிப்பு முன்னரே கசிந்ததா?

கடந்த மார்ச் 23 மற்றும் ஏப்ரல் 7 தேதிகளில், கச்சா எண்ணெய் விலையின் 'திடீர்' வீழ்ச்சி குறித்து சந்தேகம் எழுப்பி உள்ளனர் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள்.இந்த இரண்டு தேதிகளில், மார்ச் 23-ம் தேதி அமெரிக... மேலும் பார்க்க

`` `அறிவாலயத்தின் அடி செங்கல் வரை உருவுவேன்' என்றார்; போய் வேலையை...’ - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட கோட்டைமேடு பகுதி, பெரிய கடைவீதி பகுதிகளில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி நேற்று மாலை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் ... மேலும் பார்க்க

”50 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் விசிட்டிங் கார்டு கூட அடிச்சது கிடையாது” - வைத்திலிங்கம்

ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் வைத்திலிங்கம். இவர் புகைப்படத்துடன் கூடிய ஆயிரக்கணக்கான விசிட்டிங் கார்டுகள் மற்றும் மாடல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஆகியவற்றை சென்னையில் தேர்தல் அல... மேலும் பார்க்க

"ஈரான் தலைவர்கள் உயிரோடு இருப்பதே இந்தப் பேச்சுவார்த்தைக்காக தான்" - ட்ரம்ப்

இன்று இஸ்லாமாபாத்தில் அமைதி பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தலைமையிலான குழு மற்றும் ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் தலைமையிலான குழு சந்தித்து கொள்கின்றனர்.இந்... மேலும் பார்க்க