செய்திகள் :

RR Vs RCB: "வைபவ் பவர்பிளேயில் விளையாடிய விதம் தான்.!"- தோல்வி குறித்து கேப்டன் ரஜத் பட்டிதார்

post image

ஐபிஎல் தொடரில் நேற்று (ஏப்ரல் 10) கவுகாத்தி மைதானத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் மோதின.

இந்தத் தொடரில் இதுவரை தோல்வியே சந்திக்காத இரு அணிகள் மோதியதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

RR vs RCB
RR vs RCB

இப்போட்டியில் ராஜஸ்தான் அணி வீரர் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டத்தால், பெங்களூரு அணி தனது முதல் தோல்வியைப் பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

​இந்நிலையில் தோல்வி குறித்து பேசிய ஆர்.சி.பி கேப்டன் ரஜத் பட்டிதார், "ராஜஸ்தான் பேட்டர்கள், குறிப்பாக வைபவ் பவர்பிளேயில் விளையாடிய விதம் ஆட்டத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்று நினைக்கிறேன்.

​கடந்த போட்டிகளில் நாங்கள் செயல்பட்ட விதம் சிறப்பாக இருந்தது. ஆனால் இந்தப் போட்டியில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய உள்ளன.

சுயாஷை பந்துவீச கொண்டு வர முடியாதது பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றுதான் நினைக்கிறேன். ஏனெனில் வெங்கடேஷ் ஐயர், ஷெப்பர்ட் மற்றும் க்ருணால் பாண்டியா ஆகியோர் அணியில் இருந்தனர்.

வைபவ் சூர்யவன்ஷி
வைபவ் சூர்யவன்ஷி

இந்த மூன்று பந்துவீச்சாளர்களைக் கொண்டே அந்த ஓவர்களை நாங்கள் சமாளித்திருக்க வேண்டும்.​ஐபிஎல் போன்ற ஒரு போட்டி நிறைந்த கிரிக்கெட் தொடரில் விளையாடும்போது தவறுகள் நடக்கத்தான் செய்யும்.

ஆனால் அந்தத் தவறுகளில் இருந்து நாம் எப்படிக் கற்றுக்கொள்கிறோம் என்பதுதான் முக்கியம்" என்று பேசியிருக்கிறார்.

RR vs RCB: "களத்தில் நான் பந்துவீச்சாளர்களை கவனிக்க மாட்டேன், மாறாக.!"- சூர்யவன்ஷி சொல்லும் சீக்ரெட்

ஐபிஎல் தொடரின் நேற்றைய (ஏப்ரல்.10) ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இதில் ராஜஸ்தான் அணி பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றி... மேலும் பார்க்க

RR Vs RCB: `கேப்டனாக நான் எடுத்த தவறான முடிவுகளால் 20 ரன்கள் கூடிவிட்டது!' - கேப்டன் ரியான் பராக்

ஐபிஎல் 2026 தொடரின் நேற்றைய (ஏப்ரல் 10)16-வது லீக் போட்டியில், பெங்களூரு அணி நிர்ணயித்த 202 ரன்கள் என்ற இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 18 ஓவர்களிலேயே எட்டி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்குப் பிறகு ப... மேலும் பார்க்க

Mukul Choudhary: 'கடன், ஏழ்மை, தந்தையின் சிறைவாசம்'- வலிகளைக் கடந்து வென்ற IPL நாயகன் முகுல் சௌத்ரி!

ஏப்ரல் 8, 2026 அன்று கொல்கத்தாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2026 தொடரின் விறுவிறுப்பான போட்டிகளில் ஒன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) vs கொல்கத்தா நைட் ... மேலும் பார்க்க

IPL: கிரிக்கெட் உலகை மிரளவைத்த அந்த `27' பந்துகள்; முகுல் சௌத்ரி எனும் 'ஒன் மேன் ஆர்மி' - யார் இவர்?

கிரிக்கெட் என்பது இந்தியாவில் வெறும் விளையாட்டு மட்டுமல்ல, அது கோடிக்கணக்கான இளைஞர்களின் உணர்ச்சி. ஒரு சிறிய தெருவில் ரப்பர் பந்துடன் தொடங்கும் கனவு, ஒருநாள் ஸ்டேடியத்தின் மின்னொளியில் நனவாகும் போதுதா... மேலும் பார்க்க

KKR vs LSG: `எனது குடும்பம் பொருளாதார நிதி நெருக்கடியில் இருந்தது, அதனால்.!' - முகுல் சௌத்ரி எமோஷனல்

ஐபிஎல் தொடரின் நேற்றைய ( ஏப்ரல். 09) ஆட்டத்தில் லக்னோ அணி, கொல்கத்தாவை மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இதில் சிறப்பாக விளையாடிய முகுல் சௌத்ரி ஆட்டநாயகன் விருதை வென்றிருக்கிறார... மேலும் பார்க்க

KKR vs LSG: "எனது பேட்டிங் மூலம் பதில் சொல்லவே நான் விரும்புகிறேன்"- விமர்சனங்கள் குறித்து பண்ட்

ஐபிஎல் தொடரின் நேற்றைய ( ஏப்ரல். 09) போட்டியில் லக்னோ அணியும், கொல்கத்தா அணியும் மோதின. இதில் லக்னோ அணி, கொல்கத்தாவை மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றிருக்கிறது. இந்நிலையில் அணியின... மேலும் பார்க்க